என் மலர்
கடலூர்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது21). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். வினோத்குமார் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள மணிமுக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். தற்போது பெய்த மழையினால் அந்த தடுப்பணையில் வெள்ள நீர் பெருக் கெடுத்து ஓடியது.
வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தடுப்பணையின் குறுக்கே நடந்து சென்று மறுகரையில் உள்ள மதகின் ஆழமான பகுதியில் இறங்கி குளித்து கொண்டிருந்தார்.
வினோத்குமார் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லபட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் வினோத்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விருத்தாசலம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மணிமுக்தா ஆற்றில் இறங்கி வினோத் குமாரை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கீழபாலையூர் அணைக்கட்டு பகுதியில் இறந்த நிலையில் வினோத்குமாரின் உடல் கரைஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புகுழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வினோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
வினோத்குமார் இன்னும் சில தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெரு அருகில் உள்ள பாப்பான்குளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் மணிலா, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த காரணத்தால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. மழை நின்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் விளைநிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடியாமல் அப்படியே நிற்கிறது.
இதனால் பயிர்கள் அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள வடிகால் ஓடையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வடியாமல் நிற்கிறது. தற்போது சுமார் 40 ஏககர் நிலப் பரப்பில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநின்றதும் தண்ணீரை வடியவைத்து விட்டு, சேதமடைந்த பயிரை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தோம். ஆனால் தண்ணீர் வடியாமல் இருப்பதால் எங்களது பயிர்கள் தற்போது முழுமையாக அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க வடிகால் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மழைநீர் குட்டையில் நேற்று இரவு 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று படுத்திருந்தது.
இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் திரண்டனர். தற்போது கடலூர் மாவட்டத்தில் பலத்த மழைபெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வீடுகளை சூழ்ந்தும் மழைநீர் நிற்பதால் தங்களது பகுதிக்கும் முதலை வந்திருக்கும் என அதிர்ச்சியில் உரைந்து காணப்பட்டனர்.
இதுபற்றி கடலூர் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனசரகர் அப்துல் அமீது தலைமையில் வன ஆர்வலர் செல்லா மற்றும் பலர் வெள்ளக்கரை விரைந்தனர். மழைநீரில் படுத்திருந்த முதலையை வன ஆர்வலர் செல்லா பிடிக்க முயன்றார். அப்போது அந்த முதலை வாலால் சுழட்டி தாக்கியது. இதில் அவர் லேசான காயமடைந்தார்.
உடனே அந்த முதலை தப்பி செல்ல முயன்றது. உஷாரான வன அலுவலர்கள் முதலையை வன ஆர்வலர் செல்லா உதவியுடன் வலைபோட்டு மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த முதலை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முதலைகள் இருக்கும் இடத்தில் விடப்பட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் இரவு நேரத்தில் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. நள்ளிரவில் மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
கடலூர்-173.2, கலெக்டர் அலுவலகம்-170.2, பரங்கிப் பேட்டை-105.2, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி-100, வானமா தேவி-98.8, வேப்பூர்-87, குறிஞ்சிப்பாடி-85, காட்டுமயிலூர்-84, கொத்தவாச்சேரி-83, வடக்குத்து-70.5, புவனகிரி-70, மே.மாத்தூர்-70, பண்ருட்டி-66, அண்ணாமலைநகர்-65, காட்டுமன்னார் கோவில்-64, சிதம்பரம்-63.2, சேத்தியத்தோப்பு-61.2, லால்பேட்டை-60.6, விருத்தாசலம்-53.2, குப்பநத்தம்-52, ஸ்ரீமுஷ்ணம்-51.2, பெலாந்துறை-43.2, கீழச்செருவாய்-34, தொழுதூர்-27, லக்கூர்-9.3.
கடலூர் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரத்தில் மொத்தமாக-1846.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் ஆண்டு சராசரி மழை அளவு 130 செ.மீ. ஆகும்.
இதில் குளிர் காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்கள், கோடைக்காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்கள், தென் மேற்கு பருவமழையான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் சராசரியாக 40 முதல் 60 செ.மீ., மழை பெய்யும்.
புதுவையின் ஆண்டு சராசரி மழையின் பெரும் பகுதியை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் 70 முதல் 80 செ.மீ., மழை பெய்யும். ஒவ்வொரு பருவத்திலும் சராசரி அளவை விட கூடுதலாகவே மழை பெய்து வருகிறது.
அதில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 96.1 செ.மீ., அளவு மழை பெய்தது.
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இருப்பினும் அதற்கு முன்பாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 27 செ.மீ., மழை பெய்தது. அதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஆண்டின் சராசரி மழை அளவை எட்டியது.
கடந்த மாதம் 26-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 104.72 செ.மீ., மழை கொட்டியுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டில் நேற்று காலை 8.30 மணி வரை மொத்தம் 227.8 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இது ஆண்டின் சராசரி அளவை விட 75 சதவிகிதம் கூடுதலாகும்.
குழித்துறை:
தென்காசி மாவட்டம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 42). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த ஞாறான்விளை தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
விற்பனைக் கூடத்தில் கடந்த 2-ந் தேதி படிக்கற்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக ராஜலிங்கத்துக்கும், அப்பகுதியில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த செல்லக்குட்டி என்ற சுரேஷ், ஞாறான்விளை சேர்ந்த மணி ஆகியோருக்கும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜலிங்கம் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் செல்லக்குட்டி என்ற சுரேஷ் மற்றும் மணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக மேல் அருங்குணத்தை சேர்ந்த நரி என்ற சிவபிரதாபன் (வயது 22), விமல் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதியாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் பார்த்திபன் மட்டும் பணியில் இருந்தார். மற்ற போலீசார் ரோந்து சென்று விட்டனர். விசாரணை கைதியாக இருந்த சிவபிரதாபன் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று வருவதாக பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனிடம் தெரிவித்தார்.
அதற்கு அவர் ரோந்து சென்ற போலீசார் திரும்பி வந்தவுடன் உன்னை அனுப்புகிறேன் என்று கூறினார். அப்போது சிவபிரதாபன் பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓடினார். உடனே போலீஸ்காரர் பார்த்திபன் விரட்டிசென்று சிவபிரதாபனை பிடிக்க முயன்றார். ஆனால் சிவபிரதாபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய சிவபிரதாபனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.






