என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம் பாளையம் கக்கன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அங்கு 1,440 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை பதுக்கியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதிர்வேலை திருவாச்சி கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார்.
    • இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் ரோடு, திருவேங்கடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி சாந்தா (வயது 54). கணவனை இழந்த இவர் தனது மகள் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் இரவு பெருந்துறை வார சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையின் முன் படுத்துக்கொள்வார். கடந்த வாரம் சாந்தா வாரச்சந்தை பகுதியில் உள்ள கடையின் அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். கொலையாளியை பிடிப்பதற்காக பெருந்துறை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்து றையை அடுத்துள்ள திருவாச்சி கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு வாலிபர் வார சந்தை பகுதியில் ஒரு பெண்ணை கொலை செய்ததாக சரணடைந்தார்.

    கிராம நிர்வாக அலுவலர் அவரை விசாரித்த போது அவர் திருவாச்சி ஊராட்சி, பூவம்பாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 47) என்பதும், கடந்த வாரம் பெருந்துறை வாரச்சந்தை பகுதியில் கொலை செய்யப்பட்ட சாந்தாவுக்கும் இவருக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து விசாரி க்ைகயில் சம்பவத்தன்று இரவு சாந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் அருகில் இருந்த தனது நண்பர்களான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடியை சேர்ந்த கோபி என்கிற பாலமுருகன் (33), மற்றும் பெருந்துறை பவானி ரோடு, கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (33) ஆகியோர் உதவியுடன் சாந்தாவின் முகத்தில் மற்றும் தலையில் கட்டை யால் பலமாக தாக்கிய தாகவும், ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் இறந்த சாந்தாவை கீழே இழுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்று விட்டோம்.

    இந்த நிலையில் எங்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருவதை தெரிந்து தற்பொழுது நான் உங்களிடம் சரண் அடைந்ததாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து கதிர்வேலை திருவாச்சி கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார். பெருந்துறை போலீசார் கதிர்வேலுவிடம் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவருடன் கொலை செய்ய உதவியாக இருந்த கோபி என்கிற பால முருகன், ஆறுமுகம் ஆகியோரை பெருந்துறை காஞ்சிகோவில் ரோடு, கருமாண்டிசெல்லி பாளையம் பகுதியில் உள்ள சித்தம்பட்டி குளம் அருகே சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • கோகுலப்பிரியா குடிநீர் தேவைக்காக தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார்.
    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளிதிருப்பூர் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கோகுலப்பிரியா (25). என்ஜினீயரிங் பட்டதாரி.

    இவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்துக்கான தேதியும் குறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று குடிநீர் தேவைக்காக தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார்.

    அப்போது அவர் தவறி அருகில் உள்ள கிணற்றில் கோகுலப்பிரியா விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி லியானார்.

    இதையடுத்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கோகுலப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயிக்கப்படட பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (27). திருமண மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தீபக்குமார் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீபக்குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதுகுறித்து சிறுமியிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தீபக்குமார் தான் சிறுமியின் குழந்தைக்கு தந்தை என தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதை யொட்டி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் கோவை வருகிறார்.

    அங்கிருந்து ஈரோட்டுக்கு சாலை மார்க்கமாக மாலை காரில் வருகிறார். பின்னர் ஈரோடு பெருந்துறை ரோடு, மேட்டு கடையில் உள்ள தங்கம் மஹாலில் நடக்கும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

    அதன் பிறகு அவர் ஈரோட்டில் இருந்து கிளம்பி கரூருக்கு சென்று இரவில் தங்குகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் செல்லும் சாலையின் இருபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    இதையொட்டி மேட்டுக்கடை, தங்க மகாலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

    முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் புதிதாக 13,508 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் 55,172 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷனி சந்திரா பெற்றுக்கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 5.1.22 படி மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் இருந்தனர்.

    இதில் புதிதாக 13,508 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் 55,172 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளிலும் சேர்த்து 2,222 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு கிழக்கில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 491 வாக்காளர்களும், ஈரோடு மேற்கில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 026 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 942,

    பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 28,032 பவானி தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 339, அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 15,222 கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 100 பவானிசாகர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 428 பேர் உள்ளனர். என மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 572, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 98 ஆயிரத்து 869 பேர் உள்ளனர். மற்றவர்கள் 139 பேர் உள்ளனர்.

    வழக்கம்போல் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

    • சஞ்சீவி மூர்த்தி வழக்கம் போல் ஒர்க்‌ஷாப்பை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கண்காணிப்பு கேமிராவின் காட்சிகள் காணாமல் போயிருந்ததை கண்டு சஞ்சீவி மூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி செம்புளிச்சாம் பாளையம் மாட்டு கருப்புச்சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் சஞ்சீவி மூர்த்தி (27). இவர் செம்புளிச்சாம்பாளையம் பிரிவில் கார் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் வேலை முடிந்து சஞ்சீவி மூர்த்தி வீடு திரும்பினார். அடுத்த நாள் காலை வழக்கம் போல் ஒர்க்‌ஷாப்பை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கண்காணிப்பு கேமிராவின் காட்சிகள் காணாமல் போயிருந்ததை கண்டு சஞ்சீவி மூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசில் சஞ்சீவி மூர்த்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவத்தில் ஒர்க்‌ஷாப்புக்கு திருட வந்த மர்ம நபர் சி.சி.டி.வி. காட்சிகளை மட்டும் எடுத்து செல்ல காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

    அப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்து ள்ளதா? அதை மறைக்க இந்த கேமிரா காட்சிகளை எடுக்க அந்த மர்ம நபர் வந்தாரா? என்றும் பல கோணங்களில் பவானி டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது வருகிறது.

    • ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 40 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் மன்ற செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்க வேண்டும்

    ஈரோடு:

    தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவி இருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    6 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சிக்கு ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1.000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 40 ஆசிரியர்கள் வீதம் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் மன்ற செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்க வேண்டும்,

    தமிழர் நாகரீகம், பண்பாடு, தொன்மை, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை வெளிக்கொணர்வதில் பங்காற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொல்லியல் மற்றும் வரலாறு பாடங்களில் ஆர்வமும், விருப்பமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது.
    • பின்னர் இரவு 7.35 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டடது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது.

    அதனால், காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது.

    நேற்று செவ்வாய்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இருந்தாலும் பக்தர்களை பகல் 1.30 மணியில் இருந்து கோவில் பணியாளர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றி நடைசாத்தப்பட்டது.

    பின்னர் இரவு 7.35 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டடது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறவில்லை.

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கிராம சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து கணபதி பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) யாக சாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) 2-ம் கால யாக பூஜை, சுவாமிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சான்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கலச ங்கள் யாக சாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    அன்று காலை 10 மணிக்கு மகா அபிஷே கமும், கோதரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடை பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மர்ம நபர் ஒருவர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த தங்க தாலி கொடியை திடீரென பறித்து கொண்டு ஓடினார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு கோட்டை முனி யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெக நாதன். இவரது மனைவி அமுதா தேவி (38). இவர் தனது உறவினர் ஜெயலட்சுமியு டன் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்றார்.

    தொடர்ந்து அமுதாதேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் பின்பகுதியில் உள்ள வள்ளி, தெய்வானை சன்னதியில் சாமி தரிசனம் செய்து விட்டு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த தங்க தாலி கொடியை திடீரென பறித்து கொண்டு ஓடினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வருவதற்குள் அவர் காட்டுப்பகுதிக்குள் புகுந்து சென்று தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அமுதாதேவி அவரது கணவர் ஜெகநாதனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இைதயடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து மனைவியிடம் விசாரி த்தார்.

    மேலும் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. திருட்டுப் போன தங்க தாலிக்கொடியின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீ சார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லேத் பட்டறை உரிமையாளர் ராஜ்குமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்.
    • போராட்டம் இன்று 4-வது நாளாகவும் நீடிக்கிறது. இதனால் சிவகிரி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் ரவி. தூய்மை பணியாளர். இவரது மகன் ஹரிசங்கர் (17). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று அருகில் உள்ள ராஜ்குமார் என்பவரது லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்றார்.

    அப்போது மின்சாரம் தாக்கி மாணவர் ஹரிசங்கர் பலியானார். இதையடுத்து சிவகிரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் லேத் பட்டறை உரிமையாளர் ராஜ்குமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் வரை மாணவர் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி உறவினர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், உதவி போலீஸ் சூப்பிரணடு கவுதம் கோயல், ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் துணை கண்காணிப்பாளர் நீலகண்டன், தாசில்தார் மாசிலாமணி, இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

    இந்நிலையில் போராட்டம் இன்று 4-வது நாளாகவும் நீடிக்கிறது. இதனால் சிவகிரி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×