என் மலர்tooltip icon

    ஈரோடு

    • போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • கடையில் 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் மூங்கில்பாளையம் வின்டெக்ஸ் நகரில் துரைசிங் (31) என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது.

    இந்த கடையில் அரசால் தடைசெய்யபட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வியாபாரி துரைசிங்கை கைது செய்தனர். மேலும் குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

    • நஞ்சுண்டேசுவரருக்கும், பழனி ஆண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் பாலதொழுவு ஊராட்சியில் உள்ளது நஞ்சுண்டேசுவரர் கோவில்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புலிங்கமாக தோன்றிய நஞ்சுண்டேசுவரருக்கு கண்ணடக்கம், கண் மலர் ஆகியவற்றை காணிக்கை யாக வழங்கி வழிபட்டால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று நள்ளிரவு 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து நஞ்சுண்டேசுவரருக்கும், பழனி ஆண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அப்போதே பக்தர்கள் திரண்டு விட்டனர்.

    இதில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 2 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    • அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கேள்வித்தாள்கள் பிரிண்டர் மூலம் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, பொதுத்தே ர்வுகள் அனைத்துக்கும் கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

    இதற்காக அரசு அச்சகத்தில் கேள்வி தாள்கள் அச்சடிக்க ப்பட்டு பின்னர் அவை மாவட்ட வாரியாக பிரிக்க ப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

    கேள்வி தாள்கள் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம் பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டு தேர்வுக்கு முதல் நாள் அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    அவ்வாறு அனுப்பும்போது கேள்வி த்தாள்கள் முன்கூட்டியே வெளியே கசிந்து பரபர ப்பை ஏற்படுத்தின. இதனை தடுக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை புதிய முயற்சியை மேற்கொ ண்டுள்ளது.

    அதன்படி இனி அச்சகத்தில் கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படாமல் நேரடியாக அந்த பள்ளிகளிலேயே பிரிண்ட் எடுத்து கொடுக்கும் வகையில் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் பிரிண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை, ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரிண்டர் வழங்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் தேர்வன்று அந்தந்த தலைமை ஆசிரி யர்களின் இ-மெயிலுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் கேள்வித்தாள் அடங்கிய பி.டி.எப் பைல் அனுப்பி வைக்கப்படும்.

    தலைமையாசிரியர் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கேள்வித்தாள்களை பிரிண்டர் மூலம் பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

    இதன் மூலம் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியே கசிவதை தடுக்க முடியும்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது:

    கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. பிரிண்டரை கையாள்வது குறித்து ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    தேர்வன்று அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் கேள்வித்தாள்கள் பிரிண்டர் மூலம் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூமிக்கு அடியில் 6 அடி உயரம் சிவலிங்க சிலை இருந்ததை கண்டு நெகிழ்ந்தனர்.
    • இதை பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் மெயின் ரோடு திருநகரில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரன் கோவில் இருந்தது.

    நாளடைவில் இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. மேலும் இந்த கோவிலில் இருந்த சிவலிங்க திருமேனி இல்லாமல் கருட கம்பம் மட்டுமே இருந்தது.

    இந்த நிலையில் அரண் பணி சிவனடியார் கூட்டம் சார்பில் இந்த சிவன் கோவிலை புனரமைத்து கட்ட முடிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி கோவிலை கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதையடுத்து திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதை தொடர்ந்து எந்திரங்கள் மூலமாக அங்கிருந்த கருட கம்பத்தை அகற்றினர்.தொடர்ந்து பணிகள் நடந்தன.

    இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பணிகள் தொடர்ந்து நடந்தன. மதியம் எந்திரம் மூலமாக மண்ணை அகற்றிக் கொண்டிருந்தனர்.

    தொடர்ந்து 5 அடி வரை பள்ளம் தோண்டினர். அப்போது அங்கு திடீரென ஒரு சத்தம் கேட்டது. இதையடுத்து தொழிலாளர் அந்த பகுதியில் இருந்த மண்ணை அகற்றி விட்டு பார்த்தனர்.

    அப்போது பூமிக்கு அடியில் சுமார் 6 அடி உயரம் உள்ள சிவலிங்க சிலை இருந்ததை கண்டு நெகிழ்ந்தனர். இது குறித்து பொது மக்களுக்கு தெரிவித்தனர்.

    இதை பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். இதை தொடர்ந்து அவர்கள் உடனடியாக சிவலிங்க சிலையை மீட்டு எடுத்தனர். அந்த சிலையை பொதுமக்கள் சுத்தம் செய்து பூக்கள் வைத்து வழிபட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் கூடாரம் அமைத்து அங்கு அந்த சிவலிங்கத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தினர்.

    இது பற்றி அறிந்ததும் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து தொடர்ந்து சிவலிங்கத்தை வணங்கி சென்றனர்

    பிரதோஷம் தினத்தில் கோவில் திருப்பணியின் போது சிவலிங்க திருமேனி கிடைத்ததால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

    • 28-ந்தேதி கம்பம் சாட்டுவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி குண்டம் திருவிழா நடக்கிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில வருகை தருவார்கள். அதோடு இல்லாமல் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் முக்கிய நாட்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என்பதால் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை வணங்கி செல்வார்கள்.பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் பண்ணாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோ விலை சுற்றிஉள்ள இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு பக்தர்கள் வசதிக்காக மிகப்பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த வாரம் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு கம்பம் சாட்டுவிழா நடக்கிறது. பின்னர் அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை குண்டம் திருவிழா நடக்கிறது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள். இதற்காக 2 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் இடம் பிடித்து வரிசையில் காத்திருப்பார்கள். குண்டம் விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படும். இதே போல் வனப்பகுதியில் கோவில் அமைந்து உள்ளதால் வனத்துறை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    • கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.
    • வனத்துறையினர் ட்ரோன் மூலம் கருப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி, ஆசனூர், தலமலை உள்ளிட்ட வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் நுழைவதும், பயிர்களை சேதம் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

    குறிப்பாக ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, கரளவாடி, அக்கூர் ஜோரை, ஜோரா ஓசூர் உள்ள கிராம பகுதிகளில் வனப்பகுதியில் சுற்றி திரியும் கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. மேலும் வனத்துறையினரையும், விவசாயிகளையும் துரத்தி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர்.

    ஆனால் கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சி ஆனை மலையில் இருந்து முத்து, கபில்தேவ் என 2 கும்கி யானைகள் கருப்பனை பிடிக்க அழைத்து வரப்பட்டன.

    ஆனால் கருப்பன் யானையை பிடிக்க முடியாததால் மீண்டும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சலீம் என்ற கும்கி யானை வந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் கருப்பன் யானை சென்று மறைந்து விட்டது.

    இதனையடுத்து வனத்துறையினர் ட்ரோன் மூலம் கருப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிக்கும் வகையில் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். எனினும் கருப்பன் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மீண்டும் மறைந்து விட்டது. இதனைத்தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. சில நாட்களாக கருப்பன் யானை தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தாளவாடி வனப்பகுதியில் உள்ள ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து கருப்பன் யானையை பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பொம்மன், சுஜய் ஆகிய 2 கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இரவு நேரத்தில் கும்கிகள் உதவியுடன் மீண்டும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். ஏற்கனவே 2 முறை கும்கிகள் கொண்டு வரப்பட்டும் பிடிக்க முடியாத நிலையில் தற்போது 3-வது முறையாக கும்கிகள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சென்னிமலை வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்னிமலை நகர பகுதிக்கு வந்து விட்டன.
    • சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்னிமலை நகர பகுதிக்கு வந்து விட்டன. வீட்டு மொட்டை மாடிகளில் காய வைத்திருக்கும் உணவு பொருட்களை எடுத்து தின்பது, குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்துவது, கடைகளில் உள்ள பொருட்களை நாசப்படுத்துவது, கேபிள் வயர்களை அறுப்பது என நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்தது.

    இதனால் சென்னிமலையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஈரோடு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து சென்னிமலை நகர பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டுகள் வைத்து பிடித்தனர்.

    கூண்டுக்குள் 7 குரங்குகள் சிக்கிக்கொண்டன. பின்னர் அவற்றை வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கிவிடும் என்றனர்.

    • செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த இரட்டை புளியம்மரத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழன் (32). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கொள்ளுகாட்டு மேட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தமிழன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டக்காடுவில் உள்ள ஒரு தோட்டத்தில் சூறாவளிக்காற்றில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது.
    • வாழைகள் சேதம் அடைந்து இருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது.

    அதன்பின்னர் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 8.30 மணி வரை சுமார் அரைமணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.

    சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புதுக்காடு, கிழங்கு குழி, வட்டக்காடு காந்திநகர், விளாங்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்திருந்த மொந்தன், ரொபஸ்டா ரகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் தோட்டங்களில் மூங்கில் கம்புகள் மீது படரவிடப்பட்டிருந்த 5 ஏக்கர் பரப்பளவிலான வெற்றிலை கொடிகளும் கீழே விழுந்து நாசமானது.

    வட்டக்காடுவில் உள்ள ஒரு தோட்டத்தில் சூறாவளிக்காற்றில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது. மேலும் தென்னை மரம் முறிந்து விழுந்தது. புதுக்காடுவில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அந்த பகுதி இருளில் மூழ்கியது.

    இதேபோல் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டுப்பாளையம், குருமந்தூர், காரப்பாடி, ஒட்டர் கரட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதனால் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

    பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்து இருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் மழை பெய்தது.

    • 28-ந்தேதி கம்பம் சாட்டப்படுகிறது.
    • ஏப்ரல் 4-ந்தேதி குண்டம் விழா நடக்கிறது.

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நாளை (தி்ங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கம்பம் சாட்டப்படுகிறது. அன்று முதல் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகள் ஊர்வலமாக சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும்..

    அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடக்கிறது. 5-ந் தேதி கோவிலில் திருவிளக்கு பூஜையும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந்தேதி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. குண்டம் விழா அன்று கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் வருவதற்காக இப்போதே தடுப்பு கட்டைகளை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.

    • காசிபாளையம் அருகே உள்ள அரசலமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடத்தூர் அடுத்த காசிபாளையம் அருகே உள்ள அரசலமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அய்யாசாமி (53), கிருஷ்ணன் (68), பெருமாள் (56), பரமேஸ்வரன் (50), நஞ்சப்பன்(62), முருகேசன் (50) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சீட்டுக்கட்டுகள், பணம் ரூ.7,050 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • வனவிலங்குகள் குறித்த தவறான வீடியோ பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
    • தவறான வீடியோக்கள் பதிவிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடம்பூர் மலைக்கிரா மங்களில் பல சிற்றூர், கிராமங்களும் உள்ள நிலையில் பஸ் போக்கு வரத்து வசதிகளும் உள்ளன. இங்கு வாழும் மலைக்கிராம மக்கள் வெளியூருக்கு வேலை சம்பந்தமாகவும்,

    அத்தியாவசிய தேவைக ளுக்கும் மலைக்கிராமங்களில் இருந்து நகர பகுதிகளுக்கு பஸ், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக வனச்சாலை வழியாக பயணம் செய்கின்றனர்.

    அவ்வாறு வனச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீரு க்காக வெளியேறி சாலை யில் தென்படும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவி லங்குகளை பாதுகாப்பற்ற முறையில் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்கள் மற்றும் சில வருடங்களுக்கு முன்பு வனவிலங்குகள் சாலையை கடந்து செல்லுவது போலவும், யானை மின் வேலை பட்டு இறந்தது போன்று வேறு எங்கோ எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கடம்பூர் வனச்சரக பகுதிகளில் நடந்ததாக வாட்ஸ்அப், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவேற்றி வரும் நிகழ்வுகள் தற்போது அதிகமாகி வருகிறது.

    கடம்பூர் மலைக்கிராம பகுதிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மலைக்கிராம மக்கள் மற்றும் வனத்துறையினருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், வனவிலங்குகள் குறித்த தவறான வீடியோ பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டுக்குள் இருந்து மக்கள் பயணிக்கும் சாலையில் இரவு நேரங்களில் நடமாடுவதாகவும். வேறு மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தின் மின் வேலியில் பட்டு யானை இறந்தது போன்ற நிகழ்வு கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்தது போன்ற பதிவு செய்த வீடியோக்கள் மற்றும் படங்களை ஆன்லைனில் பதிவேற்றுவது, உள்ளூர் பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப் குரூப்புகளில் பகிர்வது போன்ற வனவிலங்குகள் குறித்து தவறான வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

    இதுபோன்ற வனவிலங்குகள் குறித்து தவறான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ வனத்துறை சார்பில் வனச்சட்டத்தின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66A-ன் வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    ×