search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    புளியங்குடி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    புளியங்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    தென்காசி:

    புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முருகன் (வயது 25). தொழிலாளி. கடந்த 31-ந் தேதி முருகன் தனது மோட்டார் சைக்கிளில் டி.என். புதுக்குடி- அய்யாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சமுத்திர மலை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×