என் மலர்
அழகுக் குறிப்புகள்
- `ஹேர் ஸ்பிரே'யை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
- இன்றைய நாளில் இளம் வயதிலேயே பலரும் சந்திக்கும் பிரச்சினை நரைமுடி.
இன்றைய நாளில் இளம் வயதிலேயே பலரும் சந்திக்கும் பிரச்சினை நரைமுடி. அதற்காக பலவித செயற்கை சாயங்களை பூசி, பக்கவிளைவுகள் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். ஆனால், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற உதவும் `ஹேர் ஸ்பிரே'யை வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
பிரிஞ்சி இலை- 3
கிராம்பு- 1 ஸ்பூன்
காபித் தூள்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் பிரிஞ்சி இலையை நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். பின்னர் அதில் கிராம்பு சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இது ஆறியவுடன் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் காபி தூளை சேர்த்து கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
இதை நரைமுடி இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஸ்பிரே செய்து வந்தால், விரைவில் நரைமுடி கருப்பாக மாறும். இதில் உள்ள காபி, மென்மையான கூந்தலுக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.
- வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும்.
- 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம்.
வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும். சருமத்தில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும். வயது முதிர்ச்சிக்கு அடித்தளமிடும் இத்தகைய மாற்றம் சிலரிடத்தில் விரைவாகவே தென்படும். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம். முன்கூட்டியோ, விரைவாகவோ முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கலாம். அதற்கு வித்திடும் விஷயங்கள்...

சிவப்பு குடைமிளகாய்
உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் 'சூப்பர் புட்' உணவாக கருதப்படும் இது நம்பமுடியாத அளவுக்கு விரைவாக வயதாகும் தன்மையை தடுக்கக்கூடியது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அது கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடியது.
மேலும் சரும நலனுக்கு நன்மை சேர்க்கும் கரோட்டினாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. அவை சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப்போராட உதவும். சூரியக்கதிர்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும்.

பப்பாளி
உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றொரு பொருள், பப்பாளி. இது விரைவில் வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். வயதான அறிகுறிகள் வெளிப்படுவதை தாமதப்படுத்தும்.

ப்ளூபெர்ரி
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சூரிய ஒளி, மாசுபாடு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும் அந்தோசயனின் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அவற்றில் உள்ளன. மேலும் கொலாஜன் இழப்பைத் தடுத்து பொலிவான சருமத்தை தக்கவைக்கவும் உதவும்.

புரோக்கோலி
வைட்டமின் சி, கே, நார்ச்சத்து, போலேட், லுடீன், கால்சியம் உள்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்சிடென்டுகளை கொண்ட காய்கறியாக புரோக்கோலி விளங்குகிறது. இதில் வைட்டமின் சி இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையையும் அளிக்கிறது.

அவகேடோ
இந்த பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு வித்திடுகின்றன. மேலும் அவகேடோ பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. பளபளப்பான புள்ளிகளற்ற சரும அழகுக்கு அடிகோலுகிறது.
- தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
- சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும்.
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
* நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் குணமாகும்.
* திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
* தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
* ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.

* புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.
* பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
* பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.
* முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.
* காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்.
- உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை பருகலாம்.
முகத்தில் அதிகம் வியர்க்கிறது என்றால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம். உடல் அதிக வெப்பமாகும்போது தானாகவே ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி உண்டாகிறது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி தான் முகத்தில் அதிக வியர்வை வர காரணம்.
உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது அதனை தணிக்க அதிகப்படியான வியர்வை சுரக்கிறது. முகத்தில் அதிகம் வியர்ப்பவர்களுக்கு தலையிலும் வேர்க்கும். காரணம் இந்த ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி முகம் மற்றும் தலையை தான் அதிகம் பாதிக்கிறது. சிலருக்கு மரபணு மூலமாகவும் முகத்தில் அதிகம் வேர்க்கும். சிலருக்கு அதிக உடல் பருமன் காரணமாகவும் வேர்க்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் முகத்தில் வேர்க்கலாம்.
அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். கடினமான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளுவதாலும் வியர்வை முகத்தில் சுரக்க செய்யும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் வெப்பமாக இருக்கும்போது உடலை குளிர்ச்சியாக்க தன்னை தானே உடல் வியர்வை சுரக்க செய்யும். அதனால் உணவு முறைகள் மூலம் குளிர்ச்சியானவைகளை உண்ண வேண்டும்.

உடல் மற்றும் முகம் வியர்க்கும்போது குளிக்கலாம். முகத்தை அடிக்கடி குளிர்ச்சியான நீரில் கழுவலாம். இதனால் வியர்வை வடிவதை தடுக்க முடியும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை பருகலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்து வியர்வை வராமல் தடுக்கும்.
முகத்தில் எண்ணெய் வடிதல் இருந்தாலும் முகத்தில் அதிகமாக வேர்க்கும். அதனால் முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவுவது நல்லது.
- சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
- சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம்.
நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றிநோய் ஏற்படவும் காரணமாகிறது.
* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கிவிடலாம்.
* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்துபோக வாய்ப்பு அதிகம். நகம்வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்டவேண்டும்.

* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத்தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.
* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வே ண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
* சமையலறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச் சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
- அடர்த்தியான சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.
- பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.
நீங்கள் இப்போது தான் மேக்கப் போட கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த டிப்ஸ்கள் மிக உதவியாக இருக்கும். உங்களை அழகுபடுத்திக் கொள்ள...
நீங்கள் விரும்பும் அழகிய உதடுகள் சில நொடிகளில் இந்த மேக்அப் ட்ரிக் மூலம் பெற்றுவிடலாம்.
* சுத்தமான மாய்ஸ்சுரைஸ் செய்யப்பட்ட முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஃபவுண்டேஷனை பூசவும்.
* சுத்தமான பிரஷ் மூலம் பிளெண்ட் செய்து விடவும்.
* முகத்தில் இருக்கும் மாசுமருக்களை மற்றும் கருவளையத்தை மறைக்க முகத்தில் கன்சீலரை பூசவும்.
* ஐஷாடோவை கண்ணிமைகளில் பூசவும்.
* உங்கள் உதட்டின் இயற்கையான நிறத்தை விட ஒரு ஷேட் அடர்த்தியான நிறத்தில் லிப் பென்சிலை பயன்படுத்தி உதட்டில் கோடை வரையவும். உங்கள் உதட்டின் வெளிப்புற லைனில் லிப் லைனரை பயன்படுத்தவும்.
* அடர்த்தியான சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.
* சிறிது ஹை லைட்டரை உங்கள் உதட்டின் நடுவே பயன்படுத்தவும்.

உதட்டிற்கு மேலும் அழகேற்ற...
* உதட்டில் கொஞ்சம் ஃபவுண் டேஷன் இட்டு, சருமத்துடன் கலக்கச் செய்யுங்கள்.
* உதட்டைச் சுற்றி பவழ லிப் லைனரால் கோடு வரையுங்கள்.
* அதே லைனர் கொண்டு உதட்டின் உள்புறமும் நிரப்புங்கள்.
* உதட்டின் உள்ளே பவழ லிப்ஸ்டிக்கை இடுங்கள்.
* திஷ்யு பேப்பர் கொண்டு துடைத்து, மீண்டும் இடுங்கள். இதன்மூலம் உதட்டுச்சாயம் நீண்ட நேரத்துக்கு இருக்கும்.
மேட் லுக்குக்கு 5வது ஸ்டெப் உடன் நிறுத்தவும். பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.
- குளோரின் கலந்த நீரில் அதிகம் குளிப்பது தலைமுடியை வறட்சியடையச் செய்யும்.
- ஹேர் ட்ரையர் பயன்படுத்தும்போது அதிகம் சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தலைமுடி பிரச்சனையில் தலைமுடி வெடிப்பும் ஒன்று. சூரிய ஒளி, தூசி, சுற்றுப்புறத் தூய்மையின்மை போன்ற காரணங்களாலும் தலைமுடி வறண்ட தன்மையை அடைந்து வெடிப்படையும்.
* தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். தலைக்கு குளிக்க வேண்டும். தலையில் அழுக்கு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* குளோரின் கலந்த நீரில் அதிகம் குளிப்பது தலைமுடியை வறட்சியடையச் செய்யும்.
* தலைமுடியை சீவுவதற்கு தரமான சீப்பை பயன்படுத்தவும். தலை குளித்தவுடனேயே தலை சீவக்கூடாது. இதனால் முடி உடையும்.

* தலைமுடிக்கு கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். சிக்கு எடுக்க பெரிய பல் இருக்கும் சீப்பை பயன்படுத்த வேண்டும்.
* தலைமுடியை ஸ்ட்ரெய்ட் செய்யும்போது தலைமுடி ஈரமாக இருக்க கூடாது. இது முடி வெடிப்பிற்கு காரணமாகிவிடும்.
* ஹேர் ட்ரையர் பயன்படுத்தும்போது அதிகம் சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைமுடி பராமரிப்பது போலவே அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்க உள்ளிருந்து சரிசெய்ய வேண்டும். நாமும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
* ரசாயனங்களால் தயாரிக்கப்படும் கலரிங் பொருள்களை உபயோகித்தாலும் முடியின் நுனிகளில் வெடிப்புகள் உருவாகும்.
- கண்களில் மஸ்காரா, காஜல் நீக்கத்தை பாதிப்பில்லாமல் நீக்க தேங்காய் எண்ணெய் உதவும்.
- கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்கலாம்.
மேக் அப் பயன்படுத்துவதும் அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் அதை அன்றாடம் அகற்றவும் செய்ய வேண்டும். இல்லையெனில் சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். நம்மில் பலர் வெளியே கிளம்பும்போது சிரத்தையெடுத்து அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் வீடு திரும்பியதும் முகத்தில் கண்களில் இருக்கும் மேக் அப் பொருள்களை கலைக்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இதனால் சருமத்தினுள்ளே ரசாயனங்கள் ஊடுருவ வாய்ப்புண்டு. சருமத்துளைகளிலும் பருக்கள் மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும்.
மேக் அப் கலைக்க வீட்டிலிருக்கும் பொருள்களை பயன்படுத்தினால் சருமத்துக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.
* சுத்தமான நீரில் முகத்தை கழுவி மேக் அப் கலைப்பதை காட்டிலும் சில துளி தேங்காய் எண்ணெய் முகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மேக் அப்பை சுத்தமாக நீக்கிவிடும்.

* ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து உள்ளங்கையில் தடவி நன்றாக தேய்த்து முகம் முழுக்க லேசாக மசாஜ் செய்தால் மேக் அப் பாதிப்பில்லாமல் நீங்கும். கண்களில் மஸ்காரா, காஜல் நீக்கத்தை பாதிப்பில்லாமல் நீக்க தேங்காய் எண்ணெய் உதவும்.
* முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் இருக்கும் அழுக்கை அகற்றும் சுத்தமான இயற்கை பொருள் பால். புரதங்களும், கொழுப்பும் சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்கும். பாலை கொண்டு முகத்தை துடைத்தால் முகத்தில் வறட்சி பிரச்சனையே இருக்காது.
* காய்ச்சாத பாலை சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தில் நன்றாக படரும் படி ஒற்றி ஒற்றி எடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் காட்டனை கொண்டு துடைத்து எடுங்கள். மேக் அப் சற்று கூடுதலாக பயன்படுத்தி இருப்பவர்கள் ஆலிவ் எண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து பிறகு பாலை கொண்டு சருமத்தை சுத்தம் செய்யலாம். இவை சரும துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி முகத்தை பளிச்சென்று வைக்க உதவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். இதனால் சருமம் மென்மையாக மாறும்.
* அழகு சாதன பொருள்கள் எப்போதாவது சருமத்தில் லேசான எரிச்சலை உண்டாக்குவது போல் இருப்பவர்கள் சிறப்பான முறையில் அதை அகற்ற வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரிக்காயை தோல் சீவி நன்றாக மைய அரைத்து விழுதாக்கி வைத்துகொள்ளவும். தினசரி மேக் அப் பயன்படுத்துபவர்கள் வாரம் ஒரு முறை இதை மசித்து வைத்துகொள்ளலாம்.
* மேக் அப் கலைக்கும்போது இந்த விழுதை முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். மேக் அப் பயன்பாடும் நீங்கும். வெள்ளரிக்காய் விழுதை பயன்படுத்துவது சிரமமாக இருந்தால் வெள்ளரிக்காயை அரைத்து கெட்டியாக சாறு பிழிந்து அதை காட்டனில் நனைத்தும் பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் கூடுதலாக குளிர்ச்சித்தன்மையை உணர்வீர்கள்.
* கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்கலாம். கண்களை சுற்றியிருக்கும் மேக் அப்- ஐயும் இதை கொண்டு துடைத்து எடுக்கலாம். கற்றாழை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்கள் வராமல் தடுக்கமுடியும். இதை கொண்டு மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் முகம் மென்மையாக மாறும்.
* பார்ட்டி, திருமணம் போன்ற விசேஷங்களின்போது சற்று அதிகப்படியான மேக் அப் பயன்படுத்துவது உண்டு. இந்த நேரத்தில் முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் இருக்கும் மேக் அப் முழுவதுமே வெளியேறும். அதோடு சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி அகற்றப்படும். இதன் மூலம் மறுநாள் உங்கள் முகத்தில் கூடுதல் பொலிவை உணரலாம்.
* மேக் அப் பயன்பாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று அதை கலைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் சருமம் எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.
- கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை தருவதில் சிறந்த பழமாக முலாம் பழம் உள்ளது.
- முலாம் பழம் சரும செல்களை பாதுகாக்கிறது.
முலாம் பழத்தில் நீர்ச்சத்தும், வைட்டமின்களும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முலாம் பழம் வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற இயற்கை ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை தருவதில் சிறந்த பழமாக முலாம் பழம் உள்ளது.
முலாம் பழம் சரும செல்களை பாதுகாக்கிறது. முலாம் பழம் சாப்பிடுபவர்களின் சருமம், வறட்சியாகவோ, சொரசொரப்பாகவோ இருக்காது.
முலாம் பழத்தை சாப்பிட்டாலும் நமது உடலுக்கும் முக அழகிற்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் முலாம் பழத்தை அப்படியேவும் முகத்தில் தடவி மசாஜ் செய்து, முகத்தை கழுவினால் முகம் அழகு பெறும்.
* முலாம் பழத்தை துண்டுகளாக்கி அரைத்து 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1 ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை சாதாரண நீரில் கழுவி வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள தூசுகள் அழுக்குகள் நீங்கி வெண்மை பெறும்.
* முலாம் பழ ஜூஸ் 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த முலாம் பழ சாற்றை முகத்தில் பூசி 20 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் வடிதல் நின்று, பருக்கள் உண்டாவதை தடுக்கும்.
- வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.
ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.
ஆளிவிதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கு பங்களிக்கும். நீண்ட மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆளிவிதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்து நல்ல முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆளிவிதைகளில் லிக்னான்ஸ் எனப்படும் தாவர கலவை உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டிஆக்சிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாத்து தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.
மேலும் முடிவளர்ச்சிக்கு சீரான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
- பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன.
- உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன.
குதிகால் வெடிப்பு, பித்த வெடிப்பு என்றழைக்கப்படும் பாத வெடிப்பு வருவதற்கான காரணங்கள், மற்றும் பித்த வெடிப்பு நீங்க எளிய வழிகள் பற்றி பார்க்கலாம்.
பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன. முக அழகின் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
தற்போது, 'பாத வெடிப்பு' என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினையாகும். இது "பித்த வெடிப்பு" என்றும் "கால் வெடிப்பு" என்றும் அழைக்கப்படுகிறது. இது அழகை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

குதிகால் வெடிப்பு காரணம் :
உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் இருக்கும்போது வெடிப்புகளில் அழுக்கு சேருவது, கிருமித் தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக சீழ் வடிதல், எரிச்சல், வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

மருதாணி
பாத வெடிப்புகளை குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு, கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிய துண்டு சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.
இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் போட்டு, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு, அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால், பாத வெடிப்பு நீங்கும்.

எலுமிச்சை சாறு
குதிகால் வெடிப்புக்கு இளம் சூடான நீரில், 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் பாதங்களில் படிந்திருக்கும். இறந்த செல்களை நீக்கிவிட்டு, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.

மஞ்சள்
பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து, வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம். இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

மசாஜ்
குதிகால் வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் பாதங்களை மசாஜ் செய்வது ஆகும். பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமஅளவு கலந்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம், வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.
- முடிவளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.
- பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சினை. என்றாலும் இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடிவளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகை கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
முகத்தில் ஏற்படும் முடிவளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முகமுடி வளர்ச்சியை கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களை காணலாம்.

முகத்தில் உள்ள முடியை நீக்கவும், முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் உதவியாக இருக்கும். முதலில் பப்பாளியை மசித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி வர சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம்.

அதேபோன்று கடலை மாவு மற்றும் மஞ்சள் பேக் கூட முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கடலைமாவு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு, சந்தனம் சேர்த்து ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் தேனில் எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி வரலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவில் சோளமாவு கலந்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி நன்றாக காய்ந்த பிறகு ஈரத்துணி கொண்டு துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும்.
முகத்தை வறட்சி மற்றும் முகத்தில் முடி பிரச்சனையில் இருந்து பாதுகாக்க மைசூர் பருப்பை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பால், தேங்காய் எண்ணெய் கலந்து பேக் மாதிரி முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி வலுவலுப்புத்தன்மை அளிக்கிறது.






