என் மலர்tooltip icon

    அசாம்

    • அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.
    • ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    அவரது உடல் சொந்த மாநிலமான அசாமுக்கு கொண்டுவரப்பட்டு தலைநகர் கவுகாத்தியில் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மறுபுறம் கார்க்கின் மரணம் குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. இதனால் ஜூபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று தெரிவித்தார்.

    மேலும் அவரது உடலுக்கு 2 வது முறையாக பிரேத பரிசோதனை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    சிங்கப்பூரில் நடந்த முதல் பிரேதப் பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவர்களால் இந்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஹிமாந்தா தெரிவித்தார்.

    கார்க்கின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 முதல் 10 மணிக்குள் சருசஜாய் மைதானத்தில் இருந்து இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

    மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இறுதிச் சடங்கில் பங்கேற்பார்.

    சிஐடி போலீசார் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்கும். இச்சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹந்தா மற்றும் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஏஐ வீடியோவை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு ஏஐ வீடியோவை அம்மாநில பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் மாட்டுக்கறி உணவு சட்டபூர்வமாக மாறும். பாகிஸ்தானுடன் தொடபுடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும். டீ எஸ்டேட் முழுவதும் முஸ்லிம்கள் இருப்பார்கள். கவுகாத்தி விமான நிலையம் கிரிக்கெட் மைதானத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருப்பார்கள். சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள் நம் மாநிலத்தின் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பார்கள். அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும்" என்று முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறிதளவும் தயக்கமின்றி மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் செயலில் பாஜக ஈடுபடுவதாக அசாம் மாநில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த கண்டனங்களை பாஜக சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக அசாம் மாநில பாஜக அமைச்சர் அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
    • வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    அசாம் மாநிலத்தை இன்று மாலை 4.41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

    உடல்குரி மாவட்டத்தை மையமாக கொண்டு 26.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும்  பூமிக்கு 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்த்தினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

    • அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர்.

    இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.  

    • 1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
    • ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.

    பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.

    இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,

    1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.

    பாஜக இரட்டை எஞ்சின் அரசு அசாமின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் உறுதி பூண்டு உள்ளது.

    அசாமின் 13 சதவீத வளர்ச்சியுடன் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. வளர்ச்சி பாரதம் கனவை நனவாக்குவதில் வடகிழக்கு பெரும் பங்கு வகிக்கிறது.

    காங்கிரஸ் அசாமை பல தசாப்தங்களாக ஆட்சி செய்தது. ஆனால் பிரம்மபுத்திரா நதியின் மீது 3 பாலங்களை மட்டுமே கட்டியது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் 6 பாலங்களைக் கட்டினோம்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதத்தால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நமது ராணுவம் மிக பலத்துடன் எதிர்த்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    காங்கிரஸ் நமது ஆயுதப்படைகளை அவமதித்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு நிலைப் பாட்டில் காங்கிரஸ் செயல் பட்டு வருகிறது.

    இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.

    நாட்டின் மக்கள் தொகையை மாற்ற சிலர் முயற்சித்து வருகிறார்கள். ஊடுருவல்காரர்கள் உங்கள் நிலத்தை அபகரிக்க பாஜக அனுமதிக்காது. மக்கள் தொகையை மாற்றும் சதியை தடுப்போம்" என்று மோடி பேசினார்.

    இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைத்தார்.

    அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.  

    • பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.

    இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,

    ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக அசாம் வந்துள்ளேன். காமாக்யா அன்னையின் ஆசிர்வாதத்தால் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    பாரத ரத்னா விருது பெற்ற இந்த நாட்டின் மகத்தான புதல்வரும், அசாமின் பெருமையுமான பூபன் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்ததில் நான் வேதனை அடைகிறேன். நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு மோடி பாரத ரத்னாவை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியிருந்தார்.

    காங்கிரஸ் தலைவர் என்னை தொடர்ந்து அவமானப் படுத்தி வருகிறார். நீங்கள் என்னை எவ்வளவுதான் திட்டினாலும் தாங்கி கொள்வேன்.

    நான் சிவ பெருமானின் பக்தன். நான் அவதூறுகளின் விஷத்தையும் அருந்தி அதை அகற்றி விடுவேன். ஆனால் வேறு யாரையாவது அவமானப்படுத்தினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது சரியா, தவறா என்று மக்களாகிய நீங்களே கூறுங்கள்" என்று பேசினார்.  

    இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைக்கிறார்.

    அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார். 

    • விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது
    • இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர்.

    அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

    இதுவரை சுமார் 50 பிரசவங்களை செய்துள்ளார். அதுவும் சிசேரியன் பிரசவங்கள். இந்நிலையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

    மூத்த காவல்துறை அதிகாரி நுமல் மஹாதா கூறுகையில், புலோக் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும், விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் போலி மருத்துவர்களைப் பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.   

    • அசாமில் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
    • வரும் 2041-ல் முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் பேசுகையில், மக்கள்தொகையை மாற்றுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 40 சதவீதமாக உள்ளது. 1951-ல் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை தற்போது 28 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தேர்தலில் பல மாவட்டங்களை இழந்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள்தொகையின்படி பார்த்தால் வரும் 2041-ம் ஆண்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    • சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் வெளியேற்றினர்.
    • 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை என்று கார்கே கண்டித்தார்.

    அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள பைகான் ரிசர்வ் வனப்பகுதியில் 140 ஹெக்டேர் நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களை அசாம் பாஜக அரசு வெளியேற்றியுள்ளது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

    பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள், வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) முதல் மக்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று போலீஸ் நடவடிக்கைக்கு அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தப்பட்டது.

    வனக் காவலர்கள் மற்றும் போலீசார் மீது குச்சிகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாக மாவட்ட காவல் ஆணையர் கூறுகிறார். இதைத்தொடர்ந்து போலீசார் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் ஷகூர் ஹுசைன் மற்றும் குத்புதீன் ஷேக் என்ற இரண்டு முஸ்லிம்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த மோதலில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.

    இடம்பெயர்ந்த மக்கள் படகுகள் மூலம் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போலீசாரை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 'சட்டப்படி' நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் பணி தொடரும் என்றும்,காடுகளை மீண்டும் உயிர்ப்பிக்க விரைவில் இந்தப் பகுதியில் மரங்கள் நடப்படும் என்றும் கூறினார்.

    முன்னதாக மற்றொரு சம்பவத்தில், புதன்கிழமை (ஜூலை 16) கோல்பாரா நகருக்கு அருகிலுள்ள ஒரு சதுப்பு நிலப் பகுதியில் 690 குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சி இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை கண்டித்தது, இது பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களை குறிவைத்த தாக்குதல் என்று குற்றம் சாட்டியது.

    மல்லிகார்ஜுன் கார்கே, "துப்ரி மற்றும் கோல்பாராவில் 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை" என்று கண்டித்தார்.

    சாய்கானில் நடந்த ஒரு பேரணியில், அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வெளியேற்றப்பட்டவர்களின் வீடுகளை மீண்டும் கட்டி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாக கார்கே உறுதியளித்தார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான அரசு அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்காக நிலங்களை காலி செய்கிறது, பொது நலனுக்காக அல்ல என்று இந்த வெளியேற்றங்களை குற்றம் சாட்டினார். 

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திய பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார்.

    ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் எனக்கு முன்னரே ராகுல் காந்தி சிறைக்கு செல்லாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    ஒரு மாநிலத்திற்கு வந்து ஒருவரை சிறைக்கு அனுப்புவேன் அல்லது மாட்டேன் என்று சொல்வது ஒரு தேசியத் தலைவருக்குப் பொருந்தாது. நான் எவ்வளவு முக்கியமானவன் என்பதை இது நிரூபிக்கிறது. எனக்கு முன்னதாகவே ராகுல் காந்தி சிறைக்கு செல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

    நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல குற்ற வழக்குகளில் தானும் ஜாமினில் வெளியே இருப்பதை காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) "வசதியாக மறந்துவிட்டார்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஊழலுக்காக சிறைக்கு செல்வார் என காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    முதல்வர் தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்.

    பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் இருந்து மகாராஷ்டிரா தேர்தலை திருடியது. பீகார் மீண்டும் அதை செய்ய முயற்சி செய்கிறார்கள். வடகிழக்கு மாநிலமான அசாமில் இதுபோன்ற எந்த முயற்சியும் நடப்பதை தடுக்க விழிப்புணர்வுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கொலை செய்து வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைப்பு.
    • அக்கம்பக்கத்தினர் கணவரை எங்கே? என கேள்வி எழுப்பியதால் வீட்டில் இருந்து ஓட்டம்.

    கணவருடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், கோபத்தில் கொலை செய்து உடலை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து தெரியாது போன்று நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபியல் ரஹ்மான். இவரது மனைவி ரஹிமான கதுன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    கணவன், மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ஆம் தேதி கணவன், மனைவி இடையே கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது கணவன் குடிபோதையில் இருந்துள்ளார்.

    சண்டை அதிகரிக்க நிதானத்தை இழந்த மனைவி, கணவனை அடித்து கொலை செய்துள்ளார். கணவரை கொலை செய்த பின், மனைவிக்கு பயணம் தொற்றிக் கொண்டது.

    வீட்டிற்குள்ளேயே 5 அடி பள்ளம் தோண்டி, உடலை புதைத்துள்ளார். பின்னர் ஏதும் தெரியாது போல் நடந்து கொண்டார். ஆனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்து கணவரை எங்கே கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அப்போது தனது கணவர் வேலைக்காக கேரளா சென்றுள்ளார் எனச் சொல்லி சமாளித்துள்ளார். ஆனாலும் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் தீரவில்லை. இதனால் தனக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே மருத்துவமனைக்கு செல்கிறேன் எனக் கூறிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

    சபியால் ரஹ்மான் சோதரர், தனது அண்ணனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்து தொடங்கிய நிலையில், காவல் நிலையத்தில் ரஹிமா சரணடைந்து, கணவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

    ×