search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், மடிக்கணினி, வெளிநாட்டு சிகரெட்டுகள்.
    X
    சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், மடிக்கணினி, வெளிநாட்டு சிகரெட்டுகள்.

    சென்னை விமான நிலையத்தில் 3½ கிலோ தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாய் விமானத்தில் வந்து கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் (22), அஜ்மல் கான் (24), சையத் முகமது (34), சுல்தான் சலாவுதீன் (27) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 75 விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள், 14 மடிக்கணினிகள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 5 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 5 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மேலும் இது தொடர்பாக 5 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×