என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்4 Jun 2021 11:28 AM GMT (Updated: 4 Jun 2021 11:28 AM GMT)
உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் மருத்துவம்பாட்டி கிராமத்தை் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அஞ்சலை (வயது 65). உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
சில நாட்கள் இவர் மாத்திரைகளை சரிவர சாப்பிடாததால் அவரது மகன் குமரவேல் மாத்திரை சாப்பிடும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அஞ்சலை அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அஞ்சலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X