என் மலர்
செய்திகள்

விபத்து பலி
வேப்பனப்பள்ளி அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
வேப்பனப்பள்ளி அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
கர்நாடக மாநிலத்தில் இருந்து கொய்யாப்பழம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேப்பனப்பள்ளி வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன்குமார் (வயது23) என்பவர் ஓட்டி வந்தார். உடன் பிரசாந்த் (22) என்பவர் வந்தார். வேப்பனப்பள்ளி அருகே உள்ள போடூர் வனப்பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரசாந்த் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று பிரசாந்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோகன்குமார் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






