என் மலர்tooltip icon

    கடலூர்

    கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை, மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

    இதை தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் வேல்முருகனுக்கும் வேப்பூர் பகுதியை சேர்ந்த அவரது அக்கா மகள் பவித்ரா (20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பின்னர் வேல்முருகன் அவரது மனைவியுடன் கழுதூர் பகுதியில் வசித்து வந்தார். பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பவித்ரா பிரசவத்துக்கு வேப்பூர் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

    சம்பவத்தன்று வேல்முருகன் தனது மனைவியை பார்ப்பதற்காக வேப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்கினார்.

    இந்த நிலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் தாய் மலர்கொடி தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வேல்முருகன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வேல்முருகனின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேல்முருகனை கழுத்தை நெரித்து குமுதா கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாரிடம் குமுதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தைக்கு 2 மனைவிகள் அதில் முதல் மனைவிக்கு பிறந்தவள் நான். 2-வது மனைவிக்கு பிறந்தவர் தான் வேல்முருகன். எனக்கு திருமணமாகி நான் வேப்பூரில் வசித்துவந்தேன். எனது கணவர் ரவிச்சந்திரன் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார்.

    எனது வீட்டுக்கு வேல்முருகன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். அக்காள், தம்பி உறவு என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சிங்கபூரில் வேலை கிடைத்து வேல்முருகன் அங்கு சென்றுவிட்டார்.

    இதைத்தொடர்ந்து வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டால் எங்களது தொடர்பு பாதிக்கப்படும் என்பதால் எனது மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வேல்முருகன் கூறினார்.

    இதையடுத்து வேல்முருகனுக்கு எனது மகளை திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பின்பும் நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தோம்.

    எனது மகள் பவித்ரா பிரசவத்துக்காக எனது வீட்டுக்கு வந்திருந்தாள். சம்பவத்தன்று அவளை பார்ப்பதற்காக வேல்முருகன் மதுபோதையில் எனது வீட்டிற்கு வந்தார்.

    இரவு உணவு சாப்பிட்டு விட்டு எனது மகளும் வேல்முருகனும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். நான் மற்றொரு அறையில் படுத்திருந்தேன்.

    நள்ளிரவில் எனது அறைக்கு வந்த வேல்முருகன் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். மகள் பக்கத்து அறையில் தூங்குவதால் அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என கூறினேன். ஆனால் வேல்முருகன் என்னை வற்புறுத்தி உல்லாசத்தில் ஈடுபட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த நான் வேல்முருகனின் கழுத்தை நெரித்தேன் அதில் அவர் இறந்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நான் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டார் என்று மற்றவர்களை நம்பவைப்பதற்காக அவரது உடலை தூக்கில் தொங்க விட்டேன். பின்னர் எனது மகளிடம் சென்று உனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறினேன். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த எனது மகள் வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நான் கூறியதை அவர்கள் நம்பவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை, மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரியில் இருந்து வீடு தேடி வரும் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கியது. பிரசாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதித் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.
    கன்னியாகுமரி:

    இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்ட ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தி பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய சட்ட சேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான உதித் உமேஷ் லலித் முகாமை தொடங்கி வைத்தார். மேலும், வீடுதேடி வரும் நீதி சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்து பல்வேறு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நீதி எல்லோருக்கும் பொதுவானது. வறுமை உள்பட பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் லோக் அதாலத் செயல்பட்டு வருகிறது.

    இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களை வீடு தேடி சென்று உதவி செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இருந்து 5 வாகனங்கள் மூலம் வீடு தேடி வரும் நீதி என்பதை மைய பொருளாக கொண்டு சட்ட விழிப்புணர்வு வாகன பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவருமான துரைசாமி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், சென்னை ஐகோர்ட்டு சட்ட சேவைகள் தலைவருமான ராஜா, மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன், மாவட்ட நீதிபதி ராஜசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    விருத்தாசலம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ஆஸ்பத்திரி சாலை பகுதியில் வசிப்பவர் ஞான சுப்பிரமணியன் (வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளை விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நிறுத்திவிட்டு, அங்குள்ள இ-சேவை மையத்துக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம மனிதர் திருடி சென்றுவிட்டார்.

    இதேபோல், ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (37), இவர் விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடை அருகே நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக இருவரும் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த 26-ந் தேதி தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல் வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த நிலையில் வங்கக் கடல் பகுதியில் குறைந்த உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வந்தது. நேற்று இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. காலை நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சாலைகளில் செல்வதை காண முடிந்தது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக ஏற்கனவே வாலாஜா ஏரி நிரம்பி உள்ளது. நத்தமேடு அணைக்கட்டு, சிப்பம் ஏரி, உளுத்தூர் அணைகட்டு, அம்மாபுரம் அணைக்கட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 21 ஏரி மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி உள்ளன.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஏரி மற்றும் அணைகட்டுகளில் 76 முதல் 99 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இது தவிர 27 ஏரி, குளங்களில் 51 முதல் 75 சதவீதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருவதால் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது.
    ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய ரேசன் கடை விற்பனையாளரை சஸ்பெண்டு செய்து சின்ன பண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உத்தரவிட்டார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடோனில் ரேசன் அரிசி பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய கண்டியக்குப்பம் பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை இட்லி அரிசியாக புதுப்பித்து கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கடலூர் குடிமை பொருள் புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த குடோனில் இருந்து 156 அரிசி மூட்டைகளையும், 58 கோதுமை மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் சித்திரை குப்பம் ரேசன் கடை விற்பனையாளரான சின்ன பண்டாரங்குப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், விருத்தாசலத்தை சேர்ந்த கார்த்திகேயன், வேப்பூர் அருகே உள்ள மங்களூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரேசன் அரிசியை கடத்திவந்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய ரேசன் கடை விற்பனையாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்டு செய்து சின்ன பண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.
    கடலூர் மாவட்டத்தில் பார்வை திறன் பரிசோதனை மேற்கொள்ள 6 குழுக்கள் அடங்கிய நடமாடும் வாகனத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    தேசிய சுகாதாரத்திட்டத்தின் கீழ் தேசிய மற்றும் மாநில பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து பார்வை திறன் குறைபாடு பற்றி பல கட்டமாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 34 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கண் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்ய உள்ளனர்.

    அவர்களில் எத்தனை பேருக்கு கண் புரை நோய் உள்ளது என கண்டறிந்து, அவர்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எந்த அளவுக்கு விழித்திரை பாதிப்பு இருக்கிறது என கண்டறியப்பட உள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு லேசர் மூலம் சிகிச்சை அளிப்பது அல்லது கண் உள் பகுதியில் ஊசி செலுத்தி சரி செய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பரிசோதனை செய்வதற்காக 6 குழுக்கள் நடமாடும் வாகனத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடமாடும் வாகனத்தை நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முதற்கட்டமாக இந்த குழுவினர் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதலப்பட்டு, பெரியகங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்த வாக்குச்சாவடிகளில் பரிசோதனை மேற்கொண்டு, அதில் எத்தனை பேருக்கு பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து பல கட்டங்களாக மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் இந்த பரிசோதனை நடக்க உள்ளது.

    நிகழ்ச்சியில் மாநில பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குனர் சந்திரகுமார், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் திட்ட மேலாளர்கள் (கடலூர்) கேசவன், ரவிச்சந்திரன் மற்றும் கண் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    புனிதவள்ளியின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் ரெட்டியூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் புனிதவள்ளி (வயது 24) இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுதம்ராஜா என்பவரை திருமணம் செய்தார். புனிதவள்ளி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் சிதம்பரம் கீழ மூங்கிலடி அடுத்த பாலுத்தாங்கரையில் உள்ள தனது தாய் வீட்டில் புனித வள்ளி இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ள பின் வாசலுக்கு செல்வதாக புனிதவள்ளி கூறிச் சென்றார். ஆனால் புனிதவள்ளி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது வயலில் மயங்கிய நிலையில் புனிதவள்ளி விழுந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் புனிதவள்ளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புனித வள்ளியின் தாய் கோமதி புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து புனிதவள்ளியின் இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியில் இருந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக 28-ந் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் எம்.பி. ரமேஷ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த 11- ந் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்த எம்.பி ரமேஷ் கடலூர் கிளை சிறையில் அடைக்கபட்டார்.

    அதன்பின்னர் ரமேஷ் எம்.பி. ஜாமீன் கோரிய மனுவையும் கடந்த 24 -ந்தேதி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரமேஷ் எம்.பி. க்கு வருகிற நவம்பர் 9 -ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். 

    பண்ருட்டி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் மரணம்

    பண்ருட்டி, அக்.27-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என். புரம், ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 85). இவர், பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்திவந்தார். இவரது மனைவி சதானந்தம் (70). சாதனந்தம்கடந்த சில நாட்களாக உடல்நலகுறைவு காரணமாக அவதிபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சதானந்தம் பரிதாபமாக இறந்தார்.

    மனைவி சதானந்தம் இறந்த சோகத்தில் அரசப்பன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று நள்ளிரவு 1 மணிஅளவில் அரசப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் வலிதாங்கமுடியாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த டாக்டரை வரவழைத்தனர். அரசப்பனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. * * * அரசப்பன், சதானந்தம்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் கொரோனா தாக்கம் குறைந்தது. எனவே நவம்பர் 1- ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அனைத்து துறையை சேர்ந்தவர்களும் கொரோனா தடுப்பூசிபோட அறிவுறுத்தப்பட்டது.

    அதன்பேரில் பெரும்பாலான ஆசிரியர்கள் தடுப்பூசிபோட்டுக்கொண்டனர். மேலும் பள்ளிகள் திறப்புக்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கடலூர்மாவட்டத்தில் ஒருசில ஆசிரியருக்கு கொரோனா ஏற்பட்டு வந்ததையடுத்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்த ஆசிரியை ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்.

    அதனை தொடர்ந்து ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் எவ்வித தொற்று பாதிப்பும் இல்லை என உறுதியானது.

    மேலும் ஆசிரியை குடும்பத்தினருக்கும் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரியவந்தது.
    திட்டக்குடி கோட்டத்திற்குட்பட்ட கொட்டாரம், பெண்ணாடம், தொழுதூர், அடரி ஆகிய துணை மின் நிலைய பகுதியான ஆதமங்கலம், புவனூர், லட்சுமணாபுரம், ஏந்தல் உயர் மின்பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    திட்டக்குடி:

    திட்டக்குடி கோட்டத்திற்குட்பட்ட கொட்டாரம், பெண்ணாடம், தொழுதூர், அடரி ஆகிய துணை மின் நிலைய பகுதியான ஆதமங்கலம், புவனூர், லட்சுமணாபுரம், ஏந்தல் உயர் மின்பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆதமங்கலம், வையங்குடி, நாவலூர், நிதிநத்தம், ஏ.அகரம், செங்கமேடு, சாத்தநத்தம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, கே.கே.சேரி, பெலாந்துறை, லஷ்மணாபுரம், கீழகல்பூண்டி, மேலகல்பூண்டி, வடகராம்பூண்டி, கொரக்கைவாடி, ஆலத்தூர், அடரி, அ.களத்தூர், ஜா.ஏந்தல், அசகளத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை திட்டக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    புவனகிரி அருகே மேல்குறியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மருத பிள்ளை (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர், சேதமடைந்த வீட்டின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக வீட்டின் மேற்கூரை இரும்பு தகரத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதையறியாத மருதபிள்ளை மேற்கூரையை அப்புறப்படுத்தியபோது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×