என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று 3 மாதத்துக்கு பின்பு நேற்று முன்தினம் 103 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு 131 ஆக அதிகரித்து உள்ளது. 

    நாளுக்கு நாள் தொற்று வேகமெடுத்து வருவதால் சுகாதார துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

    இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 12 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 491 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதுவரை 711 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    நம்பியூர் அருகே காதல் தோல்வியால் கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (24). புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று விஜய் மதியம் ஒரு மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை வேலுச்சாமி தேடிச் சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் அருகே மயக்கமடைந்த நிலையில் இருந்தார். மேலும் அவர் மீது சாணிபவுடர் வாசனை அடித்தது. உடனடியாக அவரிடம் விசாரித்த போது நான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், தங்கை திருமணம் ஆகாமல் உள்ளதால் எனது காதல் நிறைவேறாது என நினைத்து நான் சாணி பவுடர் குடித்தும், பேனா கத்தியால் கழுத்து மற்றும் இடது மணிக்கட்டு பகுதிகளில் அறுத்து கொண்டதாகவும் கூறினார்.

    உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து விஜயின் தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனையடுத்து விஜயின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியும், தனியாக அறை எடுத்து தங்கியும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியும், தனியாக அறை எடுத்து தங்கியும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    குறிப்பாக பெருந்துறை சிப்காட் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செங்கல் சூளை, டையிங், பிளீச்சிங் தொழிற்சாலை, பேக்கரி கடைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சொந்தமாக எலக்ட்ரானிக் கடைகளும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இரவு நேர ஊரடங்கும், இன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் மீண்டும் முழு நேர ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்திலும், கொரோனா தினசரி பாதிப்பு காரணமாகவும் நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊர் செல்வதற்காக பெட்டி, படுக்கைகளுடன் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    இரவு முழுவதும் விடிய, விடிய பனி, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ரெயில் நிலையத்திலேயே காத்திருந்து தங்களின் சொந்த மாநிலங்களுக்கு கிளம்பிச் சென்றனர்.

    இன்று 2-வது நாளாகவும் காலையில் ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பஸ்கள் இயக்கப்படாததால் அவசர தேவைக்காக வெளியூர் செல்பவர்களும் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்திருந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மாணவியிடம் நெருங்கி பழகி கர்ப்பமாக்கிய ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    ஈரோடு:

    மாணவியிடம் நெருங்கி பழகி கர்ப்பமாக்கிய ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவர் அந்தியூரில் டுடோரியல் சென்டர் நடத்தி வந்தார். 

    அப்போது தனித்தேர்வர் பயிற்சிக்கு வந்த மாணவி ஒருவரிடம் லோகநாதன் நெருங்கி பழகினார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். 

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பவானி மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் 4-ந்தேதி லோகநாதன் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

    இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

    இதனையடுத்து லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய போலீஸ்சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார். 

    இதை ஏற்று கலெக்டர்,  லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் கோவையில் சிறையில் உள்ள லோகநாதனிடம் வழங்கினர்.
    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அறிவுறுத்தியுள்ளார்
    ஈரோடு:

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அறிவுறுத்ததியுள்ளார்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிக அளவு பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு வருகிறது. 

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. நாளைய தினம் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதேசமயம் அத்தியா வசிய பொருட்களான பால், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முழுஊரடங்கையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். 

    பன்னீர்செல்வம்பார்க், பஸ்நிலையம், ஜிஎச்ரவுண்டானா போன்ற பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முழுஊரடங்கு பிறப்பித்துள்ளது. மக்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

    மாவட்டம் முழுவதும் நாளை 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

    தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. 

    அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் முழு சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
    ஈரோடு,

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் தமிழக அரசின் கால்நடை தீவன தொழிற்சாலை செயல்படுகிறது. 

    இங்கு மாடுகளுக்கு தேவையான தீவனங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் தயார் செய்யப்பட்டு பேக்கிங் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

    இந்த தீவன தொழிற்சாலையில் இன்று காலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தீவன தொழிற்சாலை முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    இவர்களுடன் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஆவின் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர். 

    முன்னதாக சித்தோட்டில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை அமைச்சர்கள் நாசர், முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக புகழ்பெற்ற அந்தியூர் மாட்டு சந்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் புகழ்பெற்ற வாரச் சந்தை ஞாயிறு, திங்கள் ஆகிய 2 நாட்கள் நடைபெறும். இதில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறும். 

    இங்கு மாடுகளை வாங்குவதற்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், தர்மபுரி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் தமிழகஅரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது. 

    இதனைத்தொடர்ந்து அந்தியூரில் நாளை நடைபெற இருந்த  மாட்டுச்சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    திங்கட்கிழமை நடைபெறும் காய்கறி, மளிகை பொருட்கள் சந்தை வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வானில் பறந்து கொண்டு இருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே இறங்கியதால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்து பார்வையிட்டனர்.
    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பாரத். இவரது மனைவி ஷீலா. ஐ.டி. கம்பெனி ஊழியர்கள். இவர்கள் 2 பேரும் கேரள மாநிலம் கொச்சினில் ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்தனர்.

    இதற்காக பாரத், ஷீலா ஆகியோர் தனியார் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி புறப்பட்டனர். ஹெலிகாப்டரை கேப்டன்கள் ஜஸ்பால், அங்கித் சிங் ஆகியோர் இயக்கி வந்தனர்.

    இந்த ஹெலிகாப்டர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர்புதூர் என்ற பகுதியில் இன்று காலை 11.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டு இருந்தது.

    அப்போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் செல்ல முடியவில்லை. இதையடுத்து பைலட்கள் பத்திரமாக அத்தியூர்புதூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே தரை இறக்கினர்.

    வானில் பறந்து கொண்டு இருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே இறங்கியதால் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் ஹெலிகாப்டர் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் ஹெலிகாப்டரை ஓட்டி வந்த பைலட்கள் இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஹெலிகாப்டரை ஓட்டி வந்த பைலட்களிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் அவர்களை ஒரு இடத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். பனி மூட்டம் விலகியதும் மீண்டும் அவர்கள் புறப்பட்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    சரியான நேரத்தில் பைலட்டுகள் ஹெலி காப்டரை பத்திரமாக தரை இறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தால் ஆவின் பால் பண்ணை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பவானி:

    மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தால் ஆவின் பால் பண்ணை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை  ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்கிற கருப்பணன் (38). இவர் சித்தோடு ஆவின் பால்பண்ணையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார்.

    இவருக்கு வைதேகி என்ற பெண்ணுடன் கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகனும், 1 மகளும் உள்ளனர். 

    இந்நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு வைதேகி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

    இதனையடுத்து கருப்பணன் பலமுறை மனைவியிடம் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வைதேகி வீட்டிற்கு வராததால் மனவேதனையில் இருந்த கருப்பணன் வீட்டில் தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

    மேலும் பவானி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ஈரோட்டில் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்த 3 ஓட்டல்கள் மீதும், வாகனங்களில் சுற்றி திரிந்த 3 வாகன ஓட்டிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்த 3 ஓட்டல்கள் மீதும், வாகனங்களில் சுற்றி திரிந்த 3 வாகன ஓட்டிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த  கடந்த  6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 14 சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய வாகனங்களை தவிர்த்து, பிற வாகனங்களை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதேபோல் இரவு 10 மணிக்கு மேல்கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர் பகுதியில் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஊரடங்கினை மீறி செயல்பட்ட 3 ஓட்டல்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து ஊரடங்கினை மீறினால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

    இதேபோல், ஊரடங்கினை மீறி இரவு நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் சுற்றிதிரிந்ததாக 3 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் காய்கறி, மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் காய்கறி, மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துஉள்ளது.

    இந்நிலையில் பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. பஸ் போக்குவரத்தும் இருக்காது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் நாளை முழுவதுமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல் பெரியார்நகர், சம்பத்நகர், கோபி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் 5  இடங்களில் செயல்பட்டு வரும் உழவர்சந்தையும் நாளை முழுவதுமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று காலை வ.உ.சி. பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே தெரிந்தது. 

    இதேபோல் பெரியார்நகர், சம்பத்நகரில் உள்ள உழவர்சந்தையில்  மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முககவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்துக் காய்கறிகளும் வேகமாக விற்றுதீர்ந்தன. சில காய்கறிகள் விலையும் அதிகமாகஇருந்தது.

    இதேபோல் முக்கிய கடை வீதிகளிலும் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கொங்கலம்மன்கோவில்வீதியில் உள்ள மளிகை கடையில் மக்கள் கூட்டம் இன்று அதிகமாகவே இருந்தது. 

    கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி அந்தியூர் மொடக்குறிச்சி கொடுமுடி என மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதேபோல் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டிருந்து. 

    பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து மீன்களை வாங்கி சென்றனர். இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் நாளை டாஸ்மாக் கடைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இன்று டாஸ்மாக் கடையில் வழக்கத்தைவிட குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாளை டாஸ்மாக் கடை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சரக்குகள் கையிருப்பு அதிக அளவில் இருந்தது. குடிமகன்கள் தங்களுக்கு வேண்டிய மதுவகைகளை அள்ளிச் சென்றனர்.
    கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, பொங்கலுக்கு பின்னர் தான் முழு ஊரடங்கு விதித்தனர். பெருந்தொகைக்கான விற்பனை நடந்தது. ஆனால் இந்தாண்டு தற்போதே கட்டுப்பாடு விதித்ததால் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் 270 தினசரி கடைகள் உள்ளன. திங்கள் முதல் செவ்வாய் இரவு வரை 700-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகள், இதனை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த பல்வேறு கடைகள் இயங்குகின்றன.

    தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல வெளி மாநில மொத்த, சில்லறை விற்பனை வியாபாரிகள் இங்கு வந்து பெட்ஷீட், துண்டு, லுங்கி, வேட்டிகள், பனியன், நைட்டி, குழந்தைகளுக்கான ஆடை, விதவிதமான வீட்டு பயன்பாட்டு துணிகள் என ஏராளமானவை குறைந்த விலையில் மொத்தமாக, சில்லரையாக விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன் இங்கு மொத்த, சில்லறை ஜவுளி விற்பனை அதிகம் நடக்கும். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நேற்று முன்தினம் முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்ததால், இங்குள்ள வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    ஓணம், தீபாவளி, கிறஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை போல, பொங்கல் பண்டிகைக்காக கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமாக பெட்ஷீட், லுங்கி, துண்டு, நைட்டி உள்ளிட்ட ஆடைகள், குளிர்கால ஆடைகள் வாங்கி செல்வார்கள்.

    கடந்த ஒரு வாரமாக இந்த விற்பனை நடந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மொத்த விற்பனைக்கு ஆர்டர் கொடுத்தவர்கள், முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் ரத்து செய்து வருகின்றனர்.

    கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, பொங்கலுக்கு பின்னர் தான் முழு ஊரடங்கு விதித்தனர். பெருந்தொகைக்கான விற்பனை நடந்தது. ஆனால் இந்தாண்டு தற்போதே கட்டுப்பாடு விதித்ததால் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×