என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    சப்பாத்தி - 5
    முட்டை- 2
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி,  கறிவேப்பிலை  -  சிறிதளவு
    எண்ணெய்  - 4 ஸ்பூன்
    உப்பு - தேவைாயன அளவு

    முட்டை கொத்து சப்பாத்தி

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கி பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து வதக்கவும்.

    சப்பாத்தியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும்.

    முட்டை வெந்து கலவையுடன் ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சுவையான முட்டை கொத்து சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தொடர்ந்து ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வித்தியாசமான உருளைக்கிழங்கு பிரட் வடையை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - 2
    பிரெட் துண்டுகள் - 10
    வறுத்த ரவை - அரை கப்
    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது

    பிரெட் உருளைக்கிழங்கு வடை

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெண்டைக்காய் சாதம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த சாதத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 100 கிராம்,
    உதிரியாக வடித்த சாதம் - 1 கப்,
    கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,
    மஞ்சள் தூள் -  அரை டீஸ்பூன்,  
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
    பட்டை - 2,
    கடுகு - 1  டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    வெண்டைக்காய் சாதம்

    செய்முறை :

    வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெண்டைக்காயை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

    லேசாக வெந்ததும், அதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.  

    குறைந்த தணலில் வைத்து, மசாலா வெண்டைக்காய் முழுவதும் படிகிற படி வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.

    இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, பட்டை, மஞ்சள் தூள் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுக்கவும்.

    இதில் சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, வெண்டைக்காய் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

    குறைந்த தணலில், சாதம், மசாலா எல்லாம் சேர்ந்து வரும்படி 5 நிமிடங்களுக்குக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான வெண்டைக்காய் சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுகொள்ள கொண்டைக்கடலை மசாலா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொண்டைக்கடலை - 200 கிராம்,
    வெங்காயம், தக்காளி - தலா 2,
    சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    தேங்காய்ப் பால் - முக்கால் கப்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கொண்டைக்கடலை மசாலா

    செய்முறை:


    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்துக் வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும்.

    நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் பட்டர் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கரம் மசாலா பொடி: இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத்தான் இப்படி!

    செய்முறை:

    லவங்கம் - 2 டீஸ்பூன்,
    ஏலக்காய் - 1 டீஸ்பூன்,
    பட்டை - 4,
    தனியா - 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்…

    இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!

    கறி மசாலா பொடி: இதை, மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

    செய்முறை:


    காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் - 1 கப்,
    தனியா - அரை கப்,
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
    சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 5.

    இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!

    பன்னீர் பட்டர் மசாலா

    தேவையான பொருட்கள் :


    பன்னீர் - 200 கிராம்,
    பெரிய வெங்காயம் -3,
    தக்காளி - 4,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,
    வெண்ணெய் - 50 கிராம்,
    ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!),
    காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.

    கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.

    ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

    குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பன்னீர் பட்டர் மசாலா!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பிட வெரைட்டி சாதம் செய்து கொடுக்கலாம். இன்று சோயா சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்,
    சோயா உருண்டைகள் - அரை கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன்,
    தயிர் - அரை கப்,
    கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    சோயா சாதம்

    செய்முறை:

    சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில், மெலிதாக நறுக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள்.

    பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, 10 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

    இப்போது சூப்பரான சோயா சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு  - 2 கப்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    உருளைக்கிழங்கு - 250 கிராம்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    ஆலு பட்டூரா

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சீரகம், மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்).

    பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் திரட்டி வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஆலு பட்டூரா ரெடி.

    குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை - ஒரு கப்,
    சர்க்கரை - இரண்டரை கப்,
    நெய் - அரை கப்,
    எண்ணெய் - கால் கப்,
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    கேசரி பவுடர் - 2 சிட்டிகை,
    முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவை - தேவையான அளவு,
    வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்,
    பாதாம் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) - சில சொட்டுகள்.

    கோதுமை அல்வா

    செய்முறை:

    கோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்கவும்.

    மறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.

    இதை எடுத்து சிறு கண்ணுள்ள வடிதட்டியில் போட்டு கரண்டியால் அழுத்தி பாலை வடிக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டவும். இது போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து, இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும். பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதை பால் சிதறாமல் வடிகட்டவும். மீண்டும் அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே தெளியும் நீரை வடித்துவிடவும்.

    முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும்.

    எண்ணெய் - நெய்யைக் கலந்து கொள்ளவும்.

    நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.

    கோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.

    கோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வரை கிளறவும்.

    முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.

    நெய் தடவிய தட்டில் பரத்தி சுடச்சுடவோ… ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டையில் பொரியல், ஆம்லெட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முட்டையை வைத்து மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    மிளகு தூள், உப்பு - தேவையான அளவு,
    மைதா - கால் கப்
    சோள மாவு - கால் கப் + 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    பொடியாக நறுக்கி இஞ்சி - 1 ஸ்பூன்
    பொடியாக நறுக்கி பூண்டு - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    குடைமிளகாய் - 1
    சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்,
    சோயா சாஸ் - 1 ஸ்பூன்,
    வெங்காயத்தாள் - சிறிதளவு.

    முட்டை மஞ்சூரியன்

    செய்முறை  :

    குடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    1 ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்

    பின்னர் சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகாய் தூள், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும்.

    இரண்டும் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து சில்லி சாஸ், tomato ketchup, சோயா சாஸ் போட்டு நன்றாக கிளறவும்.

    அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

    முட்டை மஞ்சூரியன் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதம், சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெங்காயத்தாள் பருப்பு கூட்டு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயத்தாள் - 1 கட்டு
    பாசிப்பருப்பு - 25 கிராம்
    துவரம்பருப்பு - 50 கிராம்
    சாம்பார் பொடி - அரை டேபிள் ஸ்பூன்
    மஞ்சள்பொடி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 5
    வெங்காயம் - 2
    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வெங்காயத்தாளை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து அதில் வேகவைத்து உப்பு, மசித்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூடான வெங்காயத்தாள் பருப்பு கூட்டு ரெடி.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கூட்டுடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜஸ்தானில் ரப்டி மால் பூவா இனிப்பு மிகவும் பிரபலம். இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்,
    சர்க்கரை - 1¼ கப்,
    தண்ணீர் - தேவைக்கு,
    உப்பு - 1 சிட்டிகை,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    காய்ந்த திராட்சை, பாதாம், பிஸ்தா - தலா 15.

     

    செய்முறை

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து இளம் பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எண்ணெயில் தட்டையாக ஊற்றி பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் புரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.

    அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, திராட்சையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான ரப்டி மால் பூவா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கும்பகோணத்தில் இரண்டு விஷயங்கள் பேமஸ். ஒன்று டிகிரி காபி. மற்றொன்று கும்பகோண கொஸ்துவின் சுவை. இன்று இந்த கொஸ்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப் பருப்பு - 1 கப்
    பச்சைப் பயறு - 2 கரண்டி
    நிலக்கடலை - 2 கரண்டி
    கொள்ளு - 2 கரண்டி
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 4
    பச்சை கத்தரிக்காய் - 2
    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிதளவு
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    சாம்பார் பொடி, உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இந்த பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    வெந்த பருப்புடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் போட்டு இறக்கவும்.

    வெந்த கலவையை மத்தால் மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து  கொஸ்துவில் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.

    இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×