search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை திரும்பினர்

    சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆலந்தூர்:

    ராமநாதபுரத்தை சோந்த மீனவர்கள் பாலு, ரங்கதுரை, தரங்கம்பாடியை சேர்ந்த பாலுமணி, காரைக்காலைச் சேர்ந்த திலீபன் ஆகிய 4 பேர் கடந்த மார்ச் மாதம் இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையால் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் பாலு உள்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×