என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.
    • அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்

    கோபி, மார்ச். 19-

    ஈரோடு மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    பகலில் அனல் காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது. ஆனாலும் பகல் நேரத்தில் வழக்கம் போல் அனல் காற்று வீசி வருகிறது.

    இதனால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. அத்தியா வசிய தேவை–களுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து செல்கிறார்கள்.

    அதுவும் குடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, இளநீர், நுங்கு, மற்றும் வெள்ளரி பிஞ்சுகள், பழச்சாறு, கரும்புசாறு குடித்து வருகிறார்கள்.

    கோடை காலம்தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100 டிகிரி வெயில் பதிவானது. இனி வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.

    அனல் காற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் கொடிவேரி பகுதி முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    • அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து அந்தியூர் அடுத்த கெட்டி சமுத்திரம் ஏரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை போலீசார் நிறுத்தி மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர். அப்போது அதில் கர்நாடக மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொட்டக்காடு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா, பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, பிரபு, பள்ளிபாளையம் அடுத்த தெற்குப்பள்ளம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 44 கர்நாடக பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது.
    • செயலி மூலம் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேலையாட்களுக்கு மாற்றாக, வேளாண் எந்திரமயமாக்கல் தேவைப்படுகிறது.

    அதிக விலை, உயர்ந்த வேளாண் எந்திரங்கள், கருவிகளை விவசாயிகள் வாங்குவது சிரமம்.

    எனவே விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் வாங்கி குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. அரசு திட்டங்கள் மூலம் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவி களை பயன்படுத்தலாம்.

    அறுவடை காலங்களில் நெல் அறுவடை எந்திரங்களின் தேவை அதிகரிக்கும் போது பிற இடங்களில் வாடகை உயர்ந்து விடுகிறது. இதனால் வேளாண் வருமானம் குறைந்து விவசாயிகள் சிரமப்படுவர்.

    வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரம் மூலம் தீர்வு பெறலாம்.

    நெல், மக்கா சோளம், பயறு, தானிய வகைகள் அறுவடை செய்யும்போது எந்திர அறுவடை செய்ய எந்திரங்களின் உரிமையாளர் பெயர், விலாசம், மொபைல் எண் விபரத்தை, வட்டார, மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண் பொறியியல் துறை மூலம் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

    ஈரோடு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 15 சக்கர வகை அறுவடை எந்திரங்களும், 5 டிரேக் வகை அறுவடை எந்திர ங்களும் உழவன் செயலில் பதிவேற்றப்படுகிறது.

    விவசாயிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து செயலி மூலம் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • எதிர்பாராத விதமாக நஞ்சப்பன் வந்த இருசக்கர வாகனம் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
    • இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அடுத்த காவலிபாளையம் அருகே அனைய பாலத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன் ( 60). இவர் தனது இருசக்கர வாகனத்தில் புளியம்பட்டி- சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் ஒரு தனியார் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக எதிரில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நஞ்சப்பன் வந்த இருசக்கர வாகனம் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    இதில் நஞ்சப்பன் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அன்னூரில் உளள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நஞ்சப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமச்சந்திரன் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் தேள் கரடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (33). இவரது மனைவி மேகலா. ராமச்சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக்கொண்டு ராமச்சந்திரனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் குடிபோதையில் அடிக்கடி ராமச்சந்திரன் நான் சாக போகிறேன் என்று கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் நான் சாக போகிறேன் என்று சொல்லிக்கொண்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்று உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ராமச்சந்திரன் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக ராமச்சந்திரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
    • வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கமலாநகர் பகுதியில் உள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மதுபானங்கள் அதிக அளவில் பதுக்கி வைக்க ப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் சம்மந்தப் பட்ட வீட்டினை ரகசியமாக கண்கா ணித்தனர்.

    அப்போது வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது. இதையடுத்து வீட்டிற்குள் நுழைந்த போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    இதையடுத்து மதுபானங் களை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் சட்ட விரோதமாக மதுவிற்ற முனிசிபல்காலனி ஜான்சி நகரை சேர்ந்த சதீஸ்குமார் (32), கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த முரளிதரன் (27) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

    • வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    பு.புளியம்படடி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் மதுபானம் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ேபாலீசார் பு.புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பு.புளியம்பட்டி கோவை ேராட்டில் சந்தை ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ெகாண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மினி சரக்கு டெம்போ வேன் வந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த சரக்கு வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 45) மற்றும் வேனை ஓட்டி வந்த கோவை மாவட்டம் அன்னூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் (36) என தெரிய வந்தது. இவர்கள் மது பானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேனில் அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள் 1212 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மர்ம விலங்கு கடித்து குதறியதில் 11 ஆடுகள் பலியாகி இருப்பது தெரியவந்தது.
    • மேலும் ஆடு, கோழி ரத்தத்தை ருசித்ததால் அந்த மர்ம விலங்கு மீண்டும் மீண்டும் எங்கள் பகுதிக்குள் வந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    ஈரோடு, மார்ச். 19-

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (56) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகில் ஆட்டுப்பட்டி அமைத்து 50 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இவர் வழக்கம் போல் நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு இன்று அதிகாலை ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.

    இதனால் உடனடியாக பட்டிக்கு சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் 8 ஆடுகள், 3 ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்தன. மர்ம விலங்கு கடித்து குதறியதில் 11 ஆடுகள் பலியாகி இருப்பது தெரியவந்தது. அதைப்பார்த்து விவசாயி வெங்கடாஜலம் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் கடிபட்ட நிலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. இச்சம்பவம் குறித்து சித்தோடு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மர்ம விலங்கு ஒன்று பட்டிக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி உள்ளது தெரிய வந்தது.

    இதுகுறித்து சித்தோடு போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பதிவாகியிருந்த மர்ம விலங்கின் கால் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்குள் இதேபோன்று மர்ம விலங்கு கடித்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியாகி இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி, அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை அந்த மர்ம விலங்கு எந்த விலங்கு என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறும்போது,

    கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதிக்குள் மர்ம விலங்கு ஒன்று புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. அது என்ன விலங்கு என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் மற்ற கால்நடைகளை வளர்த்து வருபவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் ஆடு, கோழி ரத்தத்தை ருசித்ததால் அந்த மர்ம விலங்கு மீண்டும் மீண்டும் எங்கள் பகுதிக்குள் வந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    இதுவரை மர்ம விலங்கால் கடிபட்டு இறந்த ஆடு-கோழிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு அந்த மர்ம விலங்கை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை குறித்த 3-வது கண்காட்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்த மரபுசார் பன்முகத்தன்மை குறித்த 3-வது கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கோபிசெட்டி பாளையம், புதுவள்ளியம் பாளையத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். மைராடா கே.வி.கே. வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

    இதில் மரபியல் பன்முகத் தன்மை குறித்த விஞ்ஞானி களின் தொழில்நுட்ப உரை, விவசாயிகள் விஞ்ஞானி களிடையே கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி செய்யும் உழவர்களின் சாகுபடி அனுபவங்கள் எடுத்துரை க்கப்பட்டது. உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சி யில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் ழுத்தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தலைமை உரை நிகழ்த்தினார்,

    மைராடா கே.வி.கே. வேளாண்மை அறிவியல் நிலைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகேசன் வாழ்த்துரை வழங்கினார். உதவி இயக்குநர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று எஸ்.மோகனசுந்தரம் மற்றும் கே.வி.கே. மைராடா விஞ்ஞானிகள் தொழில் நுட்ப உரையாற்றினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் சகோதரத் துறை அலுவ லர்கள், தன்னார்வ மற்றும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் கண்காட்சியில் பாரம்பரிய பயிர் ரகங்களும், பாரம்பரிய விதைகளும், பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்தன.

    நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுகன்யா நன்றி கூறினார். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை - உழவர் நலத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • 25 தலைகள், 50 கைகளுடன் 60 அடி உயரத்தில் மகா சதாசிவம் சிலை அமைக்கப்படுகிறது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பச்சை கயிறு, பச்சை நிற குங்குமம் ஆகியவற்றை ஒரு ரூபாய் பிரசாதமாக வழங்குகிறோம்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு ஆதித்யா நகரில் சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட நர்மதை மருந்தீஸ்வரர் உடனமர் ஓம் நர்மதாம்பிகை கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நடைபெறும் விசேஷ தினங்கள் மற்றும் பூஜைகள் குறித்து அறக்கட்டளை நிறுவன தலைவரும், சென்னிமலை சித்தருமான சரவணானந்த சரஸ்வதி சாமிகள் கூறியதாவது:-

    18 சித்தர்களுடன் இமயமலை ஜோதிர்லிங்கமாக காட்சியளிக்கும் இந்த கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள 3½ அடி உயரம் கொண்ட சுயம்பு சிவலிங்கம் மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை நதியில் இருந்து 6 ஆண்டுகள் தேடி கிடைக்கப்பெற்று பின்னர் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    கோவிலில் பவுர்ணமி அன்று காலையில் அருள்வாக்கும், மாலையில் 18 சித்தர்களுக்கு பவுர்ணமி பூஜையும் நடைபெறுகிறது. மேலும் அமாவாசை தினம் மற்றும் தமிழ் மாதம் முதல் வியாழக்கிழமை அன்று குபேர யாக வேள்வியும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு யாக வேள்வியும் நடைபெறும்.

    அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தில் ராமானந்த சாமிகளிடம் துறவரம் தீட்சை பெற்று இந்த சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளராக நான் செயல்பட்டு வந்ததால் தற்போது சென்னிமலை ஆதீனமாக என்னை அறிவித்துள்ளனர்.

    இங்குள்ள ஆலய வளாகத்தில் மகா சதாசிவம் சாமிக்கு 25 தலைகள், 50 கைகள் கொண்ட சுதை சிலை 60 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பச்சை கயிறு, பச்சை நிற குங்குமம் ஆகியவற்றை ஒரு ரூபாய் பிரசாதமாக வழங்குகிறோம். திருமண தடை, தொழில் தடை, எதிரிகள் தொல்லை நீங்கி செல்வ வளங்களை கொடுக்கும் வகையில் பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாம்டேனியல் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாம்டேனியலை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சாம் டேனியல் (24). மூலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சாம்டேனியல் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். காளை மாடு சிலையில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி எதிர்திசை (ஒருவழிப்பாதை) யில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். எதிர் திசையில் கார் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்தினர். சாம்டேனியல் காரை மற்றவர்கள் மீது மோதுவது போல் தாறுமாறாக ஓட்டி சென்றார்.

    அந்த சமயம் ரோந்து போலீசார் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் சாம்டேனியல் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரத்தில் சாம்டேனியல் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மது அருந்தியது தெரிய வந்தது. மேலும் போலீசாரை அவர் தகாதவார்த்தையால் பேசினார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாம்டேனியலை கைது செய்தனர். அவர் மீது தகாத வார்த்தையால் பேசியது, வேலை செய்யவிடாமல் தடுத்தது, மது போதையில் வாகனம் ஓட்டியது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சாம்டேனியல் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.

    இந்த சம்பவத்தால் இரவு காளை மாட்டு சிலை பகுதி அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மாணவி வர்ஷா கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
    • நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்த மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் கோபி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அமுதா (43). திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ரமேஷ். நம்பியூர் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ரூபினி பிரியா, வர்ஷா (15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரூபினி பிரியா 12-ம் வகுப்பும், 2-வது மகள் வர்ஷா ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    மாணவி வர்ஷாவுக்கு கடந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். அந்த செல்போனில் மாணவி வர்ஷா எந்த நேரமும் விளையாடிக் கொண்டிருந்து உள்ளார். தற்போது பொதுத்தேர்வு வருகிறது எனவே செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று அவரது தாய் கண்டித்து உள்ளார். மேலும் இது குறித்து அவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் செல்போன் தலைமை ஆசிரியரிடம் கொடுக்கப்பட்டது.

    இதனால் மாணவி வர்ஷா கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் விட்டத்தில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுப்பற்றி தெரியவந்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகறி அழுதனர். மேலும் இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்த மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×