என் மலர்tooltip icon

    கடலூர்

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

    கடலூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத ஊழியர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணி புரியும் அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணிக்கு வரவில்லை. ஆனால் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் கடலூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார்.
    • இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது.

    கடலூர்:

    காட்டுமன்னா ர்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் வெள்ளாலர் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். ஜவுளிக்கடையில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் பிஸ்கட் கேட்டனர். இதனை வாங்க சைக்கிளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றார்.

    அப்போது வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார். இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்  இத்தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கோவிந்தராஜின் உடலை மீட்டு போலீசாரிடம் ஓப்படைத்தனர் பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைத்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனலட்சுமி (வயது 16). நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இவர் , பஸ்சில் நின்றபடி பயணம் செய்த மாணவி தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார்‌.
    • இதில் பஸ்சில் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே மாணவி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த இடையார் குப்பம் சிறுநங்கைவாடி பலாப்பட்டு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அல்லி முத்து. இவரது மகள் தனலட்சுமி (வயது 16). நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 22.6.2018 அன்று சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ்ஸில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பஸ் கொஞ்சிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால், பஸ்சில் நின்றபடி பயணம் செய்த மாணவி தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சில் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே மாணவி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக அவரது பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முக்குந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த தனலட்சுமி குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 9 லட்சம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனை தொடர்ந்து நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டதில், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • சுப்பரமணி (வயது 60). இவர் பண்ருட்டி பஸ் நிலைய பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு. மனைவி, குழந்தைகள் இல்லை. இவர் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெருவில்
    • இன்று காலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது..

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் சுப்பரமணி (வயது 60). இவர் பண்ருட்டி பஸ் நிலைய பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. இவர் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், புஷ்பராஜ், செல்வகணபதி ஆடியோ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுப்பிரமணியின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை குறித்து கோரிக்கை மனுக்களை நேரில் வந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றத்திறனாளி திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி. பட்டதாரி என்பது தெரிய வந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் இவரது தந்தைக்கு சுய தொழில் செய்வதற்கு பெட்டிக்கடை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளியான நான் கடையை நடத்தி வருகிறேன்.. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அனுமதி பெற்ற பிறகு கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதால் கடந்த 3 மாதமாக வருமானம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் 90 வயது எனது தாயார் மிகுந்த அவதி அடைந்து வருகின்றார். ஆகையால் சாலை ஓரத்தில் உள்ள எனது பெட்டி கடைக்கு உரிய அனுமதி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஸ்கூடெல்லா மேரி கூறினார். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து உரிய தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி போலீசார் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் மகனுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகனுடன் தாய் சாலையில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் பண்ருட்டி திடீர் குப்பத்தை சேர்ந்த சக்தி (வயது 42). என்இபது தெரிய வந்தது இவரது பாட்டனாருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் இருந்து வந்தது . இதனை எனது தந்தை பராமரித்து வந்த நிலையில் அவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த 5பேர் நிலத்தை அபகரித்து போலி பத்திரம் தயாரித்து அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டு பறித்து கொண்டனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என சக்தி தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ரவிக்குமார், எஸ்.சி. எஸ்.டி பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் மெயின் பஜார் காந்தி சிலை அருகில் ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யபட்டதை கண்டித்து அறவழியில் சத்தியா கிரக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எம்.எல்.ஏ. எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன் வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளஞ்செழியன், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ரவிக்குமார், எஸ்.சி. எஸ்.டி பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐ.என்.டி.யு.சி அலுவலக செயலாளர் மைக்கேல் ரவி, பணி தலைவர் குமார் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்
    • விழமங்கலம் மஞ்சினி நகர் சங்கர் (48), சத்தியமூர்த்தி தெரு அப்துல் குத்தீஸ் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அரசினால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி அம்பேத்கர் நகர் கலைவாணன் (47), கண்டரக்கோட்டை சுரேஷ் (36) ஆகியோரையும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகர் முரளி ( 38 ), விழமங்கலம் மஞ்சினி நகர் சங்கர் (48), சத்தியமூர்த்தி தெரு அப்துல் குத்தீஸ் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை பலியானது.
    • பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன். நெடுஞ்சாலை துறை ஊழியர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு தேஜஸ்வரன் (வயது 3) என்ற குழந்தை இருந்தது.

    இன்று காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்த தேஜஸ்வரன், சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் திடீரென தேஜஸ்வரன் மீது மோதியது.

    குழந்தையின் தலையில் பள்ளி வேன் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர்.

    விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தை தேஜஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக குஜராத்தில் ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார்.
    • பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார்.

    சிதம்பரம்:

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக குஜராத்தில் ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடுத்தவரே இந்த வழக்கை நிறுத்தியநிலையில், பா.ஜ.க. அரசு நீதிபதியை மாற்றி புதிய நீதிபதியை நியமித்து இந்த வழக்கை புதுப்பித்து நீதியை வாங்கி உள்ளனர்.

    பொதுவெளியில் ராகுல் காந்தி பேசினால் அதற்கு பிரதமர் பதில் அளிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உட்பட யார் பேசினாலும் அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்பதாலும், இதனால் பல உண்மைகள் வெளிவரும் சூழல் உருவாகும் என்தாலும் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதி வாங்கப்பட்டுள்ளது.

    ஜனநாயக நாட்டில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசினால் அதற்கு ஆளும்கட்சி பதில் அளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவிவரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார்.

    1. பிரதமர்மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் அதானி எப்படி உடன் செல்கிறார்? அல்லது அதற்கு முன்பே எப்படி செல்கிறார்? 2. பிரதமர்மோடி வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பியபிறகு அதானிக்கு எப்படி முதலீடு வருகிறது. 3. ஒரு நாட்டிற்கு நீங்கள் செல்லும்போது ஒரு தனிமனிதருக்கு மட்டும் தொழில் தொடங்க வாய்ப்பு எப்படி ஏற்படுகிறது. 4. ஷெல் நிறுவனத்திடம் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி நிதிபரிவர்த்தனை நடந்தது எப்படி, இதற்கு பிரதமர் மோடி பதில் அளித்தால் பல்வேறு உண்மைகள் வெளிப்படும்.

    இதனால் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பதற்காக நீதிமன்ற தீர்ப்பை காட்டி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் எனக்கு வரும்போது நான் கும்பகோணத்துக்கு ரெயிலில் சென்றுகொண்டிருந்தேன். எனது 60 ஆண்டுகால காங்கிரஸ் பயணத்தில் இயற்கையாகவே போராட்ட குணம் கொண்டவன் நான். அதனால் என்னுடன் இருந்த 2 பேருடன் சேர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டேன். கூட்டம் சேர்ந்தால்தான் போராட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜா கூலித் தொழிலாளி இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை பவளக்கொடி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் நாட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இவர் சோர்வாகவும், வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
    • சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்துள்ளார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

    அதே பகுதியான விலங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24). அவரது சகோதரி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்து, 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவரது தாயாரிடம் தெரிவித்தார்.

    இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்தபோது ராஜ்குமார் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×