என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண்ருட்டி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் மரணம்
பண்ருட்டி, அக்.27-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என். புரம், ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 85). இவர், பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்திவந்தார். இவரது மனைவி சதானந்தம் (70). சாதனந்தம்கடந்த சில நாட்களாக உடல்நலகுறைவு காரணமாக அவதிபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சதானந்தம் பரிதாபமாக இறந்தார்.
மனைவி சதானந்தம் இறந்த சோகத்தில் அரசப்பன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று நள்ளிரவு 1 மணிஅளவில் அரசப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் வலிதாங்கமுடியாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த டாக்டரை வரவழைத்தனர். அரசப்பனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. * * * அரசப்பன், சதானந்தம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்