என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு சூப்பரான வெஜிடபிள் குருமா
Byமாலை மலர்17 July 2019 8:37 AM GMT (Updated: 17 July 2019 8:37 AM GMT)
தோசை, நாண், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெஜிடபிள் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 2
பீன்ஸ் - 15,
பட்டாணி - கால் கப்,
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
செய்முறை :
கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
கேரட் - 2
பீன்ஸ் - 15,
பட்டாணி - கால் கப்,
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5.
செய்முறை :
கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
அருமையான வெஜிடபிள் குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X