என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜஸ்தான் சிகாரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
    • இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது.

    பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு சிகார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 1.25 லட்சம் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சல்பர் பூசப்பட்ட புதிய வகை யூரியாவான யூரியா கோல்ட்டை அறிமுகம் செய்தார்.

    பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 14-வது தவணை தொகை சுமார் ரூ.17 ஆயிரம் கோடியை 8½ கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் விடுவித்தார்.

    டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த இணையதள அமைப்பில் 1500 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை இணைக்கும் நடை முறையை தொடங்கி வைத்தார்.

    சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீகங்கா நகர் ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரி களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் 7 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    உதய்பூர், பன்ஸ்வாரா, பர்தாப்கர், துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களில் 6 ஏகலவ்யா மாதிரி உறைவிட பள்ளிகளை திறந்து வைத்த அவர், ஜோத்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா தீவ்ரி எனப்படும் சிறப்பு மையத்தையும் தொடங்கி வைத்தார்.

    விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானுக்கு கடந்த 6 மாநிலங்களில் பிரதமர் மோடி 7-வது முறையாக பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ராஜஸ்தான் சிகாரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழை மக்களுக்கு எதிராக நீங்கள் எப்படி சதி செய்தீர்கள் என்பதை மறைக்க எதிர்க்கட்சியினர்தங்கள் பெயரை UPA-ல் இருந்து I.N.D.I.A என்று மாற்றிக்கொண்டனர்.

    காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முந்தைய மோசடி நிறுவனங்களைப் போலவே தங்கள் பெயரை மாற்றியுள்ளன. அவர்கள் பயங்கரவாதத்தின் முன் படிந்த கறையை அகற்றுவதற்காக அவர்கள் தங்கள் பெயரை மாற்றியுள்ளனர். அவர்களின் வழிகள் நாட்டின் எதிரியைப் போலவே உள்ளன. இந்தியா என்ற பெயர் அவர்களின் தேசபக்தியைக் காட்டுவதற்காக அல்ல. மாறாக நாட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் உள்ளது.

    இளைஞர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. ஆனால் ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது. மாநிலத்தில் காகித கசிவு நடக்கிறது. மாநில இளைஞர்கள் திறமையானவர்கள். ஆனால் இங்குள்ள அரசு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் செல்கிறார்
    • பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், கெலாட் பேசக்கூடிய கருத்துகள் நீக்கம்

    ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது.

    தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் சிகர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    ராஜஸ்தான் மாநிலம் வரும் பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வரவேற்பதாக இருந்தது. ஆனால், மோடி கலந்து கொள்ளும் விழாவில் அசோக் கெலாட் பேசுவதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி அலுவலகம் அவரது பேச்சை நீக்கிவிட்டது. இதனால் தன்னால் உங்களை வரவேற்று பேச முடியாது. டுவிட்டர் மூலம் வரவேற்கிறேன் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    பொதுவாக பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில், இடம்பெறக் கூடிய பேச்சுகள் குறித்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் அனுப்பி வைத்ததில் அசோக் கெலாட் பேச்சு நீக்கப்பட்டுள்ளது.

    அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் ''மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நீங்கள் இன்று ராஜஸ்தான் வருகிறீர்கள். நிகழ்ச்சி நிரலுக்கான என்னுடைய பேச்சை பிரதமர் அலுவலகம் நீக்கியுள்ளது. ஆகவே, பேச்சு மூலம் தங்களை வரவேற்க முடியாது. இந்த டுவிட்டர் மூலம் தங்களை மனதார வரவேற்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னுடைய பேச்சால் பல கருத்துகளை முன் வைத்திருப்பேன் என்ற கெலாட், ஆறு மாதங்களில் 7-வது முறையாக ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடி, அதை நிறைவேற்றுவார் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, அதன்பின் காதலில் விழுந்துள்ளார்
    • பாஸ்போர்ட் உள்ளதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை

    திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது.

    உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அரவிந்த். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்வாவில் உள்ள, அவரது நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்பர் திர் மாவட்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, பேஸ்புக் மூலமாக நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மீது காதல் கொண்டதால், அவரை பார்க்க பாகிஸ்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை போலீசார் விடுவித்துள்ளனர். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் உள்ளார்.

    இந்த செய்தி வெளிவர ராஜஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, அவரது கணவர் அரவிந்த் கூறுகையில் ''அஞ்சு கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உள்ளது. தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினேன். அப்போது அவர் லாகூரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை'' என்றார்.

    அஞ்சுவிற்கு 15 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற திருமணம் முடிந்த பெண், பப்ஜி விளையாட்டு மூலம் இந்திய நபர் மீது காதல் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்து வருகிறார்.

    • ராஜஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்ததால் மந்திரி பதவி பறிப்பு
    • ரெட் டைரி குறித்து தன்னிடம் அசோக் கெலாட் தெரிவித்தது குறித்து தகவல்

    ராஜஸ்தான் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர் ராஜேந்திர குத்தா. மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அசோக் கெலாட் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.

    இந்த நிலையில் நான் இல்லை என்றால், முதலமைச்சர் அசோக் கெலாட் சிறையில் இருந்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேந்தி குத்தா கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர ரதோருக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வரிமான வரித்துறை சோதனை நடத்தியபோது, முதலமைச்சர் அசோக் கெலாட், தன்னிடம் எந்தவொரு விலை கொடுத்தாவது 'ரெட் டைரி'யை மீட்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து என்னிடம் அந்த டைரி எரிக்கப்பட்டு விட்டதா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். குற்றம் ஏதும் இல்லை என்றால், அவர் அவ்வாறு தொடர்ந்து கேட்டிருக்கமாட்டார். நான் இல்லை என்றால் முதலமைச்சர் சிறையில் இருந்திருப்பார்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    அசோக் கெலாட் அரசின் மோசடி செயல்கள் குறித்த ரெட் டைரி குறித்து முக்கியமான தகவலை ராஜேந்திரா குத்தா குறிப்பிட்டுள்ளார். உண்மை தெரிந்தவர்கள் தற்போது இதற்கு பதில் சொல்வார்களா? என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது பதவி நீக்கம் குறித்து ராஜேந்திர குத்தா கூறுகையில் ''என்னை ராஜினாமா செய்யும்படி நீங்கள் கேட்டிருந்தால், நான் செய்திருப்பேன். என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்'' என்றார்.

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்ற ஆறு பேர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 2021 நவம்பர் மாதம் அதில் ஒருவரான ராஜேந்திர குத்தா மந்திரி சபையில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சச்சின் பைலட்- கெலாட் இடையே மோதல் ஏற்பட்டபோது அசோக் கெலாட்டிற்கு ஆதரவு நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
    • திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை.

    ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங்கினார்.

    ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார்.

    திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று பைர்வா கூறினார்.

    பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

    மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நூர் ஷெகாவத் கூறினார்.

    நூர் ஷெகாவத் இப்போது திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

    • பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம்.
    • முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை.

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது.

    பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானிலும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும், உண்மையில் ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அம்மாநில மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான ராஜேந்திர சிங் ஹதுடா விமர்சித்து பேசினார்.

    தனது சொந்த மாநில அரசையே ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா விமர்சித்து பேசியதை அடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • கடந்த 54 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 2 லட்சம் குற்றவழக்குகள்
    • 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் நாட்டின் 140 கோடி மக்களும் வெட்கப்படுகிறார்கள். மனித இனத்திற்கே வெட்கக்கேடானவை. இதுபோன்று ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் என எங்கு நடந்தாலும் அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட நாட்கள் மவுனம் சாதித்த பிரதமர் மோடி, தற்போது குறுகிய நேரம் பேசிய நிலையில், மற்ற மாநிலங்களை குறிப்பிட்டது அரசியல் நாடகம் எனத் தெரிவித்துள்ளது.

    மோடியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே, ராஜஸ்தானில்தான் இந்தியாவில் நடைபெற்ற பலாத்கார சம்பவங்களில் 22 சதவீதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வசுந்தரா ராஜே கூறியதாவது:-

    பெண்கள், குழந்தைகள், தலித்கள் மற்றும் தொழில்அதிபர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குலைந்துள்ளது. ராஜஸ்தானில்தான் பெண்களுக்கு எதிரான குற்றவழக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 54 மாதங்களில் 10 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ளன. 7500-க்கும் அதிகமானனோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பெண்களுக்கு எதிராக மட்டும் 2 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவில் நடைபெற்ற மொத்த சம்பவங்களில் 22 சதவீதம் ஆகும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட்டின் பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவம் நடந்தாலும், அவர்கள் மவுனம் காக்கிறார்கள்.

    மீடியாக்கள் தரவுகளின்படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 18 முதல் 19 பலாத்கார சம்பவங்களும், 5 முதல் 7 கொலைகளும் நடைபெற்ற வருகின்றன.

    அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனர். அவர்கள் அரசில் இருந்து யாரும் இதுகுறித்து பேசுவதோ, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோ கிடையாது.

    இவ்வாறு வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

    • உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
    • நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக நேற்று அதிகாலையில் மிசோரமின் என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோமீட்டர் தொலைவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் உள்ளூர் போலீசில் கடந்த 13-ந்தேதி புகார் அளித்தார்.
    • கணவர் வேலைக்கு சென்றபிறகு கள்ளக்காதலன் மதன்லாலுடன் ஜோகேந்திராவின் மனைவி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஜோகேந்திரா இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோகேந்திரா வேலை பார்த்த நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் உள்ளூர் போலீசில் கடந்த 13-ந்தேதி புகார் அளித்தார். அப்போது மகன் மாயமானதற்கும், மதன்லால் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோகேந்திராவை தேடி வந்தனர். மேலும் மதன்லால் என்பவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஜோகேந்திரா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஜோகேந்திராவின் மனைவிக்கும், மதன்லால் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறி தொடர்ந்து வந்துள்ளது.

    கணவர் வேலைக்கு சென்றபிறகு கள்ளக்காதலன் மதன்லாலுடன் ஜோகேந்திராவின் மனைவி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். நாளடைவில் இந்த விஷயம் தெரிந்த ஜோகேந்திரா மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் ஜோகேந்திராவை தீர்த்துக்கட்ட மதன்லாலிடம் கூறியுள்ளார்.

    தொடர்ந்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வரும் ஜோகேந்திராவை கொலை செய்ய மதன்லால் திட்டம் போட்டார். அதன்படி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜோகேந்திராவை அழைத்து சென்று கொடூராமாக கொலை செய்துள்ளார்.

    பின்னர் அந்த உடலை தலை, கை, கால்கள் என 6 துண்டுகளாக்கினார். அந்த உடல் பாகங்களை தனது வீட்டில் இருந்து இரவு நேரத்தில் எடுத்துச் சென்று சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டம் மற்றும் காட்டுப்பகுதிக்குள் புதைத்துள்ளார். அதனை மதன்லால் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மீட்டனர்.

    மேலும் கொலையை மறைக்கும் விதமாகவும், உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்காமல் இருக்கவும் உடல் பாகங்களை புதைத்த இடத்தில் மதன்லால் மா மரக்கன்றுகளை நட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கொலையுண்ட ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் கூறுகையில், தனது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதன்லால் தவிர மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே இதில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த கொடூர கொலை சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
    • தங்குவதற்காக இடம் தேடியபோது ஒரு விடுதியில் அதன் மேற்பார்வையாளர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

    ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு பட்டியலின சிறுமி 3 கல்லூரி மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    காவல்துறை உயர் அதிகாரி அம்ரிதா துஹான் இது குறித்து தெரிவித்ததாவது:

    அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். இருவரும் நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் ஜோத்பூர் வந்திறங்கியுள்ளனர். தங்குவதற்காக இடம் தேடியபோது ஒரு விடுதியில் அதன் மேற்பார்வையாளர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். உடனே அங்கிருந்து வெளியேறிய இருவரும் வேறு இடம் தேடியுள்ளனர். அப்போது அங்கு வந்த சமந்தர் சிங், தரம்பால் சிங் மற்றும் பட்டம் சிங் ஆகிய 3 இளைஞர்கள் அவர்களோடு நட்பாக பழகி அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் தருவதாக கூறியிருக்கின்றனர்.

    அவர்கள் அந்த இருவரையும் அதிகாலை 4 மணியளவில் ஜெய் நாராயணன் வியாஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த மைதானத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் காதலனை அந்த 3 பேரும் கடுமையாக தாக்கினர். பிறகு அந்த சிறுமியை மூவரும் பலாத்காரம் செய்துள்ளனர். காலை நடைபயிற்சிக்காக மக்கள் வர தொடங்கியதை கண்டதும் மூவரும் ஓடி விட்டனர். பின்பு, பொது மக்களின் உதவியுடன் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். காவல்துறை மோப்ப நாய், கண்காணிப்பு கேமிரா மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலியல் பலாத்காரம் செய்த 3 நபர்கள் மற்றும் தவறாக நடக்க முயற்சித்த விடுதி மேற்பார்வையாளர் ஆகியோருக்கு எதிராக போக்சோ சட்டத்திலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

    இச்சம்பவத்தையடுத்து ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

    "பா.ஜ.க. இச்சம்பவத்தை அரசியலாக்குகிறது. குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்," என ஆளும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    அம்மூவரும் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்புடையவர்கள் என காவல்துறை கூறியிருக்கிறது. ஆனால், இதனை அந்த அமைப்பு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காவல்துறை அலட்சியமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தெரிவித்தார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூடு என தெரிகிறது.

    ராஜஸ்தானின் கரவ்லி பகுதியில், 19 வயது பட்டியலின பெண் ஒருவர் ஜூலை 12 ஆம் தேதி அவரது வீட்டிலிருந்து 4 பேரால் கடத்தப்பட்டார். இந்நிலையில் தேடப்பட்டு வந்த அவரின் உடல் ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து விட்டதாக பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளன. இவ்விவகாரம் ராஜஸ்தான் சட்டசபையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது.

    இவ்விவகாரத்தில் காவல்துறை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மேலும் கூறியிருப்பதாவது:

    அதிகாலை 3 மணி அளவில் மூன்று நான்கு பேர் வந்து என் மகளின் வாயில் துணியை அடைத்து அவளை தூக்கிச் சென்றனர். நான் அலறி அழுதேன். உடனே காவல் நிலையத்திற்கு சென்றோம். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். வழக்கு பதிவு செய்வதால் எதுவும் நடக்க போவதில்லை என்று கூறி என்னை வெளியேறச் சொன்னார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை போலீசார் வரும் நிலையில், இதுவரை ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    "வழக்கில் எங்களுக்கு சில துப்புகள் கிடைத்துள்ளன. நாங்கள் பாதிக்கப்பட்டவரின் தாயிடம் பேசினோம். அவர் யாரையாவது சந்தேகிக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் இதுவரை எவர் பெயரையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா கோரிக்கை விடுத்துள்ளார்.

    முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, தனது டுவிட்டர் பதிவில், "கல்லூரிக்கு செல்லும் ஒரு தலித் சிறுமியின் உடலில் கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் என் நெஞ்சை உலுக்குகிறது. இந்த விவகாரம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. நிர்வாகம் எல்லா கோணத்திலும் விசாரித்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், "மிகவும் முக்கியமான இந்த விஷயத்தை ஆழமாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.

    "பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூடு என தெரிகிறது. கற்பழிப்பு புகார்கள் குறித்து தடயவியல் நிபுணர்கள் சரிபார்ப்பார்கள். இழப்பீடு மற்றும் பிற கோரிக்கைகளுக்காக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்ப உறுப்பினர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்", என்று கரௌலி எஸ்.பி. மம்தா குப்தா தெரிவித்தார்.

    • நோயாளிகள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகும் இழந்த பார்வையை பெற முடியவில்லை.
    • மருத்துவர்கள் மீது எந்த தவறும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் பர்ஸதி லால் மீனா தெரிவித்தார்.

    ராஜஸ்தானின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஸவாய் மான் சிங் மருத்துவமனையில், கண் புரைக்கான அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் ஒரு கண்ணில் பார்வையை இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ராஜஸ்தான் அரசின், சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட ஒருவர் இதுபற்றி கூறியதாவது:

    எனக்கு ஜூன் 23 அன்று ஆபரேஷன் செய்யப்பட்டது. ஜூலை 5 வரை எனக்கு பார்வை இருந்தது; எல்லாம் தெரிந்தது. ஆனால் ஜூலை 6 அல்லது 7 தேதியளவில் கண் பார்வை போய்விட்டது. அதன் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் பார்வை திரும்பவில்லை. கண்பார்வை இழப்புக்கு தொற்று நோய் தான் காரணம் என்றும் நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.

    இவ்வாறு அந்த நோயாளி கூறினார்.

    கடுமையான கண் வலி இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்தபோது, மருத்துவமனை அதிகாரிகள் நோயாளிகளை மீண்டும் மருத்துவமனையில் சேருமாறு கேட்டுக்கொண்டனர். நோயாளிகள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் இழந்த பார்வையை பெற முடியவில்லை. அவர்களில் சிலர் இரண்டு முறைக்கு மேல் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மருத்துவர்கள் மீது எந்த தவறும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் பர்ஸதி லால் மீனா தெரிவித்தார்.

    மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவை சேர்ந்தவர்கள், தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என்று கூறியதுடன், நோயாளிகளிடமிருந்து புகார்கள் வந்த பிறகு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

    ஆனால், மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகமும் கவனக்குறைவாக இருந்ததாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    ×