என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.
- கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
* குறைந்த விலையில் கிடைத்ததால் பலரும் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர்.
* டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர்.
* தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.
* தேர்தல் அரசியல் மட்டும் தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. எந்த புதிய திட்டமும் இல்லை.
* அதிகாரிகளை மாற்றி விட்டால் மட்டும் போன உயிர்கள் திரும்பி வந்துவிடுமா?
* எந்த சம்பவம் நடைபெற்றாலும் அதிகாரிகள் தான் பலிகடாவா? அதிகாரிகளை இடம் மாற்றுவதுதான் நடவடிக்கையா?
* கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது.
* போதையில்லா தமிழ்நாடு உருவாக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- தேர்வாளர்கள் இன்று முதல் தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- செப்டம்பர் 14ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ் அறிவிப்பு.
TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாளர்கள் இன்று முதல் தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவதற்கும் ஜுலை 19ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, செப்டம்பர் 14ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சியின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
- பிரேமலதாவை மருத்துவமனைக்குள் அனுமதித்து தங்களை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போலீசார், தேமுதிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரேமலதாவை மருத்துவமனைக்குள் அனுமதித்து தங்களை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
மற்ற கட்சியினரை உள்ளே அனுமதித்த போலீசார் தேமுதிகவினரை அனுமதிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர் வாக்குவாதத்தை அடுத்து தேமுதிகவினரை போலீசார் வெளியேற்றினர்.
- ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழப்பு காரணமாக கள்ளக்குறிச்சி முழுக்க கண்ணீர் வெள்ளம் பூண்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இதே போன்று கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி. உள்பட பத்து காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவவரும் கைது செய்யப்பட்டு தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது," என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய மரணங்கள் மாநிலத்தை துயரத்தில் ஆழ்த்தும் நிலையில், ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை மாற்றுவது, நிவாரணம் அறிவிப்பது உள்ளிட்டவைகளை நடவடிக்கைகளாக எடுப்பதையே ஆளும் அரசுகள் வாடிக்கையாக கொண்டுள்ளன.
ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதோடு, யூடியூபர் சங்கர் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
தொடர் குற்றச்சாட்டுகளுக்கு அரசு முறையாக செவி சாய்க்காமல் இருந்ததே, இத்தனை உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக எதிர்க்ட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், உயிரிழப்புகளை கவனத்தில் கொண்டேனும், தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.
ஆளும் அரசு மீது விழுந்துள்ள கறையை முதலமைச்சர் எவ்வாறு துடைத்தெறிய போகிறார். கள்ளச்சாராயமோ, விஷ சாராயமோ... எப்படி பெயர் வைத்து அழைத்தாலும் அது ஒரு உயிர் கொல்லியே. இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு யார் காரணம் என்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்....இதுவும் கடந்து போகும் என மக்கள் விடமாட்டார்கள்..காரணம், இது தொடர்கதையாகும் என்பதால். என்ன செய்ய காத்திருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....
- நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
- முதல்கட்டமாக தண்டனையை நிறுத்தி வைத்து, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நிர்மலாதேவி கூறியிருந்தார்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழி நடத்த முயன்றதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்தனர். அவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். ஆனாலும் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டு விசாரித்தது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர், பேராசிரியர்கள், மாணவிகள், அவர்களின் பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகி, சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 29, 30-ந்தேதிகளில் அளிக்கப்பட்டது.
இதில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பின் அடிப்படையில் நிர்மலா தேவியை மதுரை சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்த தண்டனையை எதிர்த்து பேராசிரியை நிர்மலாதேவி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு எனக்கு வழங்கிய தண்டனை சட்டவிரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். முதல்கட்டமாக தண்டனையை நிறுத்தி வைத்து, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ, ஜாமீன் வழங்கவோ முடியாது என் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
- ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வதும் மட்டும் தீர்வாகாது.
- எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் என அனைவர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராய பலிகள் நிகழ்ந்துள்ளன.
கள்ளக்குறிச்சி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என தொடர்புடையோர் யாரையும் விடக்கூடாது.
* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
* ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வதும் மட்டும் தீர்வாகாது.
* கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பங்களை அரசு காப்பாற்ற வேண்டும்.
* ஆட்சிகள் மாறினாலும் கள்ளச்சாராய காட்சிகள் மட்டும் மாறவில்லை.
* எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
* எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் என அனைவர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராய பலிகள் நிகழ்ந்துள்ளன.
* அரசியல் பின்புலம் இல்லாமல் கள்ளக்குறிச்சியில் இத்தனை துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டிருக்க முடியாது.
* முதலமைச்சர் பதவி விலகுவது இப்பிரச்சனைக்கு தீர்வாகாது. கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்பட வேண்டும்.
* முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என இபிஎஸ் கூறுவது வெறும் அரசியல் என்று கூறினார்.
- சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- வரும் 22 அன்று, தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் நேற்று மதியம் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது. இதற்கு அம்மாவட்ட கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார், உயிரிழந்தவர்கள் வயிற்றுப்போக்கு, வலிப்பு நோய் போன்ற இணைநோயால் உயிரிழந்தார்கள் என்று விளக்கம் அளித்தார். இதையடுத்துதற்போது வரை வெளியாகும் தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை கள்ளச்சாராயம் குடித்ததால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கண்டனங்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆளுங்கட்சி தொடர்பு இருப்பதால் தான் காவல்நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த வருடம் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாத சூழல் உள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் என்பது தங்கள் உறவுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு போதாது. மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்," என வலியுறுத்தி உள்ளார்.

கள்ளச்சாராயம் சம்பவம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் 22 அன்று, தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இப்படி எதிர்க்கட்சிகள் அனைவரும் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டிகளை கூறிவரும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்காதது, மனிதத்தை கடந்து அரசியல் கூட்டணி வலுப்பெற்று இருப்பதை காட்டுகிறது.
கள்ளக்குறிச்சியில் நடந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நேற்று விரிவாக அறிக்கை கொடுத்து இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவோடு நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு விரைகிறோம். இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். காவல்துறை விழிப்போடு இருக்க வேண்டும். சம்பவத்திற்கு காரணமானவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் ஆட்சிகளிலும் கள்ளச்சாராய பலிகள் நடந்துள்ளன. முதலமைச்சர் ராஜினிமா செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது வெறும் அரசியல். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலிக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கும், பாதிக்கப்படும் மக்களுக்கும் ஆளும் கட்சியில் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களுக்கான உரிமையில் குரல் கொடுக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
- பலர் அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி.
- உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும், தமிழகத்தில் கள்ளச்சாராய சந்தைக்கு மவுசு குறையவில்லை என்பதை கள்ளக்குறிச்சி சம்பவம் வெளிச்சம் போட்டு சுட்டிக்காட்டியுள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரத்தை சேர்ந்தவர்களில் சிலர் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த மேலும் பலர் உடல்நல பாதிப்பு காரணமாக அருகாமையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஒருபுறம் நோயாளிகள் அனுமதியும், மறுபுறம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகமாகும் சம்பவங்கள் இன்னும் முற்றுபெறவில்லை. இதுவரை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கள்ளச்சாராய சம்பவம் பூதாகாரமாகி உள்ள நிலையில், அருகாமையில் உள்ள மருத்துவனைகளில் இருந்து மருத்துவர்கள் அடங்கிய குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உறவினர்களை கள்ளச்சாராயத்துக்கு பறிகொடுத்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், கள்ளச்சாராய விற்பனை குறித்து பலமுறை புகார் அளித்திருக்கிறோம். ஆனால், ஒருமுறை கூட நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை என்று கண்ணீர்மல்க குற்றம்சாட்டினர்.
கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை குறித்த புகார்கள் எழுந்தன. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியின் வீடியோ தற்போது அதிகம் பகிரப்படுகிறது.
வீடியோவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக யூடியூபர் சவுக்கு சங்கரும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது இதே பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து யூடியூபர் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
அந்த வீடியோவில், "தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளசாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக உள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன். இவரது தொகுதியில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் 50 வீடுகளை சேர்ந்த கிராமங்கள் உள்ளன. அங்கு சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆதரவு தருபவர் உதயசூரியன். கல்வராயன் மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். இவர்கள் ஆதரவோடு, காவல்துறை ஆதரவுடன் இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த கள்ளச்சாராய சாவுக்கு காரணம் செந்தில் பாலாஜி என்று தான் கூறுவேன்," என்று தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய விவகாரம் குறித்து ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறுவது தொடர் கதையாகி வருகிறது. இவை தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின் நிர்வாக தோல்வியை எடுத்துரைக்கும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
- புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
- மக்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுமா? இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர் குணமடைவார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதல் ஒவ்வொருவராக உயிரிழப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்.
கள்ளச்சாராயம் குடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்.
தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி வருகிறது. அதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சியில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பூத் வாரியாக அமைச்சர்களை நியமித்துள்ளனர். அந்த அக்கறையை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காட்டி இருக்கலாம்.
ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.
கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் இருந்து ஏன் மருத்துவர்களை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரவில்லை.
- திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை குறைத்திருக்கலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கள்ளச்சாராயத்தால் யாரும் சாகவில்லை என பச்சை பொய் கூறினார் கலெக்டர் ஷ்ரவன் குமார்.
* வயிற்று வலியால், வலிப்பால், வயது மூப்பால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பொய் கூறினார் கலெக்டர்.
* உண்மையை கூறாமல் திமுக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையை செய்தார் கலெக்டர்.
* கள்ளச்சாராயம் பருகியவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை.
* சென்னையில் இருந்து ஏன் மருத்துவர்களை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரவில்லை.
* திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை குறைத்திருக்கலாம்.
* கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் என்பது தங்கள் உறவுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு போதாது. மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.
- சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.
சென்னை:
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
சட்டசபை கூட்டம் இன்று முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று அவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கள்ளக்குறிச்சிக்குச் சென்று உள்ளார்.
இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.
இச்சம்பவம் தொடர்பாக, இன்று, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அலுவலர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென்றும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், விஷச்சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல்துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.
உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
விசாரணை ஆணைய நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ள பி.கோகுல்தாஸ், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள கீழுர் கிராமத்தை சேர்ந்தவர். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வரதராஜுலு நாயுடுவிடம் ஜூனியராக பணியாற்றியவர். 1984-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றவர்.
- சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை தொடங்கி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காட்டுப்பகுதியில் வைத்து தொழில் போலவே பலர் செய்து வந்திருப்பதும், போலீசார் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாராயத்தை சில்லரை விற்பனைக்கு வாங்கி சென்று பலரும் குடித்து வந்துள்ளனர். 70 வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது தலைமறை வாகியுள்ளார்.
அவரை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் கள்ளச்சாராய மொத்த விற்பனைக்கு துணையாக இருந்த 10 பேரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்.
அவர்களை பிடிப்பதற்கு போலீசார் வலை விரித்துள்ளனர். வியாபாரி சின்னத்துரையிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மறைத்து வைத்து 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர். அவர்கள் யார்-யார்? என்கிற பட்டியலையும் போலீசார் சேகரித்துள்ளனர்.
கள்ளச்சாராய கும்பலை பிடிக்க ஏற்கனவே 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 5 தனிப்படைகளும் ஏற்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.






