என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
காய்கறி மற்றும் சோயா சேர்த்து தயாரிக்கப்படும் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப்,
சோயா உருண்டைகள் - அரை கப்,
கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - அரை கப் ( பொடியாக நறுக்கி கொள்ளவும்)
பட்டாணி - சிறிதளவு
வெங்காயம் - 100 கிராம்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
தயிர் - அரை கப்,
எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
சோயாவைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.
அடுத்து மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும்.
அடுத்து இதில் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 5 நிமிடம் 'சிம்"மில் வைத்து இறக்கவும்.
சத்தான சுவையான சோயா வெஜிடபிள் புலாவ் ரெடி.
இதற்கு தொட்டுகொள்ள தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம்.
பாசுமதி அரிசி - 2 கப்,
சோயா உருண்டைகள் - அரை கப்,
கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - அரை கப் ( பொடியாக நறுக்கி கொள்ளவும்)
பட்டாணி - சிறிதளவு
வெங்காயம் - 100 கிராம்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
தயிர் - அரை கப்,
எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
சோயாவைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.
அடுத்து மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும்.
அடுத்து இதில் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 5 நிமிடம் 'சிம்"மில் வைத்து இறக்கவும்.
சத்தான சுவையான சோயா வெஜிடபிள் புலாவ் ரெடி.
இதற்கு தொட்டுகொள்ள தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்து கொடுத்தால் உடலுக்கு வலிமை கிடைக்கும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெஞ்செலும்பு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சீரகம், மிளகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - சிறிது
தாளிக்க :

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.
இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.
நெஞ்செலும்பு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சீரகம், மிளகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - சிறிது
தாளிக்க :
இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.
இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி, தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நாட்டுகோழி குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
கசகசா - ஒரு ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.
மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்
உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும்.
இப்போது சூப்பரான நாட்டு கோழி குருமா தயார்
நாட்டுக்கோழி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
கசகசா - ஒரு ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.
மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்
உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும்.
இப்போது சூப்பரான நாட்டு கோழி குருமா தயார்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
கடலை மாவு - 100 கிராம்
சோள மாவு - 50 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - கால் கிலோ

செய்முறை:
வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயத்தாளை போட்டு அதனுடன் கடலைமாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பக்கோடாவாக சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரித்து எடுக்கவும்.
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
கடலை மாவு - 100 கிராம்
சோள மாவு - 50 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - கால் கிலோ
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயத்தாளை போட்டு அதனுடன் கடலைமாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பக்கோடாவாக சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரித்து எடுக்கவும்.
சூப்பரான ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குடைமிளகாயில் சட்னி, கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குடைமிளகாய், முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
ப.மிளகாய் - 1
மிளகு சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய் போட்டு வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வதங்கக்கூடாது.
பிறகு உப்பு தூள் மற்றும் முட்டை போட்டு கிளறவும்.
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
முட்டை - 3
வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
ப.மிளகாய் - 1
மிளகு சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய் போட்டு வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வதங்கக்கூடாது.
பிறகு உப்பு தூள் மற்றும் முட்டை போட்டு கிளறவும்.
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
சுவையான குடைமிளகாய் முட்டை பொரியல் ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் லஸ்ஸி இது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரோஸ் எசன்ஸ் - 3 மேஜைக்கரண்டி
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
தயிர் - ஒரு கப்
நட்ஸ் - அலங்கரிக்க

செய்முறை :
மிக்ஸியில் தயிர், ரோஸ் எசன்ஸ், உப்பு, ஐஸ் க்யூப்ஸ், சீனி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
ரோஸ் எசன்ஸ் - 3 மேஜைக்கரண்டி
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
தயிர் - ஒரு கப்
நட்ஸ் - அலங்கரிக்க
ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு

செய்முறை :
மிக்ஸியில் தயிர், ரோஸ் எசன்ஸ், உப்பு, ஐஸ் க்யூப்ஸ், சீனி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
ஒரு உயரமான கண்ணாடி டம்ளர் உள்ளே ஓரங்களில் சிறிது ரோஸ் எசன்ஸை ஸ்பூனால் ஊற்றவும். பின்பு மிக்ஸியில் அரைத்த ரோஸ் லஸ்ஸியை ஊற்றவும்.
இறுதியாக மேலே நட்ஸ் மற்றும் ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு விருப்பமான காளான் ஸ்டப்ஃடு தோசை செய்வது மிகவும் எளிது. இன்று இந்த ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - இரண்டு கப்,
காளான் - ஒரு கப்,
வெங்காயம் - 2,
மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
நசுக்கிய பூண்டு - 2 பல்,

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து… பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்கி வைக்கவும்…
தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து மாவு வெந்ததும் எடுத்து மடித்து பரிமாறவும்.
இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.
தோசை மாவு - இரண்டு கப்,
காளான் - ஒரு கப்,
வெங்காயம் - 2,
மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
நசுக்கிய பூண்டு - 2 பல்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து… பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்கி வைக்கவும்…
தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து மாவு வெந்ததும் எடுத்து மடித்து பரிமாறவும்.
இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.
சூப்பரான காளான் ஸ்டப்ஃடு தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோஸ் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் - கால் கிலோ,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை, ஏலக்காய், லவங்கம் - தலா 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
பச்சை மிளகாய் - 4,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,

செய்முறை :
முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், சோம்பு, தனியா தூள், பூண்டை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், முட்டைகோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
இதனுடன் அரைத்த ப.மிளகாய், சோம்பு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
முட்டைகோஸ் - கால் கிலோ,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை, ஏலக்காய், லவங்கம் - தலா 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
பச்சை மிளகாய் - 4,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு - 1 பல்.

செய்முறை :
முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், சோம்பு, தனியா தூள், பூண்டை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், முட்டைகோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
இதனுடன் அரைத்த ப.மிளகாய், சோம்பு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
சுவையான கோஸ் குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் 65 செய்வது செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - கால் கிலோ
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை:
பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
அவற்றுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அவற்றோடு சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
இறுதியில் பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான பன்னீர் 65 ரெடி.
பன்னீர் - கால் கிலோ
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை:
பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
அவற்றுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அவற்றோடு சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
இறுதியில் பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான பன்னீர் 65 ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன். இத்தகைய டிராகன் சிக்கனை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கையளவு
வெங்காயம் - 1
வெங்காயத் தாள் - சிறிதளவு
வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)

செய்முறை
இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!
எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கையளவு
வெங்காயம் - 1
வெங்காயத் தாள் - சிறிதளவு
வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!
இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேப்பகிழங்கு - கால் கிலோ
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - 1\4 தேக்கரண்டி
சின்னவெங்காயம் - 1 கைப்புடி அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சின்னது - 2
பூண்டு பற்கள் -5
புளி கரைசல் - சிறு நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைசல் தயார் செய்யவும்

செய்முறை :
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மண் சட்டியை அடுப்பில் வைத்து சட்டி நன்கு காய்ந்ததும் அதில்நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வெட்டி வைத்துள்ள சேப்பகிழங்கை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.
அடுத்து அதனுடன் புளி கரைசல் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடங்கள் மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
சேப்பகிழங்கு - கால் கிலோ
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - 1\4 தேக்கரண்டி
சின்னவெங்காயம் - 1 கைப்புடி அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சின்னது - 2
பூண்டு பற்கள் -5
புளி கரைசல் - சிறு நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைசல் தயார் செய்யவும்
தேங்காய் பால் - 150 மி.லி

செய்முறை :
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மண் சட்டியை அடுப்பில் வைத்து சட்டி நன்கு காய்ந்ததும் அதில்நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வெட்டி வைத்துள்ள சேப்பகிழங்கை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.
அடுத்து அதனுடன் புளி கரைசல் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடங்கள் மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
சுவையான சேப்பகிழங்கு புளிக்குழம்பு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், பூரி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான முட்டை பட்டாணி பொரியல் ரெடி.
முட்டை - 5
பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான முட்டை பட்டாணி பொரியல் ரெடி.
சப்பாத்திக்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






