என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
காதல் தோல்வியால் சாணிபவுடர் குடித்து கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்9 Jan 2022 5:08 AM GMT (Updated: 9 Jan 2022 5:08 AM GMT)
நம்பியூர் அருகே காதல் தோல்வியால் கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (24). புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று விஜய் மதியம் ஒரு மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை வேலுச்சாமி தேடிச் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் அருகே மயக்கமடைந்த நிலையில் இருந்தார். மேலும் அவர் மீது சாணிபவுடர் வாசனை அடித்தது. உடனடியாக அவரிடம் விசாரித்த போது நான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், தங்கை திருமணம் ஆகாமல் உள்ளதால் எனது காதல் நிறைவேறாது என நினைத்து நான் சாணி பவுடர் குடித்தும், பேனா கத்தியால் கழுத்து மற்றும் இடது மணிக்கட்டு பகுதிகளில் அறுத்து கொண்டதாகவும் கூறினார்.
உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து விஜயின் தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து விஜயின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X