என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு

மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.
ருசியான மீன் வடை தயார்.
மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.
ருசியான மீன் வடை தயார்.
இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலை உணவான இட்லியை எப்படி மறுபடியும் சுவையான மற்றும் புதுமையான முறையில் மாலை நேர சிற்றுண்டியாக மாற்றுவது என்று அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஒரு கப் நறுக்கிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
கடுகு
கடலைபருப்பு
மஞ்சள் தூள் - அரை டேபிள்ஸ்பூன்
இட்லி - 5
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு

செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பிறகு அரை ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு அந்தக் கலவையை சிறிது நேரம் நன்கு வேக வைக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து இட்லி துண்டுகள் அந்த மசாலா கலவையில் சேரும் வரை கவனமாக உடையாமல் கிளறி விடவும்.
கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
ஒரு கப் நறுக்கிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
கடுகு
கடலைபருப்பு
மஞ்சள் தூள் - அரை டேபிள்ஸ்பூன்
இட்லி - 5
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பிறகு அரை ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு அந்தக் கலவையை சிறிது நேரம் நன்கு வேக வைக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து இட்லி துண்டுகள் அந்த மசாலா கலவையில் சேரும் வரை கவனமாக உடையாமல் கிளறி விடவும்.
கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
சூடான சுவையான மசாலா இட்லி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காளானில் கிரேவி, 65, செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான், குடைமிளகாய் வைத்து டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - 10
குடைமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு

செய்முறை :
காளானை சுத்தம் செய்து வைக்கவும்.
குடைமிளாய், வெங்காயத்தை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயத்துடன் மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பூண்டு, மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
சோம்பு, வெந்தயம், தனியா, கடுகு போன்றவற்றை வறுத்து பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வறுத்து பொடித்த கலவையை கொட்டி கிளறவும்.
பச்சை வாசனை போனதும் இறக்கி அதனுடன் குடை மிளகாய், காளான் துண்டுகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய காளான், குடை மிளகாயை டிக்கா குச்சியில் குத்தி எண்ணெயில் போட்டு பொரித்து பரிமாறவும்.
சூப்பரான காளான் டிக்கா ரெடி.
காளான் - 10
குடைமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
தனியா - சிறிதளவு

செய்முறை :
காளானை சுத்தம் செய்து வைக்கவும்.
குடைமிளாய், வெங்காயத்தை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயத்துடன் மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பூண்டு, மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
சோம்பு, வெந்தயம், தனியா, கடுகு போன்றவற்றை வறுத்து பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வறுத்து பொடித்த கலவையை கொட்டி கிளறவும்.
பச்சை வாசனை போனதும் இறக்கி அதனுடன் குடை மிளகாய், காளான் துண்டுகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய காளான், குடை மிளகாயை டிக்கா குச்சியில் குத்தி எண்ணெயில் போட்டு பொரித்து பரிமாறவும்.
சூப்பரான காளான் டிக்கா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நண்டு சூப்பை சாப்பிட்டால் தெரியும் அதன் ருசி. இந்த நண்டு சூப்பை செய்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு - அரை கிலோ
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 3
கான்ப்ளார் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆறவிட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும்.
பாலில் கான்ப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும்.
கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, கான்ப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவினால் சுவை மிகுந்த நண்டு சூப் தயார்.
நண்டு - அரை கிலோ
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 3
கான்ப்ளார் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி
பால் - கால் கப்

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆறவிட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும்.
பாலில் கான்ப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும்.
கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, கான்ப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவினால் சுவை மிகுந்த நண்டு சூப் தயார்.
ஜலதோஷம் பிடித்தால் அதை துரத்துவதற்கு நல்ல மருந்து.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 2,
தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,

செய்முறை:
வாழைக்காயை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும்.
பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா தயார்!
வாழைக்காய் - 2,
தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
வாழைக்காயை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும்.
பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா தயார்!
இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொதுவாக பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. இதில் பல வகைகள் உண்டு. அதில் மீன் பிரியாணியும் ஒன்று. அதை செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
மீன் - 3/4 கிலோ (பெரிய வகை துண்டு மீன்)
வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா 2
தயிர் - ஒன்றரை கப்
மிளகாய் தூள் - 2+1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 + 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக் கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்த மசாலாவில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலாவில் பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுக்க வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விட வேண்டும்.
பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும்.
பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
மீன் - 3/4 கிலோ (பெரிய வகை துண்டு மீன்)
வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா 2
தயிர் - ஒன்றரை கப்
மிளகாய் தூள் - 2+1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 + 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக் கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்த மசாலாவில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலாவில் பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுக்க வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விட வேண்டும்.
பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும்.
பின் அரிசியை களைந்து போட்டு, மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக வைத்ததும் நன்கு கிளறிவிட்டு, தனியாக எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு இறக்கினால் கமகமக்கும் மீன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை, நாண், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெஜிடபிள் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 2
பீன்ஸ் - 15,
பட்டாணி - கால் கப்,
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
சோம்பு - அரை டீஸ்பூன்,

செய்முறை :
கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
கேரட் - 2
பீன்ஸ் - 15,
பட்டாணி - கால் கப்,
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5.

செய்முறை :
கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
அருமையான வெஜிடபிள் குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பாயாசம் செய்து கொடுக்க விரும்பினால் சத்தான கம்பு சேர்த்து பாயாசம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு - அரை கப்
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை
பாதாம், பிஸ்தானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பை முதல் நாள் இரவே நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
மறுநாள் பாதியளவு பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
மீதி பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.
அதனுடன் வேகவைத்த கம்புப் பயறைச் சேர்த்து, ஏலக்காயைத் தட்டிப் போட்டு இறக்கவும்.
பிஸ்தா, பாதாம் பருப்புகளைச் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான சுவையான கம்பு பாயாசம் ரெடி.
கம்பு - அரை கப்
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
பிஸ்தா, பாதாம், ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை
பாதாம், பிஸ்தானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பை முதல் நாள் இரவே நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
மறுநாள் பாதியளவு பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
மீதி பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.
அதனுடன் வேகவைத்த கம்புப் பயறைச் சேர்த்து, ஏலக்காயைத் தட்டிப் போட்டு இறக்கவும்.
பிஸ்தா, பாதாம் பருப்புகளைச் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான சுவையான கம்பு பாயாசம் ரெடி.
குறிப்பு: சர்க்கரையை தவிர்க்க நினைப்பவர்கள் கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
செட்டிநாடு மட்டன் கிரேவியை சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பில்லை - 2 கொத்துகள்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவிக்கு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
செட்டிநாடு மசாலா தூள் செய்ய
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
கல் பாசி - 2
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 கொத்துகள்

செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் தனியா தூள், உப்பு சேர்த்து 5 - 6 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்துக்கொண்டு, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
கிரேவிக்கு கொடுத்துள்ள பொருள்களை, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதக்கிய பின், அரைத்து வைத்த கிரேவியை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு, வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து, நன்றாக கிளறவும்.
பிறகு, அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா தூளை சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீரும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.
சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்!
மட்டன் - 1 /2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பில்லை - 2 கொத்துகள்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவிக்கு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
செட்டிநாடு மசாலா தூள் செய்ய
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
கல் பாசி - 2
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 கொத்துகள்
காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்திற்கேற்ப)

செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் தனியா தூள், உப்பு சேர்த்து 5 - 6 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்துக்கொண்டு, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
கிரேவிக்கு கொடுத்துள்ள பொருள்களை, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதக்கிய பின், அரைத்து வைத்த கிரேவியை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு, வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து, நன்றாக கிளறவும்.
பிறகு, அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா தூளை சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீரும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.
சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்!
சிவரஞ்சனி ராஜேஷ், கரூர்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடல் உணவில் இறால் பெரும்பாலானவர்களால் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடியது. இறால் பெப்பர் பிரை அனைவரும் விரும்பக் கூடியதாகும். அதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - 25 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

இறாலை சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப்போட்டு, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறாமாக வதங்கியதும் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும்.
இறால் அதிக நேரம் வேக வைக்க கூடாது. இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடாத வகையில் பக்குவமாக இறக்கி ஆறியதும் பரிமாறலாம்.
இறால் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - 25 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
இறாலை சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப்போட்டு, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறாமாக வதங்கியதும் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும்.
இறால் அதிக நேரம் வேக வைக்க கூடாது. இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடாத வகையில் பக்குவமாக இறக்கி ஆறியதும் பரிமாறலாம்.
சூப்பரான இறால் பெப்பர் பிரை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 6,
பச்சை மிளகாய் - 3,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா - சிறிதளவு,
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பொடிக்க (முதல் வகை) :
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
கசகசா 2 - டீஸ்பூன்,
முந்திரி - 6,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடிக்கு:
தனியா, துவரம் பருப்பு தலா - 2 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 4,
கொப்பரை தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் 1 டீஸ்பூன்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தக்காளி குழைய வதங்கியதும் இறக்கவும்.
இந்த தொக்கை சாதத்தில் போட்டு அதனுடன் பொடித்த 2 பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறுங்கள்.
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 6,
பச்சை மிளகாய் - 3,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா - சிறிதளவு,
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பொடிக்க (முதல் வகை) :
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
கசகசா 2 - டீஸ்பூன்,
முந்திரி - 6,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடிக்கு:
தனியா, துவரம் பருப்பு தலா - 2 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 4,
கொப்பரை தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் 1 டீஸ்பூன்.

செய்முறை:
பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள 2 வகைகளை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தக்காளி குழைய வதங்கியதும் இறக்கவும்.
இந்த தொக்கை சாதத்தில் போட்டு அதனுடன் பொடித்த 2 பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறுங்கள்.
சுவையான ஸ்பெஷல் தக்காளி சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ராஜ்மாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராஜ்மாவில் சுவையான சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராஜ்மா - 2 கப்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
வதக்கிய பெரிய வெள்ளை வெங்காயம் - அரை கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி - அரை கப்,
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு,

செய்முறை :
வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த ராஜ்மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் வெங்காயம், பொடித்த முந்திரி, வெள்ளை மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, புதினாவைச் சேர்த்துக் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவில் தட்டி வைக்கவும்.
இதை பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
ராஜ்மா - 2 கப்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
வதக்கிய பெரிய வெள்ளை வெங்காயம் - அரை கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி - அரை கப்,
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு,

செய்முறை :
வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த ராஜ்மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் வெங்காயம், பொடித்த முந்திரி, வெள்ளை மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, புதினாவைச் சேர்த்துக் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவில் தட்டி வைக்கவும்.
இதை பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான ராஜ்மா கட்லெட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






