என் மலர்
புதுச்சேரி
- 2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
- எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள சட்டசபை கட்டிடம் 1820-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
சட்டசபை, தலைமை செயலகம் தனித்தனியே இருப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. இதனால் 2008-ல் காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அப்போது தனது தொகுதிக்கே அனைத்து திட்டங்களையும் கொண்டு செல்கிறார் என ரங்கசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார். அப்போதும் சட்டசபை கட்ட நடவடிக்கை எடுத்தார். ஆனால் நிதி பற்றாக்குறையால் கட்ட முடியவில்லை. தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு திட்டத்தை கைவிட்டது. மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டசபை கட்ட தீவிரம் காட்டியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ரூ.612 கோடியில் திட்டம் தயாரித்து கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றார். இருப்பினும் பணிகள் தொடங்கவில்லை.
இந்த நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், பிரதமர், மத்திய அரசு சட்டசபை கட்ட ஒப்புதல் தெரிவித்துவிட்டனர். ஆனால் 5 மாதமாக கவர்னரிடம் கோப்பு உள்ளது. சில விளக்கங்களை அவர் கேட்டுள்ளார். இதனால்தான் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கொடுத்தவுடன் புதிய சட்டசபை கட்டப்படும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து கவர்னர் தமிழிசை கூறுகையில்:-
புதிய சட்டசபை கட்டும் கோப்பை நான் முடக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்து மீண்டும் அனுப்பினோம். தற்போது மீண்டும் சில கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறையில்தான் கோப்பு செல்கிறது என தெரிவித்தார்.
புதிய சட்டசபை கட்டும் விவகாரத்தில் சபாநாயகர், கவர்னர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
- மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ஆனால் புதுச்சேரி சட்டசபையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வருகிற 22-ந் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது.
அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.
2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுதி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.
புதுவை:
புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் பல்வேறு நிறங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வந்தனர்.
இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்தனர்.
இந்நிலையில் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* புதுச்சேரியில் அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
* நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
* உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.
* மீறுபவர்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.
- மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரசும், பா.ஜனதாவும் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.
இதை உறுதி செய்யும் வகையில் பா.ஜனதாவின் மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட சம்மதம் தெரிவித்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியிடம், கட்சி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி ஆண்டு விழாவின்போது முடிவு தெரிவிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டுவிழாவில் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி (பா.ஜனதா) போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறி என்.ஆர்.காங்கிரசார் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்துள்ளார். தொண்டர்களிடையே நிலவி வந்த சந்தேகங்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- காட்டேரிக்குப்பத்தில் சுவர் விளம்பரம் வரையும் பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
- வேட்பாளர் யார்? என தெரியும் முன்பே புதுச்சேரியில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது .
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானது.
வேட்பாளர் யார்? என இன்னும் முடிவு செய்யப்படாத சூழ்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜனதாவினர் சுவர் விளம்பரங்கள் வாயிலாக தேர்தல் பணியினை தொடங்கியுள்ளனர்.
தேர்தல் பணியில் முந்திக்கொண்ட பா.ஜனதாவினர் மண்ணாடிப்பட்டு தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.
அதில் தாமரை சின்னத்துடன் வாசகமும் இடம்பெற்றிருந்தது.
காட்டேரிக்குப்பத்தில் சுவர் விளம்பரம் வரையும் பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுமாறு கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
உற்சாகமடைந்த பா.ஜனதா நிர்வாகிகள் தொகுதி முழுவதும் சுவர் விளம்பரம் வரையும் பணியில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
அதற்கு முன்னதாக திருக்கனூர் கடைவீதியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 62 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 78 லட்சம் உதவித்தொகை வழங்கும் பணி ஆணையினை அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளிடம் வழங்கினார்.
வேட்பாளர் யார்? என தெரியும் முன்பே புதுச்சேரியில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது .
எதிர்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார்.
- நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார். விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.
நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
- புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி முழுவதும், கடற்கரை சாலை ஒரு பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
- தடுப்பு ஒத்திகையின்போது தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படிருந்தன.
புதுச்சேரி:
புதுச்சேரி சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கடற்கரையையொட்டி கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
ஒயிட்டவுண் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு காலனி பகுதியில் நேற்று இரவு திடீரென பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நடந்தது. மத்திய பாதுகாப்பு படை மற்றும் புதுச்சேரியில் போலீசார் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதற்காக புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி முழுவதும், கடற்கரை சாலை ஒரு பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதேபோல் மின்சாரமும் தடை செய்யப்பட்டது.
அப்பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
புதுவை கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகையின்போது துப்பாக்கி சுடும் சத்தமும், வெடிகுண்டு சத்தமும் அவ்வப்போது கேட்டது. விடிய விடிய இந்த சத்தம் ஒலித்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
இந்த தடுப்பு ஒத்திகையின்போது தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படிருந்தன. அதேபோல் அப்பகுதியில் டிரோன்கள் மூலமாக பயங்கரவாத கண்காணிப்பு பணி நடந்தது.
பின்னர் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை என்று தெரிந்த பின்னரே அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதியடைந்தனர்.
இதேபோல் கடற்கரைக்கு ஒயிட் டவுண் வழியாக சென்ற சுற்றுலா பயணிகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர்.
இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை அதிகாலை வரை நீடித்தது. விடிய விடிய நடந்த இந்த ஒத்திகையால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 5 மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
- மாயமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியின் கடற்கரை பகுதியான காரைக்கால் கடலில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி மாயமாகினர்.
மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். 2 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நிலையில் இந்த சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
- அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு தலைமை செயலாளர் திருப்பி அனுப்புவதாக குற்றசாட்டு.
- அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என புகார்கள் எழுந்து வந்தன. மேலும் அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகரை தேர்தல் துறை தவிர மற்ற அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜீவ் வர்மா விடுவித்தார்.
இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்த வல்லவன் கோவா-விற்கும், துணைநிலை ஆளுநரின் செயலாளராக இருந்த சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார்.
- துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி பல்கலைகழகம் செல்லும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின் கடற்கரை சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்குகிறார். மறுநாள் காலை அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குல விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார். அதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு சென்று நடராஜனை தரிசனம் செய்கிறார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் செல்லும் சாலை, மற்றும் தங்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது.
- பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 22-ந் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக வரலாற்று நிகழ்வில், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும், பக்தியாலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.
ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. பகவான் ராமரை போலவே, பிரதமரின் மனிதநேயம், தார்மீக ஒருமைப்பாட்டிற்கான சேவை ஈடு இணையற்றது.
பகவான் ராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று தனது வாழ்க்கையை நிலத்திற்கும், உயிர்களுக்கும் சேவை செய்து அர்ப்பணித்தார்.
பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுவை மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை காலை 8.45 மணிக்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றுகிறார்.
- கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி அனைத்து மாநில தலைநகரங்களிலும் நடைபெறும் விழாக்களில் கவர்னர்கள் தேசிய கொடியேற்றுகின்றனர். தெலுங்கானா மாநில கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் பொறுப்பு கவர்னராகவும் உள்ளார்.
இதனால் கவர்னர் தமிழிசை 2 மாநிலங்களிலும் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று கொடியேற்றுகிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை காலை 8.45 மணிக்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றுகிறார்.
விழா முடிந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று தேசிய கொடியேற்றுகிறார்.
மதியம் 1 மணி அளவில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். விருந்து நிகழ்ச்சி முடிந்த பின் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஐதராபாத் செல்கிறார்.
அங்கு கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். கடந்த ஆண்டும் குடியரசு தினவிழாவில் கவர்னர் தமிழிசை 2 மாநிலங்களில் கொடியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.






