என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் தி.மு.க. எம்.பி.க்கு 9-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியில் இருந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக 28-ந் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் எம்.பி. ரமேஷ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 11- ந் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்த எம்.பி ரமேஷ் கடலூர் கிளை சிறையில் அடைக்கபட்டார்.
அதன்பின்னர் ரமேஷ் எம்.பி. ஜாமீன் கோரிய மனுவையும் கடந்த 24 -ந்தேதி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரமேஷ் எம்.பி. க்கு வருகிற நவம்பர் 9 -ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்