என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுங்குவார்சத்திரத்தில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
Byமாலை மலர்30 May 2021 11:53 AM GMT (Updated: 30 May 2021 11:53 AM GMT)
சுங்குவார்சத்திரத்தில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்து அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். சோதனையில் பையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீஷ்குமார் (வயது 28) என்பதும், சுங்குவார்சத்திரம் பகுதியில் தொழிற்சாலையில் வேலை செய்யும் வட மாநில வாலிபர்களுக்கு கஞ்சா விற்பதற்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X