search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மசாலா இட்லி
    X
    மசாலா இட்லி

    மாலை நேர டிபன் மசாலா இட்லி

    காலை உணவான இட்லியை எப்படி மறுபடியும் சுவையான மற்றும் புதுமையான முறையில் மாலை நேர சிற்றுண்டியாக மாற்றுவது என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஒரு கப் நறுக்கிய தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
    கடுகு
    கடலைபருப்பு
    மஞ்சள் தூள் - அரை டேபிள்ஸ்பூன்
    இட்லி - 5
    கொத்தமல்லி - தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

    மசாலா இட்லி

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பிறகு அரை ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு அந்தக் கலவையை சிறிது நேரம் நன்கு வேக வைக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து இட்லி துண்டுகள் அந்த மசாலா கலவையில் சேரும் வரை கவனமாக உடையாமல் கிளறி விடவும்.

    கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    சூடான சுவையான மசாலா இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×