என் மலர்
நீங்கள் தேடியது "moral struggle"
- நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ரவிக்குமார், எஸ்.சி. எஸ்.டி பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் மெயின் பஜார் காந்தி சிலை அருகில் ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யபட்டதை கண்டித்து அறவழியில் சத்தியா கிரக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எம்.எல்.ஏ. எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன் வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளஞ்செழியன், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ரவிக்குமார், எஸ்.சி. எஸ்.டி பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐ.என்.டி.யு.சி அலுவலக செயலாளர் மைக்கேல் ரவி, பணி தலைவர் குமார் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- அமலாக்க துறையை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமலாக்க துறையை கண்டித்து சத்யாகிரக அறவழிப்போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.நகர தலைவர் வழக்கறிஞர் எஸ்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கில் இருந்து சோனியா காந்தியை விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும்,மத்திய அரசை கண்டித்தும்,மத்திய அமலாக்கதுறையை கண்டித்தும் அமைதி வழி சத்யா கிரக போராட்டம் நடந்தது.
இந்த சத்யாகிரக போராட்டத்தில் மாநில பொது செயலாளர் ராஜ்குமார், மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் பியாரேஜான், வாலாஜா ஒன்றிய தலைவர் கணேசன், எஸ்சி., எஸ்டி மாவட்டத் தலைவர் நாகேஷ் மாநில பொதுக்குழு உறுப்பினர் விநாயகம் மாவட்ட துணைத் தலைவர் மோகன் மனித உரிமை மாவட்ட தலைவர் ஜானகிராமன் பஞ்சாயத்து ராஜ் சங்க மாவட்டத் தலைவர் குப்புசாமி ராணிப்பேட்டை நிர்வாகிகள் முருகன் மோகனசுப்பிரமணியம் பஞ்சாயத்து ராஜ் சங்க ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலச்சந்தர் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நியாஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்ததற்கு நீதி கேட்டு அந்த மாணவியின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆரம்பத்தில் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
- பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
திருச்சி:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்ததற்கு நீதி கேட்டு அந்த மாணவியின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆரம்பத்தில் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையில் மெத்தனப் போக்கினால் போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது. வன்முறை நடந்த பின்னர் தான் அங்கு கலெக்டர், கல்வி அதிகாரி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.
ஸ்ரீமதி உண்மையில் தற்கொலை செய்தாரா? அல்லது பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலில் தற்கொலைக்கு தள்ளப்பட்டாரா? மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார் என்றால் அந்த சி.சி.டி.வி. பதிவினை ஏன் வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போது காவல்துறையினர் சகட்டுமேனிக்கு எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் மாணவியின் இறப்புக்கு குரல் கொடுத்தவர்களை கைது செய்து 17 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பது ஏற்புடையது அல்ல. வன்முறையில் ஈடுபட்டவர்களை பொருட்களை சூறையாடி தூக்கி சென்றவர்களை இனம் கண்டு கைது செய்யுங்கள். மாணவியின் இறப்பில் மர்மம், சந்தேகங்கள் நிறைய இருக்கிறது.
தமிழகத்தில் பல பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலரே நுழைய முடியாத அளவுக்கு அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களாக இருக்கின்றன. இதுபோன்ற கல்வி நிறுவனங்களை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் தான் மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளி கூட்டமைப்பு நடத்திய போராட்டம் காரணமாக தமிழகத்தில் 987 பள்ளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா புறநகர் மாவட்ட செயலாளர்கள் ராவணன் ராஜேஷ் பிரணவேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






