என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் அருகே தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் ஆர்த்தியின் உத்தரவுபடி சேட்டுவை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர் எம்.சத்திய பிரியா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளையும், அவர்களது கூட்டாளிகளையும் கண்காணிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் அவர்கள் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போலீசார் தினமும் ரோந்து செல்லும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற திறம்பட செயல்பட கூடிய போலீசார் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு ரோந்து வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர் எம்.சத்திய பிரியா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    மனைவி விபசாரத்தில் ஈடுபட்டதால் அவரை கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் அடுத்த காவேரிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியா(வயது22). இவர் கடந்த 23-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே முட்புதரில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பிரியாவின் கணவரான நவீன்குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கள்ளக்காதலியான கல்பனாவுடன் சேர்ந்து மனைவி பிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை ஸ்ரீபெரும்புதூர் அருகே வீசி சென்றதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து நவீன்குமார், அவரின் கள்ளக்காதலி கல்பனா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீசில் நவீன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

    எனக்கும் பிரியாவுக்கும் பிறந்த குழந்தை இறந்து விட்டது. இதன் பின்னர் பிரியா தடம்மாறி சென்றார். அவர் விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டார். இது எனக்கு பிடிக்கவில்லை.

    இதற்கிடையே எனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த கல்பனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.

    எனினும் பிரியா விபச்சார தொழிலில் ஈடுபடுவது பிடிக்காததால் அவளை பலமுறை கண்டித்தேன். ஆனால் அவள் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டார்.

    மேலும் என்னையும், கல்பனாவையும், இணைத்து பலரிடம் அவதூறாக பேசி வந்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக கல்பனா மற்றும் சகோதரனை போலீசில் பிரியா பிடித்துக் கொடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் பிரியவை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். இதுபற்றி கல்பனாவிடம் கூறியபோது அவரும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து சம்பவத்தன்று பிரியாவிடம் பேச வேண்டும் என்று அழைத்தேன். அவளும் வர சம்மதித்தாள். அவளை சின்ன காஞ்சிபுரம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றோம். அங்கு பிரியாவுக்கு மது குடிக்க கொடுத்தோம்.

    மதுகுடித்த போதையில் பிரியா இருந்தார். உடனே நானும், கல்பனாவும் சேர்ந்து பிரியாவின் கழுத்தை இறுக்கியும், வாயில் துணியை திணித்தும் கொலை செய்தோம். அவள் இறந்து விட்டதை உறுதி செய்த பின்னர் போலீசில் சிக்காமல் இருக்க உடலை அங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்று வீச திட்டமிட்டோம்.

    நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் பிரியாவின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றோம். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே முட்புதரில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டோம். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    கொலை நடந்த இடத்தில் இருந்து பிரியாவின் உடல் வீசப்பட்ட தெரேசாபுரம் பகுதி சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரம் உடலை போலீசுக்கு தெரியாமல் நவீனும் கல்பனாவும் கொண்டு வந்து வீசி உள்ளனர்.

    கொலைக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று கைதான 2 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆலந்தூர்:

    ராமநாதபுரத்தை சோந்த மீனவர்கள் பாலு, ரங்கதுரை, தரங்கம்பாடியை சேர்ந்த பாலுமணி, காரைக்காலைச் சேர்ந்த திலீபன் ஆகிய 4 பேர் கடந்த மார்ச் மாதம் இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையால் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் பாலு உள்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

    நங்கநல்லூரில் இளம்பெண்ணை தாக்கி தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    மும்பையை சேர்ந்தவர் பூஜாநட்வர் (27) ஐ.டி ஊழியரான இவர் நங்கநல்லூர் பி.வி நகர், 13-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழியுடன் தங்கி உள்ளார்.

    இதே குடியிருப்பில் வசித்து வரும் பவன் என்பவர் பூஜாநட்வரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பவனை கைது செய்தனர். அவர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    காஞ்சிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வேதாசலம் நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விஜய். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி பிளஸ்-2 படித்து வந்தார். விஜய் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த விஜய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விமானம் சென்னை வந்தவுடன் விமான நிறுவனம் சார்பாக விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    குவைத்தில் இருந்து நேற்று இரவு 164 பயணிகளுடன் சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த சேவியர் என்பவர் திடீரென தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட் எடுத்து புகை பிடிக்கத் தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக விமான பணிப்பெண்கள் வந்து அவரை கண்டித்தனர். மேலும் விமானம் சென்னை வந்தவுடன் விமான நிறுவனம் சார்பாக விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சேவியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

     

    அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் பூமாலை (வயது52). இவர் சென்னை அசோக் நகர் 10-வது அவின்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு குடியிருப்பவர்கள் பூமாலையை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பூமாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் குடியிருப்பு வாசல் முன்பு மதுபோதையில் தூங்கிய 4 வாலிபர்களை பூமாலை எழுப்பி அங்கிருந்து செல்லுமாறு கூறியதும் இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் அருகில் கிடந்த கம்பால் பூமாலையை சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்கிற சபாபதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 18வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கானா கார்த்திக், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது என்று விமான பயணிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்தன.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் பயணத்தின் போது நடக்கும் குறைகளை விமான நிலையத்தில் புகார் தெரிவிப்பது வழக்கம்.

    சென்னை விமான நிலையத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது என்று விமான பயணிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து, இதை எப்படி சரி செய்யலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

    குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையை சுமார் 20 சதவீதம் வரை குறைக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து வமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஒரு பயணிக்கு ஒரு பொருளின் விலை நியாயமாக தோன்றும்போது அதுவே மற்றொரு பயணிக்கு அதிகமாக தெரிகிறது. அதுமட்டுமின்றி கொரோனா கட்டுப்பாடு காரணமாக விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் விற்பனை இல்லாமல் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர். எனினும் பயணிகளின் நலத்தை விரும்பியே உணவு மற்றும் குளிர்பானங்ளின் விலையை முடிந்த அளவுக்கு குறைக்க முயற்சி செய்து வருகிறோம். பாக்கெட் செய்த பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கு விற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் விரைவில் புதிய ஒருங்கிணைந்த முனையங்கள் வர இருக்கிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வணிகத்திற்கு என்றே தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் உட்கார்ந்து சாப்பிடும் படி உணவகங்கள் அமைக்கப்படும்.

    அது மட்டுமின்றி அவர்களுக்கு வேண்டிய பொருட்களும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இது இணைப்பு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அவர்கள் விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். அவர்களுக்கு இது உபயோகமாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்களிடம் வருமுன் காப்போம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களை கண்டறிந்து மேல் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் மற்றும் பரிசோதனை மையங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:-

    பொதுமக்களிடம் வருமுன் காப்போம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களை கண்டறிந்து மேல் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களின் மூலம் 18,101 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 7842 நபர்களுக்கு ரத்த பரிசோதனை, 1386 நபர்களுக்கு இருதய பரிசோதனையும், 754 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சையின் போது, மேல் சிகிச்சை செய்திட வேண்டுமென்றால் முதலமைச்சருடைய விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    தற்போது செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் எலும்பு முறிவு, கை, கால், மூட்டு வலி, தசை தளர்வு போன்ற நோய்களுக்கு வீட்டிற்கே சென்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 82,229 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதுமட்டு மல்லாமல் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து ஏற்படின், அவர்களை மருத்துவ மனையில் சேர்ப்பவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் சரஸ்வதி மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) பிரியாராஜ் கலந்து கொண்டனர்.

    சாலை வசதி, மயானபாதை வசதி, கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலைகளும் அமைக்கப்படும் என செங்காடு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    செங்காடு கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க முன்மாதிரி கிராம விருது, உத்தமர் காந்தி விருது, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட கூடிய சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு விருது என்ற பல்வேறு விருதுகளை அறிவித்து கொண்டிருக்கிறோம்.

    மாநில அளவிலும் ஒன்றிய அளவிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களை திறம்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் சேர்ப்பது, அது உள்ளாட்சி அமைப்புகளால் தான் முடியும்.

    எனவே இன்றைய கிராம சபை கூட்டத்தில் உங்களிடம் கேள்விகளை கேட்ட போது அத்தனை பேரும் எழுந்து சொன்னீர்கள். இது இந்த கிராமத்தில் மட்டுமல்ல ஏறக்குறைய 10 வருட காலமாக ஒரு ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியில் முறையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. நான் முறையாக தேர்தலை நடத்தி உள்ளோம். ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறோம்.

    100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக்க கோரிக்கை வைத்தீர்கள். அதை மிக வேகமாக நிறைவேற்றித்தர காத்திருக்கிறோம். இதேபோல் இங்குள்ள மதுரை வீரன் குளம் புனரமைக்கப்படும். சாலை வசதி, மயானபாதை வசதி, கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலைகளும் அமைக்கப்படும்.

    இந்த பணிகள் நடந்து முடிந்ததா? என்று அடுத்தமுறை நேரடியாக வந்து பார்ப்பேன். இங்கு சொன்ன பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்கோடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பங்கேற்றார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாயத்து ராஜ் தினம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதன் முதலாக கலந்துகொண்டார்.

    மாநிலங்களில் நடந்த பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராமசபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

    அதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்பதற்கு ஏற்ப கிராம சபையில் முக்கிய அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்கோடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பங்கேற்றார்.

    இந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவே அவர் ஸ்ரீபெரும்புதூர் வந்து தங்கினார். இன்று காலை 10.50 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கோடு கிராமத்திற்கு சென்றார்.

    அங்கு அவரை கிராம மக்கள் உற்சாகத்துடன் கைகூப்பி வரவேற்றனர். பின்னர் அவர்களுடன் அமர்ந்து கிராமசபை கூட்டத்தை நடத்தினார். அப்போது அந்த கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

    குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு என்னென்ன தேவை என்பது குறித்து பேசினார்கள்.

    அவர்கள் சொன்ன குறைகள் மற்றும் கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக கேட்டுக்கொண்டார். அப்போது அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்து பதில் கூறினார். அதன்பிறகு இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது கிராம முன்னேற்றத்துக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் அதிகாரிகள் முன்னின்று விரிவாக செய்திருந்தனர்.

    ×