என் மலர்tooltip icon

    அசாம்

    • சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் வெளியேற்றினர்.
    • 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை என்று கார்கே கண்டித்தார்.

    அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள பைகான் ரிசர்வ் வனப்பகுதியில் 140 ஹெக்டேர் நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களை அசாம் பாஜக அரசு வெளியேற்றியுள்ளது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

    பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள், வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) முதல் மக்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று போலீஸ் நடவடிக்கைக்கு அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தப்பட்டது.

    வனக் காவலர்கள் மற்றும் போலீசார் மீது குச்சிகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாக மாவட்ட காவல் ஆணையர் கூறுகிறார். இதைத்தொடர்ந்து போலீசார் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் ஷகூர் ஹுசைன் மற்றும் குத்புதீன் ஷேக் என்ற இரண்டு முஸ்லிம்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த மோதலில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.

    இடம்பெயர்ந்த மக்கள் படகுகள் மூலம் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போலீசாரை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 'சட்டப்படி' நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் பணி தொடரும் என்றும்,காடுகளை மீண்டும் உயிர்ப்பிக்க விரைவில் இந்தப் பகுதியில் மரங்கள் நடப்படும் என்றும் கூறினார்.

    முன்னதாக மற்றொரு சம்பவத்தில், புதன்கிழமை (ஜூலை 16) கோல்பாரா நகருக்கு அருகிலுள்ள ஒரு சதுப்பு நிலப் பகுதியில் 690 குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சி இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை கண்டித்தது, இது பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களை குறிவைத்த தாக்குதல் என்று குற்றம் சாட்டியது.

    மல்லிகார்ஜுன் கார்கே, "துப்ரி மற்றும் கோல்பாராவில் 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை" என்று கண்டித்தார்.

    சாய்கானில் நடந்த ஒரு பேரணியில், அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வெளியேற்றப்பட்டவர்களின் வீடுகளை மீண்டும் கட்டி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாக கார்கே உறுதியளித்தார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான அரசு அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்காக நிலங்களை காலி செய்கிறது, பொது நலனுக்காக அல்ல என்று இந்த வெளியேற்றங்களை குற்றம் சாட்டினார். 

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திய பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார்.

    ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் எனக்கு முன்னரே ராகுல் காந்தி சிறைக்கு செல்லாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    ஒரு மாநிலத்திற்கு வந்து ஒருவரை சிறைக்கு அனுப்புவேன் அல்லது மாட்டேன் என்று சொல்வது ஒரு தேசியத் தலைவருக்குப் பொருந்தாது. நான் எவ்வளவு முக்கியமானவன் என்பதை இது நிரூபிக்கிறது. எனக்கு முன்னதாகவே ராகுல் காந்தி சிறைக்கு செல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

    நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல குற்ற வழக்குகளில் தானும் ஜாமினில் வெளியே இருப்பதை காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) "வசதியாக மறந்துவிட்டார்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஊழலுக்காக சிறைக்கு செல்வார் என காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    முதல்வர் தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்.

    பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் இருந்து மகாராஷ்டிரா தேர்தலை திருடியது. பீகார் மீண்டும் அதை செய்ய முயற்சி செய்கிறார்கள். வடகிழக்கு மாநிலமான அசாமில் இதுபோன்ற எந்த முயற்சியும் நடப்பதை தடுக்க விழிப்புணர்வுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கொலை செய்து வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைப்பு.
    • அக்கம்பக்கத்தினர் கணவரை எங்கே? என கேள்வி எழுப்பியதால் வீட்டில் இருந்து ஓட்டம்.

    கணவருடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், கோபத்தில் கொலை செய்து உடலை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து தெரியாது போன்று நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபியல் ரஹ்மான். இவரது மனைவி ரஹிமான கதுன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    கணவன், மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ஆம் தேதி கணவன், மனைவி இடையே கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது கணவன் குடிபோதையில் இருந்துள்ளார்.

    சண்டை அதிகரிக்க நிதானத்தை இழந்த மனைவி, கணவனை அடித்து கொலை செய்துள்ளார். கணவரை கொலை செய்த பின், மனைவிக்கு பயணம் தொற்றிக் கொண்டது.

    வீட்டிற்குள்ளேயே 5 அடி பள்ளம் தோண்டி, உடலை புதைத்துள்ளார். பின்னர் ஏதும் தெரியாது போல் நடந்து கொண்டார். ஆனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்து கணவரை எங்கே கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அப்போது தனது கணவர் வேலைக்காக கேரளா சென்றுள்ளார் எனச் சொல்லி சமாளித்துள்ளார். ஆனாலும் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் தீரவில்லை. இதனால் தனக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே மருத்துவமனைக்கு செல்கிறேன் எனக் கூறிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

    சபியால் ரஹ்மான் சோதரர், தனது அண்ணனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்து தொடங்கிய நிலையில், காவல் நிலையத்தில் ரஹிமா சரணடைந்து, கணவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

    • திருமண பந்தத்தை மீறி இருமுறை வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
    • தொடர்ந்து நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்ந்ததால் விவாகரத்து பெற்றுள்ளனர்.

    அசாம் மாநிலம் நல்பாரி மாவடடத்தில், மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றதை தனக்குத்தானே பாலாபிஷகம் செய்து ஒருவர் கொண்டாடியுள்ளார்.

    நல்பாரி மாவட்டம் போரோலியபாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் மணிக் அலி. இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவரது மனைவி இரண்டு முறை திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துக் கொண்டு, வீட்டில் இருந்து இரண்டு முறை வெளியேறியுள்ளார். ஆனால் தனது குழந்தைக்காக இரண்டு முறையும் சமரசம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    இருந்தபோதிலும், உறுதியற்ற நிலையிலேயே இருவரும் வாழ்ந்து வந்தனர். இதனால் சட்டப்பூர்வமாக பிரிவதற்கு முடிவு செய்தனர். இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்தினர்.

    இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. இன்றில் இருந்து எனக்கு விடுதலை என சந்தோசம் அடைந்துள்ளார்.

    அத்துடன் 40 லிட்டர் பால் வாங்கி, எனக்கு இன்று முதல் எனக்கு விடுதலை எனக் கூறிக்கொண்டே தனக்குத்தானே பாலாபிஷேகம் செய்துள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    • குழந்தையை இளம்பெண்ணும் அவரின் தாயாரும் விற்க முயன்றுள்ளனர்.
    • போலீசார் குழந்தையை விற்ற இளம்பெண், அவரது தாயார் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஆகியோரை கைது செய்தனர்.

    அசாம்:

    அசாம் மாநிலம் சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த மாதம் 22 வயதான இளம்பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாகவில்லை. தகாத உறவில் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த குழந்தையை இளம்பெண்ணும் அவரின் தாயாரும் விற்க முயன்றுள்ளனர். குழந்தை விற்கப்போகும் தகவல் குழந்தைகள் நலக்குழு மருத்துவமனைக்கு தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தையை விற்க வேண்டாமென அந்த இளம்பெண்ணிற்கும், அவரது தாயாருக்கும் அறிவுரை வழங்கினர். அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே அவர்கள் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்றனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை விற்ற இளம்பெண், அவரது தாயார் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஆஷா பணியாளர் ஒருவர் என 3 பேரை கைது செய்தனர். குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்கள்
    • ஆர்எஸ்எஸ் மற்றும் நாட்டின் பிற அறிவுசார் தலைவர்கள் கோரியுள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பிலிருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். 

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் 42வது திருத்தம் மூலம் இந்த இரண்டு வார்த்தைகளும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறிய அவர் "ஐம்பது ஆண்டுகால அவசரநிலை இந்த ஆண்டு முடிவடைந்துவிட்டது.

    சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்கள். மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்காமல் பகவத் கீதையிலிருந்து நமது மதச்சார்பின்மையை நாம் எடுக்க வேண்டும்.

    ஆர்எஸ்எஸ் மற்றும் நாட்டின் பிற அறிவுசார் தலைவர்கள் இந்த வார்த்தைகளை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். எனவே, இது அதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு" என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

    முன்னதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் இந்த இரண்டு வார்த்தைகளை அரசியலமைப்பு முகவுரையில் இருந்த நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தேர்தல் வரவிருக்கின்றன. அவர்கள் தோல்வியை மறைக்க வேண்டும். இது அவர்களுடைய தந்திரம்.
    • வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க யாரையும் அனுமதிக்க விடமாட்டோம்.

    பாஜக, ஆர்எஸ்எஸ், வி.ஹெச்.பி., பஜ்ரங் தளத்தில் உள்ள குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் அசாமில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார்.

    மாட்டிறைச்சி, மற்றும் பசுக்களின் பாகங்களை பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு முன்னதாக வைப்பவர்களின் பின்னணியில் உள்ள காரணத்தை அறிந்து கொள்ள விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்தப்பட்டு, தொடர்புடையவர்களை கைது செய்ய வேணடும். முதன்முதலாக இந்த எண்ணம் தோன்றியவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோகாய் தெரிவித்துள்ளார்.

    மேலும் கவுரவ் கோகாய் இது தொடர்பாக கூறியதாவது:-

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் வரவிருக்கின்றன. அவர்கள் தோல்வியை மறைக்க வேண்டும். இது அவர்களுடைய தந்திரம். தேர்தலுக்கு முன்னதாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் வி.ஹெச்.பி. உள்ள சில குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற செயல்களை செய்ய முயற்சிப்பார்கள்.

    இங்கு வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க யாரையும் அனுமதிக்க விடமாட்டோம் என்பதுதான் எங்களுடைய முக்கிய எண்ணம். பாஜக-வால், மணிப்பூர் மக்களின் நிலையை நாம் பார்க்கிறோம். அதை அசாமில் அனுமதிக்க விடமாட்டோம்.

    அசாம் மாநில முதல்வர் அசோமியா ஜின்னா (Asomiya Jinnah) போல் செயல்படுகிறார். நாங்கள் ஜின்னா மாதிரியான அரசியலை அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.

    • மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, துப்ரி மாவட்டத்தில் சமீபத்திய மதரீதியான பதற்றங்களை தொடர்ந்து, இரவில், கண்டதும் சுடும் (shoot-at-sight) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    அசாம் - வங்கதேச எல்லையை ஒட்டிய துப்ரியில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு, ஹனுமான் கோவில் அருகே மாட்டுத் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மற்றும் கல் வீச்சு போன்ற மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிஸ்வா, "இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், மாலை 6 மணிக்குப்பிறகு கண்டதும் சுடப்படுவார்கள்.

    சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க விரைவு அதிரடிப் படை (RAF) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) நிலைநிறுத்தப்படுகின்றன.

    குற்றவாளிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்படும். மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்" என்று தெரிவித்தார்.

    பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • சண்டை நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் இழப்புகளைப் பற்றி ராகுல் காந்தி கேட்டார்.
    • எனினும், பாகிஸ்தான் இழப்பு குறித்து கேட்கவே இல்லை.

    பஹல்தாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக அசாம் மாநில சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மனம் மீதான விவாதத்தின்போது அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசினார்.

    அப்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    வெளிநாட்டில் மண்ணில் இந்தியாவை மிகவும் தீர்க்கமாக நியாயப்படுத்திய காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக சசி தரூர் இந்திய நிலையை வலுவாக நியாயப்படுத்தினார். அவர் மட்டுமல்ல, அசாதுதீன் ஓவைசி, சுப்ரியா சுலோ போன்ற பிரதிநிதிகளும் இந்தியாவின் நிலையை நியாப்படுத்தினர்.

    அவர்கள் அனைவரும் இந்தியாவுக்காக நின்றனர். ஆனால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வாறு நிற்கவில்லை. அவர் நாட்டிற்கு துரோகம் இழைத்துவிட்டார். அவர் இந்தியப் படைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டார்.

    ராணுவ மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட இழப்புகளைப் பற்றி கேட்பது வேறு விஷயம். ஆனால் அது நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் இழப்புகளைப் பற்றி அவர் கேட்டார். எனினும், பாகிஸ்தான் இழப்பு குறித்து கேட்கவே இல்லை.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கமாக எடுத்துக்கூற, எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை 33 நாடுகளுக்கு இந்திய அரசு அனுப்பி வைத்தது.

    • கவுரவ் கோகாய் குடும்பத்தில் ஒருவர் இந்தியர். மற்ற மூன்று பேர் (மனைவி மற்றும் குழந்தைகள்) வெளிநாட்டினர்.
    • சட்டசபை தேர்தலுக்கான போட்டி இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும்.

    அசாம் மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 2026 அசாம் சட்டமன்ற தேர்தல் இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில தலைவராக கவுரவ் கோகாய் இருந்து வருகிறார். இவரது மனைவி பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்சியான ஐஎஸ்ஐ உடன், கவுரவ் கோகாய் மனைவிக்கு தொடர்பு இருந்ததாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டி வருகிறார்.

    இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தல் இந்தியா- பிரிட்டன் இடையில் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    கவுரவ் கோகாய் குடும்பத்தில் ஒருவர் இந்தியர். மற்ற மூன்று பேர் (மனைவி மற்றும் குழந்தைகள்) வெளிநாட்டினர். சட்டசபை தேர்தலுக்கான போட்டி இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும். இது இந்தியா பெரியதா? அல்லது பிரிட்டன் பெரியதா? என்பதற்கானதாக இருக்கும்.

    இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் பொரோ இருந்திருந்தால், போட்டி இருந்திருக்கும். ஆனால் தற்போது போட்டியில்லை. செப்டம்பர் 10ஆம் தேதி இன்னும் ஏராளமான விசயங்கள் வெளிவரும்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கவுரவ் கோகாய் அங்கு போர் இருக்கும் (Juz Hobo) எனற முழக்கத்துடன் பணியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில்தான் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
    • இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தானுடனான சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நதியை சீனா தடுக்க ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த உதவியாளர் ராணா இஹ்சான் அப்சல் தெரிவித்தார்.

    இதற்கு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    காலாவதியான சிந்து நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா தீர்க்கமாக விலகிய பிறகு, பாகிஸ்தான் இப்போது புதிய மிரட்டலை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு பிரம்மபுத்திராவின் தண்ணீரை சீனா நிறுத்தினால் என்ன செய்வது என்று அச்சுறுத்தி உள்ளது. பிரம்மபுத்திராவின் மொத்த ஓட்டத்தில் சீனா 30 முதல் 35 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. மீதமுள்ள 65 முதல் 70 சதவீதம் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    பிரம்மபுத்திரா நதி இந்தியா மேல் நீரோட்டத்தை சார்ந்துள்ளது. இது மழையால் இயங்கும் இந்திய நதி அமைப்பு. இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு பலப்படுத்தப்படுகிறது. சீனா நீர் ஓட்டத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை. ஒருவேளை நீர் ஓட்டத்தை சீனா குறைத்தாலும் உண்மையில் இந்தியாவுக்கு அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைத் தணிக்க உதவக்கூடும்" என்று கூறினார்.

    ×