என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • சமூக விரோத செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலை யத்தில் உள்ள பொது நாட்குறிப்புகள், பாரா மாற்றும் புத்தகம், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்கு களின் கோப்பு உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை புலன் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். பிடி வாரணட் நிலுவையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பொது மக்கள் அளிக்கும் புகாருக்கு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலைய சரகத் திற்கு உட்பட்ட பகுதியில் மது, கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றி லும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திரு மணங்கள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதே போல் சாலை பாது காப்பு விதிமுறைகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட வற்றை மேற் கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவு றுத்தி னார். முன்ன தாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம், நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப் பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கலியனின் மனைவி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுக்கா ஈஸ்வரகண்ட நல்லூரை சேர்ந்தவர் கலி யன் (வயது 65). இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவரது மனைவி இறந்தார். தனியாக வசித்து வந்த இவரை கவனிக்க யாரும் இல்லை, இவரது பிள்ளை களும் இவருக்கு உணவு வழங்குவது, மருந்து, மாத்திரைகள் வாங்கித் தருவது போன்றவைகளை சரிவர செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட மன உலைச்சலில் விரக்தி யடைந்த கலியன், வீட்டி லிருந்த எலிபேஸ்டை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த கலியனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டும், கலியன் பரிதாப மாக உயிரிழந்தார். பெற்ற பிள்ளைகள் கவனிக்கா ததால் விரக்தியடைந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • சௌமியாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி (வயது 43) இவருடைய கணவர் செந்தில்குமார் இவர்களுக்கு மகன் மற்றும் சௌமியா என்ற மகள் உள்ளார். சௌமியா ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் செல்வராணி, மற்றும் இவரது மகனும் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுள்ளனர். வீட்டில் சௌமியா மட்டும் தனியாக இருந்துள்ளார் பின்னர் வேலையை முடித்துவிட்டு செல்வராணியும் அவரது மகனும் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது சௌமியா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கம் மற்றும் தெரிந்த இடங்களிலும் தேடியும் எங்கேயும் கிடைக்காததால் நேற்று கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் செல்வராணி தனது மகள் சௌமியாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கீழ்குப்பம் போலீசார் வழக்கை பதிவு செய்து மாயமான சௌமியாவை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.
    • தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழி சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.

    இந்நிலையில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதில் வருகின்ற 28-ந்தேதி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. அதனால் அதற்கு முன்பாகவே தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும் 28-ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேசிய நெடுஞ்சாலையோ, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகள் பொறுப்பல்ல. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இவர்களது மருமகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (வயது 65). இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களது மருமகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தனர். அதே ஊரில் அரசு தொலைக்காட்சி வைக்க ஒதுக்கப்பட்ட அறையில் 6 பேரும் குடியேறி 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செல்வம் கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்கிறார்.
    • செல்வத்தின் மகன், மகள் உள்ளிட்ட 73 பேருக்கு அரசு வேலை வாங்கித் தராமல் சிவா காலங்கடத்தியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்கிறார். இவர் கடந்த அரசு பணிக்கு வருவதற்கு முன்பாக சென்னையை தலைமையிடமாக கொண்ட பி.எம்.எஸ். தொண்டு நிறுவனத்தில் பணி செய்தார். அங்கு எழுத்தராக பணியாற்றிய சென்னை தண்டையார்பேட்டை சிவா (40) என்பவருடன் செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டது. 

    கடந்த மார்ச் மாதம் செல்வத்தை தொடர்பு கொண்ட சிவா, தனக்கு அரசு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால், பணம் கொடுத்தால் வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வம், தனது மகள், மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு ரூ.13 லட்சத்தை செல்வத்திடம் கொடுத்தார். இது தவிர உறவினர்கள் நண்பர்கள் என 71 பேரிடம் ரூ.79 லட்சத்து 54 ஆயிரத்து 600-ஐ வசூலித்து சிவாவிடம் கொடுத்துள்ளார். அப்போது சென்னை பாடியநல்லூரை சேர்ந்த ரமேஷ் (19) சிவாவுடன் இருந்து பணத்தை பெற்றுள்ளார். 

    செல்வத்தின் மகன், மகள் உள்ளிட்ட 73 பேருக்கு அரசு வேலை வாங்கித் தராமல் சிவா காலங்கடத்தியுள்ளார். இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்ட போது, சிவா கூறிய பதில் செல்வத்திற்கு சந்தேகங்களை எழுப்பியது. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு சிவாவிடம் செல்வம் கேட்டுள்ளார். அவர் பணத்தையும் கொடுக்காமல், அரசு வேலையும் வாங்கித் தராமல், சரியான பதிலும் கூறாமல் செல்வத்தை அலைக்கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், அரசு வேலை வாங்கித் தருவதாக சிவா செய்த பண மோசடி குறித்து எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். 

    இது குறித்து வழக்கு பதிவு செய்த எலவனாசூர்கோட்டை போலீசார், வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றினர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு சிவா, ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியது உண்மை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோ கன்ராஜ் உத்தரவின்பேரில் பண மோசடியில் ஈடுபட்ட சிவா, ரமேஷ் ஆகிய 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது.
    • எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது. தடையாணையில் குறிப்பிட்டுள்ளபடி பாலி எதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடைகொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாளுவதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தற்போது நெய்யப்பட்ட பைகள் அல்லது ரபியன் பைகள் என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகள், விற்பனையாளர்களிடமும், கடைக்காரர்களிடமும் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி, முதலியவைகளை விநியோகிக்க உபயோகப்படுகின்றது. இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறிவிடுகிறது. இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்து கின்றன. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரிப்ப தோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயலாகும். 

    ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்று வதற்கு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடை யை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதனை தமிழக அரசு லியுறுத்துகிறது. எனவே உலகம் எதிர்கொ ள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்று வதற்கு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம் என உறுதிமொழி மேற்கொ ள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம். இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    • போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 57) என்பவர் அவரது காட்டுகொட்டாயில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். இதேபோன்று அ.பாண்டலம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் (30) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே 2 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏமப்பேர் விவசாயிகளிடம் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு இது நாள் வரை பணம் தரவில்லை. இருந்தபோதும் ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடந்தது வந்தது. இங்குள்ள இடங்களின் சந்தை மதிப்பு மற்றும் அரசின் மதிப்பு உயர்ந்தது. எனவே, உயர்த்தப்பட்ட மதிப்பிற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ஏமப்பேரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி - சேலம் ரவுண்டானவில் திரண்டனர். சந்தை மதிப்பிற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையேற்ற ஏமப்பேர் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • முனியன் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா தியாகை கிராமத்தைச் சேர்ந்தவர் பூசாரி முனியன் (வயது 43). வெளிநாட்டில் இருந்து திரும்பிய இவர் அனைத்து உறவினர் வீட்டுக்கும் சென்று விட்டு பின்னர், ஆசனூர் அருகே உள்ள வலசை என்ற கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புத்தமங்கலம் கோழி பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தனிப்பிரிவு தலைமை போலீஸ் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொதுமருத்துவ மனைக்குஅனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். 

    • போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெருக்கஞ்செடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(வயது44) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்து போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகளால் சங்கராபுரம் வட்டத்திலுள்ள அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், அருளம்பாடி, செளரியார்பாளையம், வடமாமந்தூர், கடுவனூர், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை, கூட்ரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், மற்றும் ஏந்தல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    ×