என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
காஞ்சீபுரம் சரகத்தில் ஊரடங்கு விதிமுறைகள் மீறல் - 2,014 வாகனங்கள் பறிமுதல்
காஞ்சீபுரம் சரகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி ஊர் சுற்றக்கூடியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யதனர்.
காஞ்சீபுரம்:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடந்த 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி ஊர் சுற்றக்கூடியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அந்த வகையில் கடந்த 15-ந்தேதி முதல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 618 வாகனங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 742 வாகனங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 654 வாகனங்களும் என காஞ்சீபுரம் சரகத்தில் 2,014 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2,245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story






