என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் முதல் வாரத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னயில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய உள்நாட்டு சேவைகள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 350 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் போதிய பயணிகள் இல்லாததால் வெளி மாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் ஒரு நாளைக்கு 100-க்கும் குறைவான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாமல் விமானங்கள் செல்வதால் மத்திய அரசு அறிவித்திருக்கும் 15 சதவீத டிக்கெட் கட்டண உயர்வை இதுவரை எந்த விமான நிறுவனமும் அமல்படுத்தவில்லை. தற்போது முழு ஊரடங்கு முடிந்து ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் முதல் வாரத்தில் பயணிகள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து டிக்கெட் விலை கட்டணத்தை பயணிகள் வருகையை பொருத்து விமான நிறுவனங்கள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னயில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய உள்நாட்டு சேவைகள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 350 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் போதிய பயணிகள் இல்லாததால் வெளி மாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் ஒரு நாளைக்கு 100-க்கும் குறைவான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதில் உள்நாட்டு விமான பயணிகள் 25 ஆயிரம், வெளிநாட்டு விமான பயணிகள் ஆயிரம் பேர் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாமல் விமானங்கள் செல்வதால் மத்திய அரசு அறிவித்திருக்கும் 15 சதவீத டிக்கெட் கட்டண உயர்வை இதுவரை எந்த விமான நிறுவனமும் அமல்படுத்தவில்லை. தற்போது முழு ஊரடங்கு முடிந்து ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் முதல் வாரத்தில் பயணிகள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து டிக்கெட் விலை கட்டணத்தை பயணிகள் வருகையை பொருத்து விமான நிறுவனங்கள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






