என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    நடிகை ரன்யா ராவ் வழக்கில், அவரது வளர்ப்பு தந்தையை டிஜிபி பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    தங்க கடத்தல் தொடர்பான வழக்கை கர்நாடக அரசின் சிறப்பு குழுவும் விசாரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான கன்னட நடிகை ரன்யா, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள் தன்னைத் தாக்கி, வெற்று மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    • அமலாக்கத்துறையினர் ரன்யா ராவ், அவரது கணவர் ஜதீன், நண்பர் தருண் ராஜு வீடுகளில் சோதனை நடத்தி இருந்தார்கள்.
    • தங்கம் கடத்தி வந்த போது, ரன்யா ராவை எந்தவிதமான சோதனையும் இன்றி போலீஸ்காரர் பசவராஜ் வெளியே அழைத்து வந்திருந்தார்.

    பெங்களூரு:

    கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3-ந்தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை மீட்டு இருந்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின்பேரில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டார்.

    அவரை காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவரது காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, நேற்று காலையில் பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் தருண் ராஜு அடைக்கப்பட்டார்.

    ஏற்கனவே தங்கம் கடத்தலில் ரன்யா ராவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, அவர் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 12-ந்தேதியே முடிந்திருந்தது. அன்றைய தினம் ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை 14-ந்தேதி (அதாவது நேற்று) வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, அந்த மனு மீதான தீர்ப்பை நேற்று நீதிபதி கூறினார்.

    அப்போது ரன்யா ராவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். ரன்யா ராவ் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாலும், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதால், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் ரன்யா ராவ், அவரது கணவர் ஜதீன், நண்பர் தருண் ராஜு வீடுகளில் சோதனை நடத்தி இருந்தார்கள். சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருந்தாலும், தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள், தங்கத்தை வாங்கியவர்கள் பற்றிய தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில், துபாயில் இருந்து நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்தபோது, பெங்களூரு போலீசார் விதிமுறைகளை மீறி இருந்தது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதாவது ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், டி.ஜி.பி.யுமான ராமசந்திரா ராவ் உத்தரவின்பேரில், தங்கம் கடத்தி வந்த போது, அவரை எந்தவிதமான சோதனையும் இன்றி போலீஸ்காரர் பசவராஜ் வெளியே அழைத்து வந்திருந்தார். அதுபற்றி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா, டி.ஐ.ஜி. வம்சி கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் சென்றார். 2-வது முனையத்தில் ரன்யா ராவ் எந்த வழியாக தங்கம் கடத்தி வந்தார்?, அவரை போலீஸ்காரர் பசவராஜ் எப்படி அழைத்து வந்தார்?, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ரன்யா ராவை அழைத்து வருவதற்கு அவர் கூறிய காரணம் என்ன? உள்ளிட்டவை குறித்து கவுரவ் குப்தா அதிகாரிகளிடம் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டார்.

    அதே நேரத்தில் கடந்த 3-ந்தேதி தங்கம் கடத்தி வந்தபோது, விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பதை அறிந்து கொள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா பெற்றுள்ளார். விசாரணையை முடித்துவிட்டு அவர் தலைமையிலான அதிகாரிகள் பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.

    • பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
    • 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது

    நாடு முழுவதும் நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.

    அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.

    இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சிறுமிகளின் பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.

    7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மற்ற மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.  

    • தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவ் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
    • விமான நிலைய பாதுகாப்பு குறைபாடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.

    தங்கம் கடத்தில் வழக்கில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடகா, பின்னர் அதை திரும்பப் பெற்றது. திரும்ப பெற எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநில நடிகை ரன்யா ராவ் துபாயில் இருநது கேம்பேகவுடா சர்வதேச நிலையத்திற்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அவரிடம் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை டிஜபி ரேங்கில் உள்ள உயர் அதிகாரி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு நெறிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    ரன்யா ராவ் கைது செய்யப்பட்டதும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக சிஐடி விசாரணை நடத்த அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா உத்தரவிட்டார்.

    இதற்கிடையே ரன்யா ராவின் தந்தை கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதில் பங்கு உள்ளதா? என விசாரணை நடத்த கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் சிஐடி விசாரணை உத்தரவை உள்துறை அமைச்சர் திரும்பப் பெற்றுள்ளார். சிஐடி விசாரணையை திரும்பப் பெற எந்த நெருக்கடியும் இல்லை என அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-

    முதலமைச்சர் சித்தராமையா, கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நாங்கள் எங்களுடைய போலீஸ் துறையின் விசாரணையை (சிஐடி) திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் உத்தரவிட்ட விசாரணை நடைபெறும்.

    இரண்டு தனிப்பட்ட விசாரணை நடைபெறக் கூடாது. இதனால் நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம். சிஐடி விசாரணை நடத்த எந்த நெருக்கடியும் இல்லை. விசாரணை நடத்த வேண்டும் என்றோ அல்லது, சிஐடி விசாரணையை திரும்பப்பெற வேண்டும் என்றோ யாரும் கேட்கவில்லை. நடந்தது அதுதான். எந்த குழப்பமும் இல்லை.

    இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    ரன்யா ராவ் திருமண விழாவில் பரமேஷ்வரா, முதல்வர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொண்ட படத்தை பாஜக பகிர்ந்துள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கா திருமணங்களுக்கு நாங்கள் போகிறோம்" எனப் பதில் அளித்தார்.

    தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இன்று கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    • சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்த்தில், "மாநில சுயாட்சி மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் எனக்குக் கிடைத்தது.

    மார்ச் 22 அன்று நான் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார். கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள்.
    • என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது கர்நாடக மாநில விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் இரண்டு கர்நாடக மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இது வெறும் வதந்திகள்தான். ஆதாரங்கள் தேவை. இந்த விவகாரத்திற்குப்பின் பாஜக-வின் சதித்திட்டம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான். எந்த அமைச்சர்கள் பெயர் வெளியானது? யாராவது பார்த்தீர்கள் அல்லது கேட்டீர்களா?. அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள். என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.

    என்னுடனோ அல்லது முதல்வருடனோ போட்டோ எடுத்துக் கொண்ட ஒரு நபர், குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று அர்த்தமா?.

    தங்கம் கடத்திய ரன்யா ராவ் உடன் எந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் வெளிப்படுத்துவீர்களா? என முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பாஜக எக்ஸ் பக்க பதிவு மூலம் கேட்டுள்ளது.

    ரன்யா தங்கம் கடத்தல் வழக்கில் ஒருவேளை பாஜக-வுக்கு தொடர்பு இருக்கலாம், ஆனால் காங்கிரஸ்க்கு தொடர்பு இல்லை. எந்த அமைச்சரும் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள். முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    விமான நிலையங்களில் வாட்ச், பெல்ட் என அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனைகள் இருக்கும்போது 14 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

    இது பாஜக-வின் சதி திட்டம். இதில் எந்தவொரு அமைச்சரும் ஈடுபடவில்லை என உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை சந்தித்த தமிழக குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கும் தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
    • மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை யை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும். அதிகளவு நீர் ஓடும் போது அருவியில் குளித்து மகிழவும், ஆற்றில் பரிசல் பயணம் மேற் கொள்ளவும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவர்.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநி லங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்வர். தற்போது, காவிரி நீர்ப் பிடிப்பு பகுதி களில் போதிய மழை யில்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று 500 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 300 கனஅடியாக குறைந்து வந்தது.

    இதனால், காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடை கலாகவும் காட்சியளிக்கிறது.

    ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    கர்நாடக அணிகளில் இருந்து உபரி நீர் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வெறும் பாறை களாகவே காட்சியளிக்கி ன்றன. அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று குறைந்து ள்ளது.

    கோடை காலம் துவங்கும் முன்பே கர்நாடகாவில் மழை குறைந்ததாலும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    நீர்வரத்து மேலும் குறைந்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்கான தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கோடை சுற்றுலாப் இந்த ஆண்டு கடுமையாக பாதிப்பு நிலை ஏற்படும். 

    • 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது நடிகை பிடிபட்டார்.
    • விமான நிலையத்தில் பாதுகாப்பு நெறிமுறையை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நடிகையின் தந்தை டிஜிபி ரேங்க் அதிகாரி என்பதால், விமான நிலையத்தில் பரிசோதனையில் இருந்து தப்பிக்க தந்தை பெயரை பயன்படுத்தி பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த நிலையில் நெறிமுறைகளை பயன்படுத்தியது தொடர்பான உண்மையை கண்டறிய ராமச்சந்திரா ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாக உத்தரவிட்டுள்ளார்.

    தனது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்தி வந்ததில் இவருக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா? இவரது பெயர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்த உண்மையை கண்டறிய கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ் குப்தா விசாணை நடத்துவார். ராமச்சந்திரா ராவிடம் விசாணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மேலும் விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும், உதவிகளையும் வழங்குமாறு டிஜிபி, ஐஜி, செயலாளர், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரும்போது ரன்யா ராவ் பிடிப்பட்டார். இது தொடர்பாக அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளும்போது 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 2.67 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
    • கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடை த்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.

    நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரன்யாவும், தருணும் பல வருட நண்பர்கள் ஆவார்கள். அவர் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதாகவும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

    அதுபோல் ஒரு அரசியல் பிரமுகரின் கார் டிரைவரையும் கைது செய்துள்ளனர். இந்த கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்களில் மட்டும் கூட்டுறவு வங்கியிலிருந்து ரன்யாவின் கணக்கிற்கு ரூ.10 லட்சம் பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் வருவதற்கு முன்பு ரன்யாவின் கணக்கில் பணம் இல்லை. இந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் விவகாரம் கர்நாடக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. கர்நாடக சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் தொடர்புடையதாக கூறப்படும் செல்வாக்குமிக்க 2 அமைச்சர்கள் யார்? என கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு உள்துறை மந்திரி பரமேஸ்வரா இந்த வழக்கு குறித்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை சி.பி.ஐ. விசாரித்து கண்டுபிடிக்கும் என தெரிவித்தார்.

    • ரன்யா ராவ் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெரோடா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை தொடங்கினார்.
    • ரன்யா ராவுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி இருப்பதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனிடையே அவரை, டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ரன்யா ராவ், எனது தந்தை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் தங்க கடத்தல் கும்பல் என்னை பயன்படுத்தி விட்டனர். சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களால் சிக்கிக் கொண்டேன். நான் இந்த தங்கம் கடத்தல் வேலையை கமிஷனுக்காக கடந்த 1½ வருடமாக செய்து வருகிறேன் என வாக்குமூலம் அளித்தார். மேலும் ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் மும்பை மற்றும் பெங்களூருவை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதனால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ரன்யா ராவ் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதால் அவரை மீண்டும் பெங்களூரு சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் ரன்யா ராவ் சம்பந்தப்பட்ட தங்கம் கடத்தல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சி.பி.ஐ. தரப்பில் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மந்திரிக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.

    ரன்யா ராவ் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெரோடா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் ரன்யா ராவ் மற்றும் அவரது சகோதரர் ரஷாப் ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தின் பெயரில் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் எக்கு மற்றும் டாட் பார் உற்பத்தி அலகு திறக்க நிலம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விண்ணப்பம் தாக்கல் செய்த 10 மாதங்களுக்குள் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 12 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது.

    செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தொடர்பு இல்லாமல் அரசாங்க நிலத்தை பெறுவது எளிதல்ல. தனது தந்தையின் செல்வாக்கு மற்றும் அரசியல் தலைவர் உதவியுடன் இந்த நிலத்தை அவர் வாங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

    ரன்யா ராவுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி இருப்பதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அந்த மந்திரி யார்? என்ற விபரம் ரன்யா ராவை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கும் போது முழுவிபரங்களும் தெரியவரும். இந்த நிலையில் நிலம் ஒதுக்கியது தொடர்பாக கர்நாடக அதிகாரி மகேஷ் என்பவர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் முந்தைய அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற 137-வது மாநில அளவிலான ஒற்றை சாளர அனுமதிக்குழு கூட்டத்தின் போது ஜெரோடா இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து திரும்பினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டம் ஹம்பி நகர் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் சுற்றுலாவுக்ககாக ஹம்பி நகருக்கு வந்தார். அதே போல் அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ், ஒடிசாவை சேர்ந்த பிபாஸ் ஆகியோரும் அங்கு சுற்றுலாவுக்கு வந்தனர். சம்பவத்தன்று இரவு இஸ்ரேல் பெண் உள்பட 4 சுற்றுலா பயணிகள் மற்றும் ஹம்பியில் தங்கும் விடுதி நடத்தி வரும் 29 வயதான இளம்பெண் ஆகிய 5 பேரும் துங்கபத்ரா நதியின் இடதுகரையில் இசையை ரசித்தப்படி, இயற்கையை கண்டு ரசித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

    பின்னர் அவர்கள் இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி, தங்கும் விடுதி நடத்தி வந்த இளம்பெண் ஆகியோரை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தனர். இதை தடுக்க முயன்ற டேனியல், பங்கஜ், பிபாஸ் ஆகிய 3 பேரையும் அடித்து கால்வாயில் வீசினர். இதில் டேனியல், பங்கஜ் ஆகியோர் தப்பினர். ஆனால் ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி பிபாஸ் பிணமாக மீட்கப்பட்டார்.

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதன்படி கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் இந்த வழக்கு தொடர்பாக ஹண்டி மல்லேஷ் (22), சேதன் சாய் சில்லேக்யதர் (21) ஆகிய 2 வாலிபர்களை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு அவர்களை அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவானவர் குறித்து நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஷரணப்பா என்பதும் அவர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து கர்நாடகா தனிப்படை போலீசார் அவரை தமிழகத்தில் கைது செய்து கர்நாடகாவுக்கு அழைத்து சென்றனர். அவர் தமிழகத்தில் எங்கு கைது செய்யப்பட்டார் என்ற விபரத்தை போலீசார் வெளியிடவில்லை். தற்போது 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட ஒடிசா சுற்றுலா பயணி பிபாஸ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதே போல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து திரும்பினர்.

    ×