search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிடிபட்ட முதலையை காணலாம்
    X
    பிடிபட்ட முதலையை காணலாம்

    ஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலை- கிராம மக்கள் அதிர்ச்சி

    கடலூர் அருகே ஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலையை மடக்கிப்பிடித்த வன அலுவலர்கள் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முதலைகள் இருக்கும் இடத்தில் விட்டனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மழைநீர் குட்டையில் நேற்று இரவு 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று படுத்திருந்தது.

    இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் திரண்டனர். தற்போது கடலூர் மாவட்டத்தில் பலத்த மழைபெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வீடுகளை சூழ்ந்தும் மழைநீர் நிற்பதால் தங்களது பகுதிக்கும் முதலை வந்திருக்கும் என அதிர்ச்சியில் உரைந்து காணப்பட்டனர்.

    இதுபற்றி கடலூர் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனசரகர் அப்துல் அமீது தலைமையில் வன ஆர்வலர் செல்லா மற்றும் பலர் வெள்ளக்கரை விரைந்தனர். மழைநீரில் படுத்திருந்த முதலையை வன ஆர்வலர் செல்லா பிடிக்க முயன்றார். அப்போது அந்த முதலை வாலால் சுழட்டி தாக்கியது. இதில் அவர் லேசான காயமடைந்தார்.

    உடனே அந்த முதலை தப்பி செல்ல முயன்றது. உஷாரான வன அலுவலர்கள் முதலையை வன ஆர்வலர் செல்லா உதவியுடன் வலைபோட்டு மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த முதலை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முதலைகள் இருக்கும் இடத்தில் விடப்பட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.



    Next Story
    ×