search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
    X

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

    • 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • சமூக விரோத செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலை யத்தில் உள்ள பொது நாட்குறிப்புகள், பாரா மாற்றும் புத்தகம், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்கு களின் கோப்பு உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை புலன் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். பிடி வாரணட் நிலுவையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பொது மக்கள் அளிக்கும் புகாருக்கு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலைய சரகத் திற்கு உட்பட்ட பகுதியில் மது, கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றி லும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திரு மணங்கள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதே போல் சாலை பாது காப்பு விதிமுறைகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட வற்றை மேற் கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவு றுத்தி னார். முன்ன தாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம், நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப் பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×