என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
உங்கள் தொண்டு நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் தங்களால் இயன்ற உதவிகள் மற்றும் சேவைகளின் விவரங்களை https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணைய தளத்தில் பதிவு செய்து இந்த பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். கூடுதல் தகவல்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
உங்கள் தொண்டு நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் தங்களால் இயன்ற உதவிகள் மற்றும் சேவைகளின் விவரங்களை https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணைய தளத்தில் பதிவு செய்து இந்த பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். கூடுதல் தகவல்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்குவார்சத்திரத்தில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்து அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். சோதனையில் பையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீஷ்குமார் (வயது 28) என்பதும், சுங்குவார்சத்திரம் பகுதியில் தொழிற்சாலையில் வேலை செய்யும் வட மாநில வாலிபர்களுக்கு கஞ்சா விற்பதற்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள் தடையின்றி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள் தடையின்றி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்ய நகர்ப்புறங்களுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்/ தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் இதுகுறித்த சந்தேகங்களுக்கு பஞ்சு பேட்டையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த விவசாயிகள் உதவி மையம் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை 044- 27222545 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
சோழிங்கநல்லூர்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
சோழிங்கநல்லூர், குமரன் நகர், செம்மஞ்சேரி சென்னை எல்லை, சோதனைச் சாவடி போன்ற இடங்களில் போலீசார் வாகன சோதனையில் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
காஞ்சீபுரம் பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் விற்பனை செய்ய நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் போன்றவை விற்பனை செய்ய 88 நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெரு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப காய்கறிகள் கிடைக்கவில்லை என பெருநகராட்சி நிர்வாகத்திற்கு் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் 88 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகைபொருள்கள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 40 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகை் பொருள்கள் விற்பனை செய்ய பெரு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் வைத்து நடமாடும் வாகனங்களுக்கு காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:-
விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி செல்ல, நடமாடும் வாகன வியாபாரிகள் அதிகாலை 5 மணிக்கே வந்து காய்கறிகள், பழங்களை வாங்கி சென்று பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் பெரு நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள விலைப்பட்டியலை தவிர கூடுதல் விலைக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யக்கூடாது என அவர் வியாபாரி களை கேட்டுக்கொண்டார்.
காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் போன்றவை விற்பனை செய்ய 88 நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெரு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப காய்கறிகள் கிடைக்கவில்லை என பெருநகராட்சி நிர்வாகத்திற்கு் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் 88 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகைபொருள்கள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 40 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகை் பொருள்கள் விற்பனை செய்ய பெரு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் வைத்து நடமாடும் வாகனங்களுக்கு காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:-
விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி செல்ல, நடமாடும் வாகன வியாபாரிகள் அதிகாலை 5 மணிக்கே வந்து காய்கறிகள், பழங்களை வாங்கி சென்று பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் பெரு நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள விலைப்பட்டியலை தவிர கூடுதல் விலைக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யக்கூடாது என அவர் வியாபாரி களை கேட்டுக்கொண்டார்.
கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன.

18 முதல் 45 வயதினருக்கு செலுத்த 3.14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 1.64 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆக்சிஜன் தட்டுப்பாடு கடந்த காலங்களில் இருந்தது உண்மை. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.
கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிறகு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குன்றத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி, மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகள் மாளவிகா (வயது 20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலுள்ள அறைக்குள் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்துஉள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மாளவிகா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாளவிகாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாளவிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
இறந்துபோன மாளவிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், மாளவிகா உடன் பயிலும் மாணவர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகவும் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உறவினர் மகனை திருமணம் செய்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மாளவிகா தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மேலும் இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து குவிந்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் சுற்றி திரிந்ததால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் தாமதம் ஏற்பட்டது.
எனவே பொதுமுடக்கத்தை மேலும் கடுமையாக்க முடிவு செய்து இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வில்லா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்களுக்கு தேலையான பொருட்களை வாங்க வசதியாக நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று இரவு வரை அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதித்தது. அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நகரில் காந்தி சாலை, காமராஜர்சாலை, மூங்கில் மண்டபம், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. முக்கியமாக காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். காய்கறிகளின் விற்பனையும் 2 முதல் 3 மடங்கு அளவுக்கு அதிகரித்து இருந்தது.
இதே போன்று சூழ்நிலையை பயன்படுத்தி காய்கறி வியாபாரிகள் விலையை அதிகரித்திருப்பது கண்டனத்துக்குரியது என பொதுமக்கள் புலம்பினார்கள்.
காய்கறிகள் வரத்து குறைவு காரணமாகத்தான் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ சுகாதார ஆய்வாளர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள் சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆஸ்பத்திரி சேர்க்கை, உடல் நலம் சார்ந்த சந்தேகம், படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை பெற 044 27237107, 27237207, 27237784, 27237785, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-425-8978, 9345440662 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த புள்ளலூர் காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு தரைகிணற்றின் மேல் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சுமதி காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பஸ்நிலையத்தில் தொடங்கப்பட்ட காய்கறி சந்தையில் பொதுமக்கள் யாரும் காய்கறிகள் வாங்க அனுமதிக்காமல் பல்வேறு பகுதிகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் மட்டும் காய்கறிகள் வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக செயல்பட்டுவந்த காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறிச்சந்தை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூட மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அத்தியாவசிய பொருளான காய்கறிகளை தட்டுப்பாடின்றி விற்பனை செய்வதற்காக காஞ்சீபும் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறிச்சந்தை அமைத்து கொடுக்க காஞ்சீபுரம் பெருநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி காஞ்சீபுரம் பெருநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு காய்கறி வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து நேற்று முதல் ரெயில்வே ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த ராஜாஜி காய்கறிச்சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் செயல்பட தொடங்கியது.
பஸ்நிலையத்தில் தொடங்கப்பட்ட காய்கறி சந்தையில் பொதுமக்கள் யாரும் காய்கறிகள் வாங்க அனுமதிக்காமல் பல்வேறு பகுதிகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் மட்டும் காய்கறிகள் வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் செயல்பட ஆரம்பித்த காய்கறி சந்தையை காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் காய்கறி வாங்க அனுமதிக்கப்படாததால் காய்கறி சந்தை வெறிச்சோடிய நிலையிலேயே காணப்பட்டது.
மொத்த வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும் காய்கறிகள் விற்பனையாகாததால் மனவதனை அடைந்தனர்.
காஞ்சீபுரம் சரகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி ஊர் சுற்றக்கூடியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யதனர்.
காஞ்சீபுரம்:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடந்த 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி ஊர் சுற்றக்கூடியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அந்த வகையில் கடந்த 15-ந்தேதி முதல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 618 வாகனங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 742 வாகனங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 654 வாகனங்களும் என காஞ்சீபுரம் சரகத்தில் 2,014 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2,245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






