என் மலர்
காஞ்சிபுரம்
கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் சேவியர் (வயது 65). இவர், நங்கநல்லூர் 4-வது மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேவியர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு (30) மற்றும் அவருடைய நண்பர் பாலாஜி (24) இருவரும் நேற்று கொளத்தூரில் நடக்கும் திருமண வீட்டில் சமையல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிரபு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பாலாஜி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாய் விமானத்தில் வந்து கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் (22), அஜ்மல் கான் (24), சையத் முகமது (34), சுல்தான் சலாவுதீன் (27) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 75 விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள், 14 மடிக்கணினிகள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 5 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மேலும் இது தொடர்பாக 5 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாய் விமானத்தில் வந்து கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் (22), அஜ்மல் கான் (24), சையத் முகமது (34), சுல்தான் சலாவுதீன் (27) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 75 விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள், 14 மடிக்கணினிகள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 5 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மேலும் இது தொடர்பாக 5 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் ஓரிக்கை சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 34). இவரது மனைவி தீபா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், 1 வயதில் ஆண் குழந்தையும், 1 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ஆனந்தராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் மனைவி தீபாவிடம் மாமனார் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வரக்கூறி ஆனந்த்ராஜ் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் மனமுடைந்த தீபா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் படுக்கை அறையில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனால் பலத்த தீக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தீபாவை அடித்து துன்புறுத்தியதும், மனைவி தீபாவை தற்கொலைக்கு தூண்டியதும் உறுதியானதையடுத்து, ஆனந்த்ராஜை கைது செய்து அதைதொடர்ந்து அவரை காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் இளம்பெண் சாவு தொடர்பாக காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. வித்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது 4 பெண்கள் உள்பட 17 பேர் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.
பின்னர் அனைவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 17 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் (28) என்பவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 18 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 4 பெண்கள் உள்பட 18 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் தைப்பூச விழாவுக்கு குழுவினருடன் வந்த இளம்பெண் மாமல்லபுரம் சென்று அங்குள்ள கடலில் குளித்தபோது அதில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக மேல்மருத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 10 நாட்களாக நடந்து வரும் தைப்பூச விழாவுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.
அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.
அவர்களில் சிலர் அங்குள்ள கடலில் குளித்தனர். அப்போது குளித்து கொண்டிருந்த பொள்ளாச்சி நகரத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி (வயது 23) என்ற பெண்ணை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது.
தகவலறிந்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் குளித்து கொண்டிருந்த மற்ற பக்தர்களை எச்சரித்து கரைக்கு வரும்படி அறிவுறுத்தினர். துயர சம்பவம் அவர்கள் கண் முன் நடந்தும் போலீசாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பலர் அலட்சிய போக்குடன் கடலில் குளித்து கொண்டிருந்தனர். போலீசார் கரைக்கு திரும்பி வாருங்கள் என்று கடுமையாக எச்சரித்த பிறகு பலர் கடலில் குளிப்பதை நிறுத்திவிட்டு கரைக்கு திரும்பினர்.
உமாமகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் ஆன்மிக யாத்திரை பயணத்தை ரத்து செய்துவிட்டு பொள்ளாச்சி பக்தர்கள் அனைவரும் சோகத்துடன் சொந்த ஊர் திரும்பினர்.
சென்னையில் நேற்று நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் 57 விமானங்கள் தாமதமாக சென்று வந்தன. 7 விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
ஆலந்தூர்:
சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பல பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.
மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் ஓடுபாதையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
அதன்படி சென்னையில் இருந்து ஆமதாபாத், மதுரை, மும்பை, புனே, ஹூப்ளி, புவனேஸ்வர், டெல்லி, பெங்களூரு, திருச்சி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோவை, கவுகாத்தி, தூத்துக்குடி, சீரடி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 38 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
மேலும் பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 19 விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 30 நிமிட தாமதத்துக்கு பிறகு அவை தரை இறங்கின.
அதேபோல் பெங்களூரு, மும்பை, டெல்லி, துபாய், அந்தமான் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கும், டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் ஐதராபாத்துக்கும் திருப்பிவிடப்பட்டன.
காலை 9 மணிக்கு பிறகு பனி மூட்டம் குறைந்ததும் சென்னையில் விமான சேவை சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பல பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.
மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் ஓடுபாதையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
அதன்படி சென்னையில் இருந்து ஆமதாபாத், மதுரை, மும்பை, புனே, ஹூப்ளி, புவனேஸ்வர், டெல்லி, பெங்களூரு, திருச்சி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோவை, கவுகாத்தி, தூத்துக்குடி, சீரடி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 38 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
மேலும் பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 19 விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 30 நிமிட தாமதத்துக்கு பிறகு அவை தரை இறங்கின.
அதேபோல் பெங்களூரு, மும்பை, டெல்லி, துபாய், அந்தமான் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கும், டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் ஐதராபாத்துக்கும் திருப்பிவிடப்பட்டன.
காலை 9 மணிக்கு பிறகு பனி மூட்டம் குறைந்ததும் சென்னையில் விமான சேவை சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). இவர் நேற்று அதிகாலை உத்திரமேரூர் செல்வதாக கூறி விட்டு சென்றார். நேற்று காலை உத்திரமேரூர்-காஞ்சீபுரம் சாலையில் தட்டான்குளம் அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
இது குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
படப்பை அருகே விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வெங்காடு ஊராட்சியில் உள்ள மேட்டு கருணாகரசேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). இவருடைய மனைவி மோனிஷா (19) நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே உள்ள குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் வாந்தி எடுத்துள்ளார்.
என்ன என்று கணவர் கேட்டதற்கு வயிற்று வலியின் காரணமாக பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மோனிஷாவை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் மோனிஷாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைதானார். விசாரணையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தது தெரிந்தது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி ராஜா அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மேரிலதா (வயது 41). இவர், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அவர், தனது மகனுக்கு வேலையும், தனக்கு வங்கியில் கடன் வாங்கி தரவும் ஆன்லைனில் வந்த விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு வேலை தருவதாக கூறி என்னிடம் இருந்து சிறுக, சிறுக ரூ.24 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தரவில்லை. இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமலா ரத்தினம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பவம் தொடர்பாக கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (35) என்ற சாப்ட்வேர் என்ஜினீயரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
சாப்ட்வேர் என்ஜினீயரான சந்தோஷ்குமார், கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் வீட்டில் இருந்தே பணி செய்து வருகிறார்.. அப்போது ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகி விட்டார். தனது சம்பள பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.
அதன்பிறகு சூதாட்டத்துக்கு பணம் அதிகம் தேவைப்பட்டதால் தனது செல்போன் நம்பரை ஆன்லைனில் பதிவு செய்து வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தார். அதை பார்த்து இவரிடம் மேரிலதா தொடர்பு கொண்டபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கினார்.
அதன்பிறகு சந்தோஷ்குமார் இறந்துவிட்டதாகவும், தான் அவரது நண்பர் கார்த்திக் பேசுவதாகவும் கூறி மேரி லதாவிடம் மேலும் பணத்தை கறந்தார். அதன் பிறகு கார்த்திக் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், தான் வேலை மற்றும் லோன் வாங்கி தருவதாகவும் வேறொருவர் போல் பேசி மேரிலதாவிடம் மொத்தம் ரூ.24 லட்சம் வரை வாங்கினார்.
இவ்வாறு மோசடியில் வாங்கிய பணம் அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார். இதனால் பணத்தேவைக்காக வீடுகளுக்கு அதிகாலையில் பால் பாக்கெட் போடுவது, பகுதி நேரமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது உள்ளிட்ட வேலைகளையும் செய்து வந்தார். அதில் வந்த வருமானத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்தார்.
இதுவரை சுமார் ரூ.35 லட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் சந்தோஷ்குமார் இழந்து இருப்பதும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான சந்தோஷ் குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம்:
சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சி தலைவர்கள் தற்போதே தங்களின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதில் முக்கியமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த தொகுதியில் குலதெய்வ வழிபாடு செய்தபின்னர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில் ,
நான் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். நான் எம்எல்ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று தெரிவித்துள்ளார். முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.மக்களின் குறைகளை கேட்கும் ஸ்டாலின் ஏன் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்று கேள்வி எழுப்பினார்.
இலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை திரும்பினர்.
ஆலந்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்களான ஜெபர்சன், ஜோசப், அப்துல் கலாம், அசோக்குமார், முருகன், அந்தோணி உள்பட 29 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் உள்ளிட்ட 33 பேர் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், சூசை மைக்கேல், முனியசாமி உள்பட 7 மீனவர்களை கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி இலங்கை கடற்படையினர் பிடித்தனர்.
அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்களை மீட்டனர்.
அதைத்தொடர்ந்து, 1 மாதத்துக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்ட 40 மீனவர்கள் நேற்று சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை தமிழக மீனவளத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ஜூலியஸ் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதிகளை அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர்.
அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் கான்ஸ்டன் நிருபர்களிடம் கூறும்போது,
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து அடித்து துன்புறுத்தியதாகவும், அவர்களிடம் பிடிபட்ட சுமார் 250 படகுகளை மத்திய, மாநில அரசுகள் தலையீட்டு மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தங்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்களான ஜெபர்சன், ஜோசப், அப்துல் கலாம், அசோக்குமார், முருகன், அந்தோணி உள்பட 29 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் உள்ளிட்ட 33 பேர் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், சூசை மைக்கேல், முனியசாமி உள்பட 7 மீனவர்களை கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி இலங்கை கடற்படையினர் பிடித்தனர்.
அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்களை மீட்டனர்.
அதைத்தொடர்ந்து, 1 மாதத்துக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்ட 40 மீனவர்கள் நேற்று சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை தமிழக மீனவளத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ஜூலியஸ் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதிகளை அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர்.
அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் கான்ஸ்டன் நிருபர்களிடம் கூறும்போது,
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து அடித்து துன்புறுத்தியதாகவும், அவர்களிடம் பிடிபட்ட சுமார் 250 படகுகளை மத்திய, மாநில அரசுகள் தலையீட்டு மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தங்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விமானத்தில் 4 மாத குழந்தை இடைவிடாமல் அழுததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:
டெல்லியை சோ்ந்த லட்சுமிதேவி (வயது 30) என்ற பெண் தனது கணவர் மற்றும் 4 மாத பெண் குழந்தையுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் டெல்லி செல்ல நேற்று சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தார்.
அப்போது லட்சுமிதேவியின் 4 மாத குழந்தை திடீரென இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்தும்படி அவரிடம் விமான பணிப்பெண்கள் கூறினர். லட்சுமிதேவி எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து கைக்குழந்தையுடன் அந்த பெண் விமானத்தில் இருந்து கீழே இறங்கி விடுவதாக தெரிவித்தார். அதன்படி அந்த பெண் விமானத்தில் இருந்து குழந்தையுடன் இறங்கி விட்டார். அவரது கணவா் ராகுல் மட்டும் அதே விமானத்தில் டெல்லிக்கு சென்றார். இதே விமானத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றதும் குறிப்பிடத்தக்கது. 106 பயணிகளுடன் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.15 மணிக்கு இந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அந்த பெண், கைக்குழந்தையுடன் விமான நிலையத்தின் உள்பகுதியில் தங்க வைக்கப்பட்டார். சென்னையில் இருந்து டெல்லி சென்ற மற்றொரு விமானத்தில் கைக்குழந்தையுடன் அந்த பெண் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டார்.
டெல்லியை சோ்ந்த லட்சுமிதேவி (வயது 30) என்ற பெண் தனது கணவர் மற்றும் 4 மாத பெண் குழந்தையுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் டெல்லி செல்ல நேற்று சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தார்.
அப்போது லட்சுமிதேவியின் 4 மாத குழந்தை திடீரென இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்தும்படி அவரிடம் விமான பணிப்பெண்கள் கூறினர். லட்சுமிதேவி எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து கைக்குழந்தையுடன் அந்த பெண் விமானத்தில் இருந்து கீழே இறங்கி விடுவதாக தெரிவித்தார். அதன்படி அந்த பெண் விமானத்தில் இருந்து குழந்தையுடன் இறங்கி விட்டார். அவரது கணவா் ராகுல் மட்டும் அதே விமானத்தில் டெல்லிக்கு சென்றார். இதே விமானத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றதும் குறிப்பிடத்தக்கது. 106 பயணிகளுடன் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.15 மணிக்கு இந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அந்த பெண், கைக்குழந்தையுடன் விமான நிலையத்தின் உள்பகுதியில் தங்க வைக்கப்பட்டார். சென்னையில் இருந்து டெல்லி சென்ற மற்றொரு விமானத்தில் கைக்குழந்தையுடன் அந்த பெண் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டார்.






