என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retired army soldier dead"

    கடையநல்லூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 56). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்து ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த மாவட்டமான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். இதனால் மாரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    தீபாவளி அன்று அவரது வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். கதவை திறந்து பார்த்த போது மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். உடனே பொதுமக்கள் கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×