search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் அழுகிய நிலையில் ஓட்டல் தொழிலாளியின் பிணம்:போலீஸார் தீவிர விசாரணை
    X

    பண்ருட்டியில் அழுகிய நிலையில் ஓட்டல் தொழிலாளியின் பிணம்:போலீஸார் தீவிர விசாரணை

    • சுப்பரமணி (வயது 60). இவர் பண்ருட்டி பஸ் நிலைய பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு. மனைவி, குழந்தைகள் இல்லை. இவர் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெருவில்
    • இன்று காலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது..

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் சுப்பரமணி (வயது 60). இவர் பண்ருட்டி பஸ் நிலைய பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. இவர் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், புஷ்பராஜ், செல்வகணபதி ஆடியோ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுப்பிரமணியின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×