search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெங்காயத்தாள் பருப்பு கூட்டு
    X

    வெங்காயத்தாள் பருப்பு கூட்டு

    சூடான சாதம், சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெங்காயத்தாள் பருப்பு கூட்டு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயத்தாள் - 1 கட்டு
    பாசிப்பருப்பு - 25 கிராம்
    துவரம்பருப்பு - 50 கிராம்
    சாம்பார் பொடி - அரை டேபிள் ஸ்பூன்
    மஞ்சள்பொடி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 5
    வெங்காயம் - 2
    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வெங்காயத்தாளை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து அதில் வேகவைத்து உப்பு, மசித்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூடான வெங்காயத்தாள் பருப்பு கூட்டு ரெடி.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கூட்டுடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×