உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சி

உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை குறித்த 3-வது கண்காட்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சி
Published on

ஈரோடு:

தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்த மரபுசார் பன்முகத்தன்மை குறித்த 3-வது கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கோபிசெட்டி பாளையம், புதுவள்ளியம் பாளையத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். மைராடா கே.வி.கே. வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் மரபியல் பன்முகத் தன்மை குறித்த விஞ்ஞானி களின் தொழில்நுட்ப உரை, விவசாயிகள் விஞ்ஞானி களிடையே கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி செய்யும் உழவர்களின் சாகுபடி அனுபவங்கள் எடுத்துரை க்கப்பட்டது. உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சி யில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினராக மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் ழுத்தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தலைமை உரை நிகழ்த்தினார்,

மைராடா கே.வி.கே. வேளாண்மை அறிவியல் நிலைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகேசன் வாழ்த்துரை வழங்கினார். உதவி இயக்குநர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று எஸ்.மோகனசுந்தரம் மற்றும் கே.வி.கே. மைராடா விஞ்ஞானிகள் தொழில் நுட்ப உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் சகோதரத் துறை அலுவ லர்கள், தன்னார்வ மற்றும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் கண்காட்சியில் பாரம்பரிய பயிர் ரகங்களும், பாரம்பரிய விதைகளும், பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்தன.

நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுகன்யா நன்றி கூறினார். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை - உழவர் நலத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com