search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நங்கநல்லூரில் இளம்பெண்ணை தாக்கியவர் கைது

    நங்கநல்லூரில் இளம்பெண்ணை தாக்கி தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    மும்பையை சேர்ந்தவர் பூஜாநட்வர் (27) ஐ.டி ஊழியரான இவர் நங்கநல்லூர் பி.வி நகர், 13-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழியுடன் தங்கி உள்ளார்.

    இதே குடியிருப்பில் வசித்து வரும் பவன் என்பவர் பூஜாநட்வரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பவனை கைது செய்தனர். அவர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×