search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரு முதல்வர்.. 2 துணை முதல்வர்.. மாநிலம் இனி வளர்ச்சி பாதையில் செல்லும்- ஏக்நாத் ஷிண்டே
    X

    ஒரு முதல்வர்.. 2 துணை முதல்வர்.. மாநிலம் இனி வளர்ச்சி பாதையில் செல்லும்- ஏக்நாத் ஷிண்டே

    • அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.
    • அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார்.

    ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    ஆளும் கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.

    பின்னர் அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் இப்போது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில் மூன்று இயந்திரம் உள்ளது. இது இனி புல்லட் ரெயிலாக இயங்கும். மாநிலம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து செல்லும்" என்றார்.

    Next Story
    ×