என் மலர்
கோயம்புத்தூர்
- பிரகாஷ் என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்
- குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்கலாம்
கோவை,
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக, பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டார்.
இதன்படி பிரகாஷ் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் இதுவரை 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 7 பேர் கஞ்சா குற்றவாளிகள். எனவே கோவை மாவட்டத்தில் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை 9498181212, 77081 00100 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
- சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர்.
- அய்யப்பராசு கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் அய்யப்பராசு (வயது 33). பெயிண்டர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்க பணம், மோதிரம், வளையல், செயின், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
அதிகாலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அய்யப்பராசு அதிர்ச்சியடைந்தார். பின்னர்
உ
இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிய பெயிண்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி மீரா (29). கூலித் தொழிலாளி. இவர் சூலூர் அருகே உள்ள காடம்பாடியில் உள்ள தனியார் மில்லில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது அறைக்குள் நுழைந்த மர்மநபர் மீராவின் 1½ பவுன் கைசெயின், ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் அவருடன் தங்கி இருந்தவர்களின் 6 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது.
கோவை:
சில பல வருடங்களுக்கு முன்பு வரை கடைகள், ஓட்டல்கள், பெரிய அங்காடிகள் ஆகியவற்றிற்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் கைகளில் பணத்தை எடுத்து கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.
வங்கி கணக்கு வைத்திருக்கும் பலரும், வங்கிகளுக்கு சென்றே பணம் எடுப்பதும், பணம் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது நாகரீகம் வளர, வளர அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வங்கிகளில் பணம் போடுவது மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றை செய்து விடுகின்றனர்.
அதுபோன்று தற்போது ஓட்டல்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கையில் பணத்தை எடுத்து செல்வது கிடையாது.
கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, செல்போனில் உள்ள பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக பணத்தை செலுத்தி வருகின்றனர். அனைத்து கடைகளிலும் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடைக்காரர்களுக்கு சில்லரை மீதி கொடுப்பது போன்ற பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளன.
இதுவரை கடைகள், ஓட்டல்கள், வங்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கியூஆர் கோர்டு வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பஸ் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது. அப்படி கொடுப்பவர்களுக்கு, சில கண்டக்டர்கள் மீதி சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலர் சரியான சில்லறை எடுத்து வர வேண்டியதானே என கடிந்து கொள்வதும் உண்டு. கடிந்து கொண்டாலும் சில்லறையை கொடுத்து விடுவார்கள்.
இதனால் அனைத்து பஸ்களிலும் சில்லறை பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருக்கும். இதன் காரணமாக பல நேரங்களில் பெரிய அளவிலான தகராறுகள் கூட ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
அதற்கு எல்லாம் ஒரு தீர்வு காணும் விதமாக கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம் ஒன்று பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பஸ்களை இயக்கி வருகிறது.
இந்த 5 பஸ்களிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம்.
3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அந்த பஸ்களில் பயணிக்க கூடிய பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது.
இதுகுறித்து தனியார் பஸ் நிறுவன உரிமையாளரான கார்த்திக் பாபு கூறியதாவது:-
பஸ்களில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பஸ்களிலும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.
உடனே ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் புதிய கியூஆர் கோர்டு ஒன்றை செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பஸ்களிலும் ஒட்டினோம்.
இதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம். பஸ்சில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கு என அவருக்கு ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை என்பது குறைந்துள்ளது.
மேலும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த கியூஆர் கோர்டு வசதிக்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் முதல் முறையாக தனியார் டவுன் பஸ்சில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பயணிகள், இதுபோன்ற மற்ற பஸ்களிலும் செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
- 5 பேர் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
- பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
கோவை:
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளரான ஜமேஷா முபீன்(வயது 28) என்பவர் பலியானார்.
விசாரணையில் கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதும், இதற்கு ஜமேஷா முபீன் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் மீது ஏற்கனவே பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ்கான், முகமது தவுபீக், ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முகமது அசாருதீன், உமர் பாரூக், ஷேக் இதாயத்துல்லா சனோபர் அலி ஆகியோருடன் இணைந்து ஜமேஷா முபீன் கோவையில் தொடர் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டது வழக்கை விசாரித்த என். ஐ.ஏ. தனிப்படையினருக்கு தெரிய வந்தது.
தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ மூலம் இது தெரியவந்தது. பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது:-
அசாருதீன், அப்சர் ஆகியோர் ஜமேஷா முபீன் வெடி பொருட்களை கொள்முதல் செய்யவும், கலக்கவும் உதவி செய்து உள்ளனர். முகமது தல்கா கார் கொடுத்து உதவி செய்தார்.
பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் கியாஸ் சிலிண்டரை காரில் ஏற்ற உதவி செய்தனர். இந்த சதி திட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீட்டப்பட்டது. இந்த சதி திட்டத்தில் நீலகிரி குன்னூரை சேர்ந்த உமர் பாரூக்கை தலைவனாக தேர்வு செய்துள்ளனர். அவன் தலைவனாக இருந்து மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
முகமது தவுபீக்கிடம் ஜமேஷா முபீன் குண்டு தயார் செய்வதற்கான வரைபடங்கள், கையால் எழுதப்பட்ட விவரங்கள் கொண்ட நோட்டு புத்தகங்கள், பயங்கரவாத சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் ஆகியவற்றை கொடுத்து உள்ளார். இதனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற உமர் பாரூக்கும், ஜமேஷா முபீனும் நிதி வசூலித்துள்ளனர்.
சனோபர் அலியும் நிதி உதவி அளித்துள்ளார். பெரோஸ்கான் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்தார்.
மேலும் இவர்கள் அரசின் பொதுநிர்வாகம், போலீஸ், நீதித்துறை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசுக்கு எதிராக போர் தொடுப்பதே இந்த சதி திட்டத்தின் நோக்கம் என கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோவிலில் திருமணம் செய்தோம்.
- கணவரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோவை,
ஈரோட்டை சேர்ந்தவர் மாளவிகா (வயது22).திருநங்கையான இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.
அப்போது அவர் கூறி–யதாவது:-என்ஜினீயரிங் பட்டதாரியான நான் சென்னி மலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்தபோது புதுக்கோட்டையைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் மணிகண்டன் (23)என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம். பின்னர் நாங்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தோம். அதன்படி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோவிலில் வைத்து மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்தோம்.
பின்னர் ஒத்தக்கால் மண்டபத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
இந்த நிலையில் எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நாங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் எங்கள் 2 பேரையும் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வந்த எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவர் மீண்டும் வரவில்லை. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியவில்லை. எனவே எனது காதல் கணவரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
- மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்
- மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங் கப்பட்டு உள்ளன.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநா யக்கன்பாளையம் அருகே கூடலூரில் மாவட்ட வரு வாய் அலுவலகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வடக்கு வருவாய் கோட்டாட்டாட்சி யர் கோவிந்தன், கூடலூர் நகராட்சி தலைவர் அறி வரசு, பேரூராட்சித்தலைவர் விஸ்வபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது சமூகப்பா துகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 60 ஆயிரமும், வருவாய் துறை மூலம் 79 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 971 ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 57 பேருக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் இணையவழி பட்டாவும், மகளிர் சுய உதவிக்குழுவில் 2 பேருளுக்கு 28 லட்சம் மதிப்பிலான மானியத் தொகை, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 4 பேருக்கு 7 ஆயிரத்து 805 ரூபாய் மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் தாசில்தார் தங்கராஜ், கமிஷனர் பால்ராஜ், சிறப்பு தாசில்தார்கள் யமுனா, சரண்யா, நகராட்சி துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சபி அஹமது, நந்தினி, சபின் அஹமதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அந்நியன் சேட் மீது ஏற்கனவே கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் அந்நியன் சேட்டை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூ ரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் என்ற அந்நியன் சேட் (வயது 50). கூலித் தொழிலாளி.
இவர் மீது ஏற்கனவே கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.நேற்று இரவு 9.30 மணியளவில் போதையில் இருந்த அந்நியன் சேட் வெள்ளலூரில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு போத்தனூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ராஜதுரை என்பவர் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு சென்ற அந்நியன் சேட் சப்-இன்ஸ்பெக்டரிடம், சந்தோஷ் என்பவர் என்னி டம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் நீண்ட நாட்களாக அவர் பணத்தை திருப்பி தரவில்லை. எனவே அந்த பணத்தை உடனடியாக வாங்கி கொடுக்க முடியுமா முடியாதா என கேட்டார்.
அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் போதையில் உளராதே என கூறி அந்நியன் சேட்டை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். வீட்டிற்கு சென்ற அவர் பெட்ரோல் பாட்டிலுடன் மீண்டும் புறக்காவல் நிலையத்துக்கு வந்தார்.
அங்கு வைத்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்நியன் சேட்டை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததில், பனை, தென்னை மரங்கள், வாழைகள் வேருடன் சாய்ந்தன
- கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கோடை மழை பெய்தது.
எனவே அனல் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த நிலையில் நேற்று காலை நல்ல வெயில் இருந்தது. அதன்பிறகு மாலை நேரத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தன. அடுத்த சில நிமிடங்களில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் கோவை மாநகரில் உள்ள பெரிய கடை வீதி, காந்தி பார்க், லாலி ரோடு, ரெயில் நிலையம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், செல்வபுரம், சரவணம்பட்டி, ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் மழையில் நனைந்தபடி மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது.
கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியது. எனவே அங்கு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் தடாகம், கீரணநத்தம், வேடப்பட்டி, குரும்பபாளையம் ஆகிய பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பேரூர் பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்தது.
றித்து தகவலறிந்த தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் சராசரியாக 53 மி.மீ. மழை பெய்து உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
சின்கோனா-1, கல்லாறு-3, வால்பாறை-2, வால்பாறை தாலுகா-2, சூலூர்-12, கோவை தெற்கு-19, பீளமேடு விமான நிலையம்-6.40, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-7.69.
- கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.
- மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பவானி சங்கர் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ரங்கநாயகி(வயது72). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி செயினை பிடித்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் கிடைத்த 2 ½ பவுன் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
- ஒரு ஸ்கூல் பேக் தலா ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு குழந்தைகளுக்கு புதிய நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் சீருடைகள் வாங்கும் பணியில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் குழந்தைகளுடன் கோவையில் உள்ள கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கூட்டம் அலை மோதி வருகிறது.
கோவை கடைவீதிகளில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், தண்ணீர் பாட் டில்கள், டிபன் பாக்ஸ், லஞ்ச் பேக் ஆகியவை விற்பனைக்கு தயாராக உள்ளன. அடுத்தபடியாக வணிக வளாகங்களில் மாணவர்களுக்கான ஸ்கூல் பேக் விதம்விதமான ரகம், தினுசுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு சோட்டாபீம், ஸ்பைடர்மேன், ஆங்கி ரிபேர்ட்ஸ் உள்ளிட்ட கார்ட் டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பல்வேறு ரகம்-டிசைன்களில், குழந்தைகளை கவரும் வகையில் ஸ்கூல்பேக் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
ஒரு ஸ்கூல் பேக் தலா ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது. எனவே நடுத்தர குடும் பத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் விற்பனையாகும் ஸ்கூல் பேக்குகளை ரூ.300 முதல் ரூ.600 வரை மலிவான விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
இன்னொருபுறம் ஜவுளிக்கடைகளிலும் சீருடைகள் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கோவையின் அனைத்து பள்ளிகளுக்கு மான சீருடை துணிகள் பல்வேறு நிறம்-டிசைன்க ளில் விற்பனைக்கு வைக்கப் பட்டு உள்ளன.
அங்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளுக்கான சீருடைகளை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. அடுத்தபடியாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தையல் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.
இங்கு உள்ள டெய்லர்கள் மாணவர்களுக்கு சரியாக அளவெடுத்து சீருடைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை கடைவீதியில் உள்ள சாலையோரங்களில் ஸ்கூல் பேக் விற்கும் வியாபாரிகள் கூறியதாவது:-
பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்க இருப்பதால் ஸ்கூல் பேக் விற்பனை களைகட்டி உள்ளது. இங்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சமாக ரூ.800 வரை புத்தகப்பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களில் ஒரு சிலர் ஆன்லைன் மூலம் ஸ்கூல் பேக்குகளை வாங்கு கின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் ஓரளவு பாதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் பெரும்பா லானோர் புத்தகப்பை வாங்குவதற்காக கடை வீதிக்கு வருவதால், இங்கு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது என தெரிவித்து உள்ளனர்.
- உமர், முஜீபுர் ரகுமானிடம் சென்று பஸ்சை நகர்த்து மாறு கூறினார்.
- உக்கடம் போலீசார், முஜீபுர் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கேரளாவை சேர்ந்தவர் உமர்(வயது49). இவர் கேரள அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது பஸ்சுக்கு முன்பு மற்றொரு கேரள அரசு பஸ் நின்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை கேரளாவை சேர்ந்த முஜீபுர் ரகுமான்(48) என்பவர் ஓட்டினார். அவர், பின்னால் வந்த பஸ்சுக்கு வழிவிடவில்லை என தெரிகிறது.
இதையடுத்து உமர், முஜீபுர் ரகுமானிடம் சென்று பஸ்சை நகர்த்து மாறு கூறினார். இதயைடுத்து அவர் பஸ்சை நகர்த்தினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முஜீபுர் ரகுமான், தகாத வார்தைகளால் திட்டி டிரைவர் உமரை கையால் சரமாரியாக தாக்கினர். இதில் உமர் படுகாயம் அடைந்தார்.
இதனால் சிறிது நேரம் உக்கடம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பானது.
பின்னர் காயம் அடைந்த உமரை அருகில் இருந்த வர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கேரள அரசு பஸ் டிரைவர் உமர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார், முஜீபுர் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோதனையில் அறையில் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை கே.ஜி.சாவடி போலீசார் நவக்கரை தனியார் கல்லூரி அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்தார். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கஞ்சா எப்படி கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (வயது 22) என்பவரிடம் திருச்சூர் பஸ் நிலையம் சென்று வினித் என்பவரின் கஞ்சாவை வாங்கி வந்து உடன் படிக்கும் நண்பர்கள் உதவியுடன் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அறையில் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதனை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த மாணவர்கள் திருச்சூரை சேர்ந்த எம். அர்ஜூன் (21), எர்ணாகுள்தை சேர்ந்த வி. அர்ஜூன் (22), திருச்சூரை சேர்ந்த அக்சய் (22) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






