என் மலர்tooltip icon

    கடலூர்

    பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள 9 மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    கடலூர்:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 1-ந் தேதி தொடங்க உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 345 மாணவர்கள், 16 ஆயிரத்து 285 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 630 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டத்தில் 100 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கடலூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை குறிப்பிட்ட மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வினாத்தாள்கள் இறக்கி வைக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 3 வினாத்தாள் மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 2, சிதம்பரத்தில் 2, வடலூரில் 2 என 9 வினாத்தாள் மையங்கள் உள்ளன. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    செல்லமாக வளர்த்த தனது மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டானே என்று குறிஞ்சிப்பாடியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். #KurinjipadiMurder
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளியின் வளாகத்தில் ஆசிரியை ரம்யாவை வாலிபர் ராஜசேகர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தாய் வள்ளி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது மகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாள். அப்போது அவள் தினமும் பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    அதே பஸ்சில் விருத்தகிரிகுப்பத்தை சேர்ந்த வாலிபர் ராஜசேகரும் சென்று வந்துள்ளார். அவர் அடிக்கடி ரம்யாவிடம் பேசி வந்தார்.

    அப்போது, நான் உன்னை காதலிப்பதாக கூறிவந்துள்ளார். இதனை ரம்யா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பஸ்சில் செல்லும்போது ரம்யாவின் செல்போனை ராஜசேகர் பறித்துள்ளார். மாலையில் ரம்யா வீட்டுக்கு வந்தவுடன் உனது செல்போனை எங்கே என்று கேட்டபோது, அவளது தோழியிடம் கொடுத்திருப்பதாக கூறினார். அவளது தோழியிடம் கேட்டபோது என்னிடம் செல்போனை ரம்யா தரவில்லை என்று கூறினாள்.

    அதனை தொடர்ந்து ரம்யாவிடம் கேட்டபோது, ராஜசேகர் செல்போனை பறித்து விட்டதாக ரம்யா கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென்று சிலருடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.

    ரம்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ராஜசேகர் கேட்டார். நாங்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டோம்.

    அப்போது ராஜசேகர் ஆத்திரம் அடைந்து ரம்யாவையும், அவரது தங்கையையும் கழுத்தை அறுத்து கொன்று விடுவதாக மிரட்டினார். ஆனால், நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ரம்யா குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவளுக்கு புதிதாக ஒரு செல்போன் வாங்கி கொடுத்தோம். இந்த நம்பரை எப்படியோ ராஜசேகர் தெரிந்து கொண்டான்.

    அதன் மூலம் அவர் ரம்யாவின் உறவினர்களிடம், நான் அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளான். மேலும் ரம்யாவுக்கு செல்போனில், எனது காதலை ஏற்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்பி உள்ளான்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற என் மகளின் கழுத்தை அறுத்து ராஜசேகர் கொன்றுள்ளான். செல்லமாக வளர்த்த எனது மகளின் வாழ்க்கையை பாவி மகன் சீரழித்து விட்டானே.

    இவ்வாறு அவர் கூறினார். #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்றுவிட்டு ஓடிய வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடி:

    குறிஞ்சிப்பாடி சின்ன கடை வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ரம்யா (22).

    கடலூரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்துள்ளார். அப்போது விருத்தகிரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரும் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார். ரம்யாவும் ராஜசேகரும் ஒரே பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்கள்.

    இருவரும் வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ராஜசேகர் ரம்யாவை காதலிப்பதாக கூறினார். அதற்கு ரம்யா மறுத்தார். ஆனாலும் ராஜசேகர் விடாமல் பல முறை காதலிப்பதாக கூறியுள்ளார். ராஜசேகரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ரம்யா ‘நான் காதலிக்க மாட்டேன், நீ வேண்டும் என்றால் எங்கள் வீட்டில் வந்து பேசிக்கொள்’ என கூறியுள்ளார்.

    6 மாதத்துக்கு முன் ரம்யா வீட்டிற்கு வந்து ராஜசேகர் பெண் கேட்டார். அதற்கு ரம்யாவின் பெற்றோர் முடியாது என மறுத்துள்ளனர். அதன் பிறகு ரம்யா ராஜசேகரை புறக்கணித்தார். இதனால் ராஜசேகர் ஆத்திரம் அடைந்தார். ரம்யா ஆசிரியையாக பணியாற்றிய குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு நேற்று காலை சென்றார்.

    பள்ளியில் தனியாக இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். கழுத்தில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிழந்தார். ரம்யாவின் வலது கை விரல்களும் துண்டாகின.

    நேற்று மாலை ராஜசேகரின் சகோதரி ஆனந்தியின் செல்போனுக்கு அவர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

    ராஜசேகரின் செல்போன் டவர் சிக்னலை வைத்து போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என ராஜசேகர் ரம்யாவை கொலை செய்தாரா? கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வெறும் மிரட்டலா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    ரம்யா இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். காலை 8 மணியளவில் ரம்யா பள்ளியை சென்றடைந்தார். அப்போது பள்ளிக்கு மற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் யாரும் வரவில்லை. பள்ளி வளாகத்தில் ரம்யா தனியாக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென்று தனியாக நின்று கொண்டிருந்த ஆசிரியை ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதனால் ரம்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆட்டை அறுப்பது போல் ரம்யாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரம்யா பலத்தகாயம் அடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரம்யா இறந்ததை அறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து பள்ளிக்கு ஆசிரியர் ஒருவர் வந்தார். அங்கு ஆசிரியை ரம்யா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

    பின்னர் அவர் இதுகுறித்த பள்ளி நிர்வாகத்துக்கும், குறிஞ்சிப்பாடி போலீசாருக்கும் தெரிவித்தார்.

    உடனே நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்பு இந்த கொலை தொடர்பாக அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.



    மேலும் இன்று காலை பள்ளி வேலைநேரத்திற்கு முன்பாகவே ரம்யா வந்தார். ஏன் வந்தார். ரம்யாவை கொலை செய்த வாலிபர் யார்? அவர் எதற்காக ரம்யாவை கொலை செய்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் குற்றவாளிகளின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தந்தை சுப்பிரமணியனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரிகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினருடன் எனது வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் அவர் என் மகள் ரம்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். அதன் பின்னர் ரம்யா பள்ளி செல்லும்போது வழி மறித்து, தன்னை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜசேகர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு ரம்யாவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை ரம்யா பள்ளி வளாகத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். எனவே இந்த சம்பவத்துக்கும், ராஜசேகருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையொட்டி வாலிபர் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு இன்று 1 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    பள்ளிவளாகத்தில் ஆசிரியை கொடூர முறையில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #KurinjipadiMurder
    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இன்று காலை பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    ரம்யா இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். காலை 8 மணியளவில் ரம்யா பள்ளியை சென்றடைந்தார். அப்போது பள்ளிக்கு மற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் யாரும் வரவில்லை. பள்ளி வளாகத்தில் ரம்யா தனியாக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மவாலிபர் தனியாக நின்று கொண்டிருந்த ரம்யாவை சரமாரியாக தாக்கினார்.

    பின்னர் அவரை ஆட்டை அறுப்பதை போல் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதில் ரம்யா பலத்தகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த மர்மவாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் ரம்யா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இந்ததகவலை பள்ளி நிர்வாகத்துக்கும், குறிஞ்சிப்பாடி போலீசாருக்கும் தெரிவித்தார். நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


    மேலும் இன்று காலை பள்ளி வேலைநேரத்திற்கு முன்பாகவே ரம்யா வந்தது ஏன்? ரம்யாவை கொலை செய்த மர்மவாலிபர் யார்? அவர் எதற்காக ரம்யாவை கொலை செய்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் குற்றவாளி உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு இன்று 1 நாள் விடுமுறை விடப்பட்டது.

    ஒருதலை காதல் பிரச்சனையில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  #KurinjipadiMurder
    3-வது நாளாக நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதில் கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு விதிகளின்படி மட்டுமே நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த 18-ந் தேதி மு தல் தொடர் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி கடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊழியர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சேகர், ஒப்பந்த ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ஆனந்தன், தனியார் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி குருராமலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.

    போராட்டம் நடத்திவரும் எங்களை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் எங்களது போராட்டம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. அப்படி போராட்டம் நடந்தால் பி.எஸ்.என்.எல். சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் என பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவர் தெரிவித்தார். 
    விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளராக ரமேஷ் என்பவரும், மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் 2 பேரும் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அவர்களால் உடைக்க முடியவில்லை. உடனே கடையின் முன்பக்க இரும்பு ‌ஷட்டரில் மாட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அங்கு அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மொத்தம் ரூ.1½ லட் சம் மதிப்புள்ள மதுப்பாட்டிகளை எடுத்து சென்று விட்டனர்.

    இன்று மதியம் வழக்கம்போல் விற்பனையாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் கடைக்கு வந்தனர்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி டாஸ்மாக் கடையில் சாக்காங்குடியை சேர்ந்த மோகன்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராகவும், வளையமாதேவியைச்சேர்ந்த வீரமணி(41) என்பவர் உள்பட 3 பேர் விற்பனையாளராகவும் வேலை பார்க்கிறார்கள்.

    இதில் விற்பனையாளர் வீரமணி பற்றி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு மோகன் புகார் கடிதம் எழுதி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வீரமணியை இடமாற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு வீரமணியிடம் மேற்பார்வையாளர் மோகன் கேட்டுள்ளார்.

    இது பற்றி வீரமணி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மோகனை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வீரமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று வளையமாதேவி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த மோகன் வீரமணியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மெல்வின், இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மோகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதன்பிறகு அவரை கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதையடுத்து மோகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட சிவசங்கரி, எனது கணவர் பொறுமையானவர், அவரை அழ வைத்துவிட்டேன் என்று போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவசங்கரி தனது கணவர் மதிவாணன், போலீஸ் அதிகாரி, தாய் சுமதி, தங்கை ஆகிய 4 பேருக்கு உருக்கமான கடிதங்களை எழுதி உள்ளார்.

    போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், எனது கணவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். நான் எனது கணவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டேன்.

    எனது கணவர் பொறுமையானவர். நல்லவர். நான் அவரை அழவைத்து விட்டேன். நான் எனது 2 மகன்களையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டேன். இதற்கு நானே காரணம். எங்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படியே எனது கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதேபோல் மற்றவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதங்களை சிவப்பு மையால் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் மகன்களை கொன்று தற்கொலை செய்ததற்கான காரணங்களை சிவசங்கரி குறிப்பிடவில்லை.

    2 மகன்களை சிவகங்கரி வி‌ஷம் கொடுத்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பம் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 48). இவர் கூத்தப்பாக்கத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35).

    இவர்களுக்கு பாவேஷ் கண்ணா (12), ரபிஷ் கண்ணா (8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். அங்குள்ள தனியார் பள்ளியில் பாவேஷ் கண்ணா 7-ம் வகுப்பும், ரபிஷ்கண்ணா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சிவசங்கரி வீட்டில் தனது மகன்களுடன் இருந்தார். திடீரென்று அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகன்களை யார் காப்பாற்றுவார்கள்? என்று எண்ணினார்.

    பின்னர் அவர் குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அதனை தொடர்ந்து தனது மனதை கல்லாக்கி கொண்டு மகன்களை கொல்ல முடிவு செய்தார்.

    பின்னர் அவர் தனது மகன்களை முத்தமிட்டு கொஞ்சினார். அதன் பின்னர் 2 மகன்களையும் கொன்றார். மகன்கள் இறந்ததை அறிந்ததும் அவர்களது உடல்களை சுற்றி பூக்களை தூவி கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் சிவசங்கரியும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மெடிக்கல் ஸ்டோரை பூட்டி விட்டு மதிவாணன் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    கதவை தட்டிப் பார்த்தார் இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் சிவகங்கரி போனை எடுக்கவில்லை.

    உடனே பதறிபோன மதிவாணன் தனது நண்பரை அழைத்தார். அவர் வந்தவுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    வீட்டில் உள்ள ஒரு அறையில் சிவசங்கரி தூக்கில் பிணமாக தொங்கினார். அவருக்கு கீழே மகன்கள் பாவேஷ்கண்ணா, ரபிஷ்கண்ணா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து மதிவாணன் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து மதிவாணன் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மதிவாணன் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலை செய்து கொண்ட சிவகங்கரி தனது கணவர் உள்பட 4 பேருக்கு கடிதங்கள் எழுதி வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் சிவகங்கரி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது பற்றி உருக்கமாக கூறியுள்ளார்.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று அதிகாலை வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நகர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). இவர் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயக்கொடி (45). இன்று அதிகாலை 5 மணி அளவில் மனோகரன் எழுந்து வீட்டின் கதவை பூட்டாமல் அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றார். வீட்டில் ஜெயக்கொடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் முகமூடி அணிந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று மனோகரின் வீட்டுக்குள் புகுந்தார்.

    பின்னர் அவர் அங்கு தூங்கி கொண்டிருந்த ஜெயக்கொடியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது திடுக்கிட்டு எழுந்த ஜெயக்கொடி அதிர்ச்சியடைந்து கூச்சல்போட முயன்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த மர்ம வாலிபர் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை ஜெயக்கொடியின் முகத்திலும், வீட்டிலும் தூவினான். பின்பு அவர் கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்தான்.

    இதில் பாதி சங்கிலி ஜெயக்கொடி கையிலும், பாதி நகை மர்ம வாலிபர் கையிலும் சிக்கியது. பின்பு அவன் அங்கிருந்து தப்ப முயன்றான். ஆனால் ஜெயக்கொடி அவன் தப்பி ஓடி விடாமல் இருக்க அவனது 2 கால்களையும் பிடித்துக் கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து மர்ம வாலிபர் ஜெயக்கொடியின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து தாக்கினான். தாக்குதலில் காயமடைந்த ஜெயக்கொடி மயங்கிவிழுந்தார். அதன் பின்பு கொள்ளையன் பறித்த 6 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    டீ குடிக்க சென்ற மனோகரன் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதையும், மனைவி ஜெயக்கொடி மயங்கி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார். அதன்பின்பு எழுந்த ஜெயக்கொடி கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கி தாலிசங்கிலியை பறித்து சென்றுவிட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.

    இதுகுறித்து மனோகரன் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்.

    கொள்ளையன் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஜெயக்கொடி ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூரில் திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் ஆர்.சி.நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி கார்த்தினி (31). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. தற்போது கார்த்தினி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    ஏற்கனவே சற்று மனநிலை பாதிக்கப்பட்ட ரவிக்குமாரை நேற்று முன்தினம் கார்த்தினி வன்னியர்பாளையத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் விட்டு, விட்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7 தேர்வு எழுத சென்று விட்டார். தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த ரவிக்குமார் திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

    இதை அறிந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி கார்த்தினி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ரவிக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×