என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.
    • அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார்.

    ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    ஆளும் கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.

    பின்னர் அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் இப்போது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில் மூன்று இயந்திரம் உள்ளது. இது இனி புல்லட் ரெயிலாக இயங்கும். மாநிலம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து செல்லும்" என்றார்.

    • தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக- சிவசேனா கூட்டணி அரசின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
    • பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

    தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, செய்தியாளர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நம்பத்தகுந்த முகமாக யார் இருப்பார்கள்? என கேட்டதற்கு கையை உயர்த்தி "சரத் பவார்" என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் பதிலளித்துள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இப்போது சில எம்எல்ஏக்கள் பாஜக- சிவசேனா கூட்டணி அரசின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன்மூலம், அவர்கள் மீத இருந்த குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டன என தெளிவாக தெரிகிறது.

    இதனால் பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

    எவ்வாறாயினும், எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. 1980ல் நான் தலைமை வகித்த கட்சியில் 58 எம்எல்ஏக்கள் இருந்தனர். பின்னர் அனைவரும் வெளியேறி 6 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் நான் எண்ணிக்கையை பலப்படுத்தினேன். என்னை விட்டுச் சென்றவர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்தனர்.

    நான் நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். அங்கு இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
    • அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

    இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.

    எங்களின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இதில் திருப்தி அடைகிறோம். தற்போதைய அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

    வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணிகள் முகத்தின் மீது ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ரெயில்வே போலீஸ்காரர் ஊற்றிய வண்ணம் செல்கிறார்.
    • பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரெயில்வே நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூபன் சவுத்ரி என்ற பயனர் டுவிட்டரில், 'ஆர்ஐபி மனிதநேயம், புனே ரெயில் நிலையம்' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் நடைமேடையில் உறங்கி கொண்டிருந்த பயணிகள் முகத்தின் மீது ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ரெயில்வே போலீஸ்காரர் ஊற்றிய வண்ணம் செல்கிறார்.

    இதனால் ஒரு வாலிபர், முதியவர் உள்ளிட்ட பயணிகள் பதறி போய் எழுந்து பார்க்கின்றனர். அப்போது அந்த போலீஸ்காரர் எதுவும் நடக்காதது போல கடந்து செல்கிறார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் போலீஸ்காரரின் நடவடிக்கையை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டனர். நடை மேடையை ஆக்கிரமித்து பயணிகள் தூங்கியதால் அவர்களை அப்புறப்படுத்துவதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என கூறப்பட்டாலும் அவரது நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என விமர்சித்தனர். பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது. இதற்கிடையே சம்பவம் தொடர்பாக புனே ரெயில்வே கோட்ட மேலாளர் இந்து துபே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நடை மேடையில் தூங்குவது என்பது நடந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். அதற்காக போலீஸ்காரரின் செயல் சரியானதல்ல. அவரிடம் பயணிகளை மரியாதையுடன் நடத்தும் படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்காக வருந்துகிறோம் என கூறியுள்ளார்.

    • ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார்.

    மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கினார்.

    9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார்.

    ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    துணை முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் அஜித் பவார் பகிர்ந்து கொள்கிறார்.

    • விபத்து காப்பீடு பெறுவதற்காக விண்ணப்பித்தபோது இன்சூரன்ஸ் பாலிசி போலியானது என தெரியவந்தது.
    • தனது காருக்கான பாலிசிகளை கான்சோலி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கியதாக புகார் அளித்துள்ளார்.

    தானே:

    மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை கலம்பொலி பகுதியில் ஆட்டோமொபைல்ஸ் கடை உரிமையாளர் ஒருவரை ஏமாற்றி போலியான வாகன இன்சூரன்ஸ் பாலிசி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடை உரிமையாளர் தனக்கு சொந்தமான 7 கார்களுக்கும் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.46,370 செலுத்தி இன்சூரன்ஸ் பாலிசி பெற்றிருக்கிறார். அந்த கார்களில் ஒரு கார் சமீபத்தில் விபத்துக்குள்ளானபோது, விபத்து காப்பீடு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அப்போது அந்த காரின் இன்சூரன்ஸ் பாலிசி போலியானது என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னிடம் இருந்த மற்ற 6 கார்களின் பாலிசியையும் கொடுத்து சரிபார்க்கச் சொன்னார். அப்போது அவை அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.

    இதையடுத்து அவர் நவி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது காருக்கான பாலிசிகளை கான்சோலி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் கூறியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார்.
    • விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும்.

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மீண்டும் திரும்பி சாலை நடுவே இருந்த தடுப்புகளின் மீது மோதி கவிழ்ந்தது.

    இதில் சொகுசு பேருந்து தீப்பிடித்தது. பேருந்துக்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் கருகி பலியானார்கள். இந்த கோர விபத்தில் சிக்கி 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார். இருப்பினும், விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இன்று புல்தானாவில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திக்க உள்ளோம். சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல.

    விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

    • தர நிலைகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. குழு மொகாலி மைதானத்துக்கு சென்றதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
    • கிரிக்கெட்டை பொறுத்தவரை பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள்.

    மும்பை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது.

    இதற்கான போட்டி அட்டவணையை கடந்த 22-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இணைந்து வெளியிட்டது.

    அகமதாபாத், ஐதராபாத், தர்மசாலா, சென்னை, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது. பிரபல இடங்களான மொகாலி இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, நாக்பூர் போன்ற நகரங்கள் இதில் விடுபட்டுள்ளது.

    இதனால் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன. மொகாலி மைதானம் போட்டியை நடத்த ஐ.சி.சி.யின் அளவு கோல்களை பூர்த்தி செய்ய வில்லை என்று கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜூசுக்லா தெரிவித்தார்.

    இந்தநிலையில் பஞ்சாப் மாநில விளையாட்டுத்துறை மந்திரி குர்மீத்சிங் மீட் ஹேயர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மொகாலி மைதானம் தகுதியற்றதாக கருதப்பட்டுள்ளது. ஐ.சி.சி.யின் அளவுகோல் என்ன என்பதை அறிய விரும்புகிறோம்.

    2022-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா-ஆஸ்திரேலியா சர்வதேச 20 ஓவர் போட்டி நடைபெற்றதால், தற்போது விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

    தர நிலைகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. குழு மொகாலி மைதானத்துக்கு சென்றதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். மொகாலி ஸ்டேடியம், இந்தியாவின் தலை சிறந்த மைதானங்களில் ஒன்று மட்டுமல்ல, உலகின் முக்கிய மைதானங்களின் பட்டியலிலும் உள்ளது.

    மொகாலி எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களின் முதல் தேர்வாக உள்ளது. மொகாலியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நகரத்தில் சிறந்த உள் கட்டமைப்பு உள்ளது. அணிகள் தங்குவதற்கு போதுமான ஓட்டல்கள் உள்ளன.

    விளையாட்டு அரங்கிலும், பஞ்சாப் மாநிலம் முன்னிலையில் உள்ளது. கிரிக்கெட்டை பொறுத்தவரை பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள்.

    பஞ்சாப்பில் போட்டிகளை நடத்தவில்லை என்றால் அது நியாயமான விளையாட்டின் உணர்வை முற்றிலும் பொய்யாக்கும். எனவே பஞ்சாப்பில் சில போட்டிகளை நடத்துவது நீதியின் நலனுக்காக இருக்கும். மிக அவசரமான இந்த விஷயத்தில் பஞ்சாப்புக்கு நீதி கிடைக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பயணம் செய்த 33 பேரில் 26 பேர் உடல் கருகி பலி
    • 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பு

    மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று காலை பஸ் விபத்தில சிக்கி 26 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றது. அம்மாநிலத்தை உலுக்கும் வகையில் நடந்துள்ள விபத்தின் விவரம் வருமாறு:-

    மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு நேற்று மாலை பயணிகள் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. தனியாருக்கு சொந்தமான இந்த சொகுசு பஸ்சில் 33 பயணிகள் பயணம் செய்தனர்.

    இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் அந்த சொகுசு பஸ் சம்ருத்தி-மகாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. புல்தானா என்ற இடத்தில் அந்த பஸ் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய அந்த பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மீண்டும் திரும்பி சாலை நடுவே இருந்த தடுப்புகளின் மீது மோதி கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    கம்பத்திலும், சாலை நடுவில் உள்ள தடுப்பிலும் அடுத்தடுத்து மோதியதால் உருண்ட சொகுசு பஸ்சில் அடுத்த விநாடியே தீப்பிடித்தது. இந்த விபத்து நடந்தபோது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள். பஸ் கவிழ்ந்ததில் காயம் அடைந்த அவர்கள் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் அவர்களை சுற்றி தீப்பிடித்துக்கொண்டது.

    சொகுசு பஸ்சில் கதவு மூடப்பட்டு இருந்ததால் அதை திறக்க இயலாமல் போய்விட்டது. கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு பயணிகள் தப்ப முடியாமல் அலறினார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குள் பஸ் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை அணைப்ப தற்கு அவர்கள் கடுமையாக போராட வேண்டி இருந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடிய பிறகுதான் தீயை அணைக்க முடிந்தது.

    அதற்குள் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 33 பயணிகளில் 26 பயணிகள் கருகிய நிலையில் பஸ்சுக்கு உள்ளேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    7 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பஸ் டிரைவரும் காயங்களுடன் உயிர் தப்பி இருந்தார். அவர்கள் அனைவரும் புல்தான மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். டிரைவரிடம் விசாரணை நடத்திய போது தான் டயர் வெடித்து பஸ் தடுப்புகளில் மோதி தீப்பிடித்த விவகாரம் தெரிய வந்தது.

    மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதிரிச்சி வெளியிட்டார். பஸ் விபத்தில் பலியான 26 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

    • எனது மாமனார் (சாது ஷிண்டே) ‘கூக்லி' பந்து வீசக்கூடிய திறமை கொண்டவர்.
    • நானும் ஐ.சி.சி. சேர்மனாக இருந்து உள்ளேன்.

    மும்பை :

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், 2019-ல் சரத்பவார் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டு, பின்னர் பின்வாங்கிவிட்டார் என கூறியது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசியது உண்மை தான். ஆனால் 2 நாட்களுக்கு முன் நான் எனது முடிவை மாற்றிவிட்டேன் என பட்னாவிஸ் கூறியுள்ளார். நான் எனது முடிவை மாற்றிவிட்ட பிறகு, அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்க காரணம் என்ன?. அதுவும் அதிகாலை நேரத்தில் ஏன் செய்ய வேண்டும்?. பட்னாவிஸ், அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு இருந்ததா?.

    பா.ஜனதா ஆட்சி அதிகாரத்துக்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை மக்களிடம் அம்பலப்படுத்தவே சில விஷயங்கள் செய்யப்பட்டது. அவர்களால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை காட்ட வேண்டிய அவசியம் இருந்தது. எனது மாமனார் (சாது ஷிண்டே) 'கூக்லி' பந்து வீசக்கூடிய திறமை கொண்டவர். நானும் ஐ.சி.சி. சேர்மனாக இருந்து உள்ளேன். எனவே கிரிக்கெட் விளையாடாமல் எந்த நேரத்தில், எங்கு 'கூக்லி' பந்து போட வேண்டும் என்று எனக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சரத்பவார் இரட்டை வேடம் போட்டார்.
    • உத்தவ் கூட்டணியை முறித்து எங்களது முதுகில் குத்தினார்.

    மும்பை :

    2019-ம் ஆண்டு மராட்டியத்தில் பா.ஜனதா - பிளவுபடாத சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு பிறகு சிவசேனா பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் திடீரென ஒருநாள் அதிகாலை 5 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி பதவி ஏற்று அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் அந்த ஆட்சி 3 நாளில் கவிழ்ந்தது. கடந்த சில மாதங்களுக்கு அஜித்பவார், சரத்பவாருக்கு தெரிந்து தான் பதவி ஏற்றார் என கூறியிருந்தார்.

    இந்தநிலையில் அவர் 2019-ம் ஆண்டு பா.ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க சரத்பவார் ஒப்புக்கொண்டார் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனியார் டி.வி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் எங்களை (பா.ஜனதா) அணுகினர். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சரத்பவாரை சந்தித்து பேசினோம். அப்போது பா.ஜனதா-தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதற்கான திட்டமும் முடிவானது. அரசை அமைக்க எல்லா அதிகாரமும் எனக்கும், அஜித்பவாருக்கும் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம்.

    பதவி ஏற்புக்கு 3-4 நாள் இருந்தநிலையில், திடீரென சரத்பவார் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். அஜித் பவாருக்கு என்னுடன் வந்து பதவி ஏற்பது தவிர வேறு வழியில்லாமல் இருந்தார். இல்லையெனில் அவர் அம்பலப்படுத்தப்பட்டு அவரின் அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்து இருக்கும். சரத்பவார் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் பதவி ஏற்க வந்தார். உத்தவ் கூட்டணியை முறித்து எங்களது முதுகில் குத்தினார். ஆனால் சரத்பவார் இரட்டை வேடம் போட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றது குறித்து அவர் கூறுகையில், " என்னை துணை முதல்-மந்திரியாக்கியது முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் கட்சி பணியாற்ற தயாராக இருந்தேன். திடீரென துணை முதல்-மந்திரி பதவி ஏற்குமாறு கூறியது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அன்று எடுத்த முடிவு சரியானது என இப்போது நான் கூறுவேன். ஏனெனில் என்னால் தற்போது கட்சி, ஆட்சியை கவனிக்க முடிகிறது. எனவே நான் துணை முதல்-மந்திரியாக வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவு சரியானது என நம்புகிறேன் " என்றார்.

    2019-ல் மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆட்சியமைக்க சரத் பவார் சம்மதம் தெரிவித்திருந்தார்

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாரின் கூக்லி இனிமேல் வேலை செய்யாது என பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தன. ஆனால், உத்தவ் தாக்கரே தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றதால் பிரச்சினை உருவானது.

    பின்னர் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றார். தற்போது, உத்தவ் தாக்கரே கட்சி உடைந்து ஏக் நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை தன்வசப்படுத்தி முதலமைச்சராக உள்ளார்.

    பா.ஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பூசல் நடைபெற்றபோது, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவின் பட்நாவிஸ் முதலமைச்சராகவும், சரத் பவாரின் உறவினர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

    ஆனால் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க இருந்த கடைசி நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள் எனத் சரத் பவார் அறிவித்தார். இதனால் பட்நாவிஸ் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 80 மணி நேரத்தில் பட்நாவிஸ் முதல்வர் பதவி முடிவுக்கு வந்தது.

    இந்த விவகாரத்தில் சரத் பவாரின் விளையாடிய விளையாட்டு என்ன? என்பதை பா.ஜனதா மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே தனியார் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.

    சரத் பவார் குறித்து சந்திரசேகர பவன்குலே கூறியதாவது:-

    சரத் பவார் பா.ஜனதா உடன் சேர்ந்து ஆட்சியமைக்க முதலில் சம்மதம் தெரிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போட்டார் என பட்நாவிஸ் தெரிவித்தார். அப்போது, எங்கே, எப்போது கூக்லி வீசுவது என்று எனக்கு தெரியும் என சரத் பவார் பதில் அளித்திருந்தார்.

    அதிகாரத்திற்காக எங்கும் செல்வார் என்பதுதான் சரத் பவாரின் வரலாறு. அதிகாரத்திற்காக 2014-ல் பா.ஜனதாவுடன் இணைய முயற்சி மேற்கொண்டார். 2019-ல் அரசியல் சதித்திட்டத்தை தீட்டினார்.

    அவரது சதித்திட்டத்தில் அஜித் பவாரை சிக்கவைத்து, அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க முயற்சித்தார். அஜித் பவார் மீது மக்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மனதில் ஒரு கேள்விக்குறியை எழுப்பினார்.

    2019-ல் அவர் பயன்படுத்தியதுதான் அவருடைய கடைசி கூக்லி. இனிமேல் அவருடைய கூக்லி வேலை செய்யாது. மகாராஷ்டிரா மக்களுக்காக பட்நாவிஸ் சேவையாற்றுவார்'' என்றார்.

    சர்த் பவாரின் மாமனார் ஒரு டெஸ்ட் வீரர். அவர் கூக்லி சுழற்பந்து வீச்சாளர். சரத் பவார் ஐசிசி சேர்மனாக இருந்தவர். ஆகவே, கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் எங்கே, எப்போது 'கூக்லி' பந்து வீச வேண்டும் என்பது தெரியும் என்று சரத் பவார் கூறியிருந்தார்.

    சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக லெக்ஸ்பின் பந்து வீச்சாளர்கள் திடீரென பேட்ஸ்மேனை திணறடிக்க 'கூக்லி' பந்து வீசசு முறையை பயன்படுத்துவார்கள். அதேபோன்று அரசியலில் முக்கியமான கட்டத்தில் தனது முடிவை அறிவிப்பேன் என்று சரத் பவார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×