என் மலர்
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் மருத்துவம்பாட்டி கிராமத்தை் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அஞ்சலை (வயது 65). உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
சில நாட்கள் இவர் மாத்திரைகளை சரிவர சாப்பிடாததால் அவரது மகன் குமரவேல் மாத்திரை சாப்பிடும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அஞ்சலை அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அஞ்சலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பெண் பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்போரூர்:
திருப்போரூர் கண்ணகப்பட்டு படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி பாரதி (வயது 53). அ.தி.மு.க. மகளிர் அணி ஒன்றிய அவைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இவருக்கு கடந்த மாதம் 20-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து காய்ச்சல் சரியாகாததால் கடந்த 25-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே பாரதிக்கு கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 31-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் அவர் நேற்று காலை இறந்தார். இதையடுத்து அவரது உடலை பெருங்குடி மின் மயானத்தில் தகனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கினையொட்டி தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 5 ஆயிரம் வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வில்லா முழுஊரடங்கு வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அத்தியாசிய தேவைகள் இன்றி வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியே சுற்றிதிரியும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், காஞ்சிபுரம் நகரில் முக்கிய சந்திப்புகளான பூக்கடைச்சத்திரம், மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா தலைமையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மேற்பார்வையில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
அப்போது தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் நேற்று வரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்ததாக 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரத்து 850 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
திருவண்ணாமலை மாவட்டம் புதபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி மலர் (34). கணவன், மனைவி இருவரும் மொபட்டில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் என்னும் இடத்தில் செல்லும்போது வேகமாக வந்த லாரி முருகன் ஓட்டிவந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் முருகன், மலர் இருவரும் தூக்கி விசப்பட்டனர். முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவி மலரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 23). இவர் சுங்குவார் சத்திரம் அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மது பழக்கதுக்கு அடிமையான அவர் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆனந்தனை அந்த வீட்டிலேயே பாட்டியுடன் விட்டுவிட்டு சுங்குவார் சத்திரம் பகுதியில் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். தனது குடி பழக்கத்தால் குடும்பத்தினர் தன்னை பிரிந்து சென்று விட்டதாக மனஉளைச்சளில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆனந்தன் தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் சாக போவதாக பதிவிட்டுள்ளார். நேற்று காலை ஆனந்தனின் உறவினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு மூடியிருந்தது. நீண்ட நேரமாக கதவு தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார். ஆனந்தன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலையொட்டி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலையொட்டி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் ஆங்காங்கே சாராய விற்பனையும் நடந்து வந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காஞ்சீபுரத்தை அடுத்த சாலவாக்கம், பெருநகர், மணிமங்கலம், சோமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 250 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சீபுரம் சிறு காவேரிப்பாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 21), ஜெயபால் (23), செந்தில்குமார் (35), கோனேரிக்குப்பத்தை சேர்ந்த பத்மா (36), அஞ்சலை (40) உள்பட 23 பேரை கைது செய்தனர்.
மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தெரிவித்துள்ளார்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலையொட்டி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் ஆங்காங்கே சாராய விற்பனையும் நடந்து வந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காஞ்சீபுரத்தை அடுத்த சாலவாக்கம், பெருநகர், மணிமங்கலம், சோமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 250 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சீபுரம் சிறு காவேரிப்பாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 21), ஜெயபால் (23), செந்தில்குமார் (35), கோனேரிக்குப்பத்தை சேர்ந்த பத்மா (36), அஞ்சலை (40) உள்பட 23 பேரை கைது செய்தனர்.
மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தெரிவித்துள்ளார்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
உங்கள் தொண்டு நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் தங்களால் இயன்ற உதவிகள் மற்றும் சேவைகளின் விவரங்களை https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணைய தளத்தில் பதிவு செய்து இந்த பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். கூடுதல் தகவல்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
உங்கள் தொண்டு நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் தங்களால் இயன்ற உதவிகள் மற்றும் சேவைகளின் விவரங்களை https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணைய தளத்தில் பதிவு செய்து இந்த பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். கூடுதல் தகவல்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்குவார்சத்திரத்தில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்து அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். சோதனையில் பையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீஷ்குமார் (வயது 28) என்பதும், சுங்குவார்சத்திரம் பகுதியில் தொழிற்சாலையில் வேலை செய்யும் வட மாநில வாலிபர்களுக்கு கஞ்சா விற்பதற்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள் தடையின்றி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள் தடையின்றி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்ய நகர்ப்புறங்களுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்/ தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் இதுகுறித்த சந்தேகங்களுக்கு பஞ்சு பேட்டையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த விவசாயிகள் உதவி மையம் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை 044- 27222545 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
சோழிங்கநல்லூர்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
சோழிங்கநல்லூர், குமரன் நகர், செம்மஞ்சேரி சென்னை எல்லை, சோதனைச் சாவடி போன்ற இடங்களில் போலீசார் வாகன சோதனையில் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
காஞ்சீபுரம் பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் விற்பனை செய்ய நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் போன்றவை விற்பனை செய்ய 88 நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெரு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப காய்கறிகள் கிடைக்கவில்லை என பெருநகராட்சி நிர்வாகத்திற்கு் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் 88 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகைபொருள்கள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 40 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகை் பொருள்கள் விற்பனை செய்ய பெரு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் வைத்து நடமாடும் வாகனங்களுக்கு காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:-
விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி செல்ல, நடமாடும் வாகன வியாபாரிகள் அதிகாலை 5 மணிக்கே வந்து காய்கறிகள், பழங்களை வாங்கி சென்று பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் பெரு நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள விலைப்பட்டியலை தவிர கூடுதல் விலைக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யக்கூடாது என அவர் வியாபாரி களை கேட்டுக்கொண்டார்.
காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் போன்றவை விற்பனை செய்ய 88 நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெரு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப காய்கறிகள் கிடைக்கவில்லை என பெருநகராட்சி நிர்வாகத்திற்கு் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் 88 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகைபொருள்கள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 40 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகை் பொருள்கள் விற்பனை செய்ய பெரு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் வைத்து நடமாடும் வாகனங்களுக்கு காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:-
விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி செல்ல, நடமாடும் வாகன வியாபாரிகள் அதிகாலை 5 மணிக்கே வந்து காய்கறிகள், பழங்களை வாங்கி சென்று பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் பெரு நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள விலைப்பட்டியலை தவிர கூடுதல் விலைக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யக்கூடாது என அவர் வியாபாரி களை கேட்டுக்கொண்டார்.
கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன.

18 முதல் 45 வயதினருக்கு செலுத்த 3.14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 1.64 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆக்சிஜன் தட்டுப்பாடு கடந்த காலங்களில் இருந்தது உண்மை. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.
கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிறகு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






