என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொலைபேசி
    X
    தொலைபேசி

    கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவைக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ சுகாதார ஆய்வாளர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள் சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆஸ்பத்திரி சேர்க்கை, உடல் நலம் சார்ந்த சந்தேகம், படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை பெற 044 27237107, 27237207, 27237784, 27237785, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-425-8978, 9345440662 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×