என் மலர்
கிருஷ்ணகிரி
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் குளத்து புதூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 60) விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாராபுரம்- கள்ளிமந்தயம் பைபாஸ் ரோட்டில் திருமலை கவுண்டன் வலசு அம்மன் கோவில் வளைவு அருகே சென்ற போது தண்டபாணி மீது பின்னால் வந்த கார் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரைச் சேர்ந்த கார் டிரைவர் செந்தில் குமார் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
தாராபுரம்- ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அதிவேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், பொருளாளர் மனோகரன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று காலையில் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்று மதியம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கழக செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலம், தென் மண்டல கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி சசிகலா சுற்றுப்பயணம் செய்யும் மாவட்டங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படியுங்கள்... 13,14,15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 56). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்து ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். இதனால் மாரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
தீபாவளி அன்று அவரது வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். கதவை திறந்து பார்த்த போது மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். உடனே பொதுமக்கள் கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முருகன் (வயது 25). தொழிலாளி. கடந்த 31-ந் தேதி முருகன் தனது மோட்டார் சைக்கிளில் டி.என். புதுக்குடி- அய்யாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சமுத்திர மலை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோர்ட்டு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது32), அஜ்மல் (24), கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த பசுபதி (26), மகாராஜ கடை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (58), ஓசூர் சானசத்திரம் பகுதியைச் சேர்ந்த பயாஸ் (32), முகமது முபாரக் (23), ஓசூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (21), சாரதி (19) உள்பட 17 பேர் மீது நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






