என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலை- கிராம மக்கள் அதிர்ச்சி
Byமாலை மலர்2 Dec 2021 4:01 AM GMT (Updated: 2 Dec 2021 4:01 AM GMT)
கடலூர் அருகே ஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலையை மடக்கிப்பிடித்த வன அலுவலர்கள் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முதலைகள் இருக்கும் இடத்தில் விட்டனர்.
கடலூர்:
கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மழைநீர் குட்டையில் நேற்று இரவு 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று படுத்திருந்தது.
இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் திரண்டனர். தற்போது கடலூர் மாவட்டத்தில் பலத்த மழைபெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வீடுகளை சூழ்ந்தும் மழைநீர் நிற்பதால் தங்களது பகுதிக்கும் முதலை வந்திருக்கும் என அதிர்ச்சியில் உரைந்து காணப்பட்டனர்.
இதுபற்றி கடலூர் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனசரகர் அப்துல் அமீது தலைமையில் வன ஆர்வலர் செல்லா மற்றும் பலர் வெள்ளக்கரை விரைந்தனர். மழைநீரில் படுத்திருந்த முதலையை வன ஆர்வலர் செல்லா பிடிக்க முயன்றார். அப்போது அந்த முதலை வாலால் சுழட்டி தாக்கியது. இதில் அவர் லேசான காயமடைந்தார்.
உடனே அந்த முதலை தப்பி செல்ல முயன்றது. உஷாரான வன அலுவலர்கள் முதலையை வன ஆர்வலர் செல்லா உதவியுடன் வலைபோட்டு மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த முதலை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முதலைகள் இருக்கும் இடத்தில் விடப்பட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மழைநீர் குட்டையில் நேற்று இரவு 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று படுத்திருந்தது.
இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் திரண்டனர். தற்போது கடலூர் மாவட்டத்தில் பலத்த மழைபெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வீடுகளை சூழ்ந்தும் மழைநீர் நிற்பதால் தங்களது பகுதிக்கும் முதலை வந்திருக்கும் என அதிர்ச்சியில் உரைந்து காணப்பட்டனர்.
இதுபற்றி கடலூர் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனசரகர் அப்துல் அமீது தலைமையில் வன ஆர்வலர் செல்லா மற்றும் பலர் வெள்ளக்கரை விரைந்தனர். மழைநீரில் படுத்திருந்த முதலையை வன ஆர்வலர் செல்லா பிடிக்க முயன்றார். அப்போது அந்த முதலை வாலால் சுழட்டி தாக்கியது. இதில் அவர் லேசான காயமடைந்தார்.
உடனே அந்த முதலை தப்பி செல்ல முயன்றது. உஷாரான வன அலுவலர்கள் முதலையை வன ஆர்வலர் செல்லா உதவியுடன் வலைபோட்டு மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த முதலை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முதலைகள் இருக்கும் இடத்தில் விடப்பட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X