என் மலர்
கடலூர்
- திருப்பணி வேலைகளுக்கு உதவுமாறு கோவில் பக்தர்கள் டி.டி.வி. தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
- அமமுக செயலாளர் ஆடிட்டர் சுந்தர மூர்த்தியை அழைத்தார். அவரிடம் கோவில் முகப்பு கோபுரத்தை சொந்த செலவில் கட்டித்தருவதாக உறுதியளித்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளம் திருத்துறையூர் கிராமத்தில் சிஷ்ட குருநாதர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நேற்று மாலை சாயரட்சை பூஜை நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றகழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அவரது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் 1008 சகஸ்கர நாம அர்ச்சனை செய்தனர்.
முன்னதாக அவரை அ.ம.மு.க. நிர்வாகிகள், கோவில் நிர்வாகத்தினர், ஊர் பிரமுகர்கள், கோவில் அர்ச்சகர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். திருப்பணி வேலைகளுக்கு உதவுமாறு கோவில்பக்தர்கள் டி.டி.வி. தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அருகில் இருந்த கடலூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ஆடிட்டர் சுந்தர மூர்த்தியை அழைத்தார். அவரிடம் கோவில் முகப்பு கோபுரத்தை சொந்த செலவில் கட்டித்தருவதாக உறுதியளித்தார். அதற்கான பூர்வாங்க பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஆடிட்டர் சுந்தர மூர்த்திடம் தெரிவித்தார்.
இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில்பயங்கர சத்தத்துடன் மோதியது.
- சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
கடலூர்:
புதுவையில் இருந்து சேலத்திற்கு பண்ருட்டி வழியாக லாரி ஒன்றுஇரும்பு லோடு ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பண்ருட்டி திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே வந்த போது நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில்பயங்கர சத்தத்துடன் மோதியது. அதிஷ்டவசமாக லாரி டிரைவர், எதிரே வந்த வாகன ஓட்டிகள் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
- பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 48). கூலித் தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிள் பண்ருட்டிக்கு வந்தார். பண்ருட்டியில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கொஞ்சிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் பண்ருட்டி அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கபட்டு, பின் மேல்சிகிச்சைசக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
- இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட நகர ஒன்றிய வட்ட செயலாளர்கள் கூட்டம் கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன் , மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரவிச்சந்திரன், அசோகன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் , தண்டபாணி, பாலமுருகன், ஜெயபாண்டியன், ஏழுமலை, விஜய், பஞ்சாசரம், அன்பழகன், ஆழ்வார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள சேதமைடைந்த முந்திரி பயிர்களை தோட்டக்கலைத் துறை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் எம். புதூர், திருவந்திபுரத்தில் செம்மண் குவாரிகள் அமைக்கப்பட்டு 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டங்கி ஏரி உள்ள பகுதியில் நடுவீரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் செம்மண் பாதுகாப்பு இன்றி எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளதா என்பதை சுரங்கத்துறையும் மாவட்ட நிர்வாகமும் தெளிவுப்படுத்த வேண்டும். எனவே இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முறைகேடுகளாக நடக்கும் மண் குவாரிகளை இழுத்து முடவும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்ததால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்து விழுந்தன.
- மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ,காடாம்பு லியூர், பாவைகுளம்,சிறுதொண்டமாதேவி, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்தது.இதனால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்துவிழுந்தன. 100 ஏக்கருக்கு மேற்பட்ட மா, பலா, வாழை மரங்கள் சாய்ந்தது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிப்படைந்த இடங்களை மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கடலூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கைமனுவில்கோரியுள்ளார்.
- கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
- காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர்.
கடலூர்:
பண்ருட்டி கொம்பு செட்டி பாளையத்தில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்ம னை அழைப்பதற்காக, இந்தக்கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதேபோல நேற்று அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.அய்யனார் கோவில் குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் கத்தியால் தங்கள்கைகளில் வெட்டிக் கொண்டேஅம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அப்போது இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகள், நெஞ்சு பகுதியில் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்துச் சென்றனர். கத்தி போடும்போது ஏற்பட்ட வெட்டுக் காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
- புதுப்பேட்டை அருகே கோட்டலாம்பாக்கம் சித்த வட மடம் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
- பல்வேறு வீடுகளின் முன்பாக மை பூசப்பட்ட மண் ஓடு கிடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, புதுப்பேட்டை அருகே உள்ளது கோட்டலாம்பாக்கம் சித்த வட மடம் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் இருந்து இருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் உள்ள வீதியில் ஒரு வீட்டின் முன் மனித உடலின் மண்டை ஓடு கிடந்தது. இந்த மண்டை ஓட்டில் மை பூசப்பட்டு இருந்தது. இந்த மண்டை ஓட்டை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் கூறலாம் என்று சென்ற போது அங்கும் இதே பொருட்கள் கிடந்துள்ளது. இதே போல அந்த வீதியில் இருந்த பல்வேறு வீடுகளின் முன்பாக மை பூசப்பட்ட மண் ஓடு கிடந்தது. சில வீடுகளின் முன்பு கால் எலும்புகளும் கிடந்தன.
அப்போது அங்கு வந்த மாற்றுத் திறனாளி சங்கர், சாலையில் கிடந்த எலும்புகளை சேகரித்து அருகில் இருந்த ஏரியில் வைத்து எரித்தார். இதையடுத்து அந்த வீதியில் வசிக்கும் பொது மக்கள் புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்தனர். மர்ம நபர்கள், விஷமிகள் யாராவது இப்படி செய்து இருக்கலாம். மந்திரம், தந்திரம் தெரிந்த நபர்கள் இப்படி செய்து இருக்கலாம். மக்களை அச்சுறுத்த வேண்டும். பயமுறுத்த வேண்டும் என்று இவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளி சங்கரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் எரிக்கப்பட்ட மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி ஆய்து செய்து வருகின்றனர். கடலூரில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பல்வேறு வீதிகளில் வசிப்பவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த வீதியே போர்க்களம் போல காணப்பட்டது. இதனால் பண்ருட்டி பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
- 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டு வந்தனர்.
- 2நாட்களாக வனத்துறை யினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது.
கடலூர்:
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் கடற்கரையோரம் முட்டையிட்டு செல்வது வழக்கம். முட்டைகளை கால்ந டைகள் மற்றும் பறவை இனங்கள் இறையாக சாப்பிடு வதால் வனத்துறையினர் உதவியுடன் கடலூர் சமூக வன ஆர்வலர் செல்லா அதிகாலையில் கடற்கரையோரம் பயணித்து ஆமைகள் விட்டுச்செல்லும் முட்டைகளை சேகரித்து அதனை பராமரித்து குஞ்சுகளை பொறித்த பின்னர் பாதுகாப்பாக கடலில் விட்டு வரும் பணியை கடந்த சில ஆண்டுகளாக சரியான முறையில் செய்து வந்ததால் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் கடலூர் கடற்கரையோரம் ஆமைகள் விட்டு சென்ற நிலையில் அதனை பாதுகாப்பாக மீட்டு வனத்துறை அதிகாரி களுடன் வன ஆர்வலர் செல்லா பாதுகாத்து கடந்த ஒரு மாதமாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2நாட்களுக்கு முன்வனத்துறையினர் சமூக வன ஆர்வலரான செல்லாவை பணியில் ஈடுபடக்கூடாது என கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் 2நாட்களாக வனத்துறை யினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இன்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆமைக்கு ஞ்சுகள் வெளியே உயிரிழந்து காணப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, சோகத்துடன் உயிரிழந்த ஆமைக்குஞ்சுகளை சேகரித்து வைத்தனர். இதில் உயிருடன் இருந்த ஆமை குஞ்சுகளை தண்ணீரில் விட்டு பின்னர் கடலில் பாதுகாப்பாக விட்டனர். அரிய வகை ஆமைக்கு ஞ்சுகள் அதனுடைய செயல்பா டுகள் என்னென்ன? என்பதனை வன ஆர்வலர் செல்லா அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை முழுமையாக பாதுகாப்பு படுத்தி வந்த நிலையில், வனத்துறையின் அலட்சியத்தால் 200-க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி அரியவகை ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக மீட்டு அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு வன ஆர்வலர் செல்லாவிற்கு வனத்துறை அதிகாரிகள் எந்தவித காரணமும் இன்றி பணி செய்ய விடாமல் ஏற்படுத்தியதை விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விபத்தில் பலியான தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
- கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
கடலூர்:
புவனகிரி அருகே உள்ள வில்லியநல்லூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் நவீன்ராஜ் (வயது 48), தொழிலாளி. இவர் கடந்த 9.7.2018 அன்று மோட்டார் சைக்கிளில் கடலூர்-பூண்டியாங்குப்பம் சாலையில் சென்ற போது, அவ்வழியாக வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில் உயிரிழந்தார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் நஷ்டஈடு பெற்று தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 21.1.2021 அன்று, நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.12 லட்சத்து 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காததால் நவீன்ராஜ் பெற்றோர், கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், விபத்தில் இறந்த நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.15 லட்சத்து 4 ஆயிரத்து 311 கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சம்ப ந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் ஜப்தி செய்ய ப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
- அகஸ்தியா புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- 3 மாதமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார்.
கடலூர்:
புதுச்சேரி பிள்ளையார் குப்பம் சேர்ந்த அகஸ்தியா (வயது 19). இவர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று அகஸ்தியா தனது வீட்டில் இருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்தார். பின்னர் அகஸ்தியா மீண்டும் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அகஸ்தியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி நகரம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர்.
- மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த 16 பேர் பிடிபட்டனர்.
கடலூர்:
பண்ருட்டியில் ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் நடந்தது. இதில் பண்ருட்டி நகரம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர். பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காட்டும் கேமராவையும் போலீசார் எடுத்துச் சென்றனர். இதன் மூலம் 100 பேர் சோத னைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 2 பழைய குற்றவாளிகள் அடையாளம் காண ப்பட்டனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் வாகன சோதனையும் தீவிரமாக நேற்று நடைபெற்றது. சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த 16 பேர் பிடிபட்டனர். இது தவிர விதிமீறல் வாகனங்களும் போலீசாரிடம் சிக்கின. மொத்தம் 172 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனைத்து வாகனங்களின் பதிவு எண்கள் சரிபார்க்க ப்பட்டது.
- 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
- சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த நிலையில் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கொடுத்த புகாரின் நெல்லிக்குப்பம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.






