search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சோயா வெஜிடபிள் புலாவ்
    X
    சோயா வெஜிடபிள் புலாவ்

    சோயா வெஜிடபிள் புலாவ்

    காய்கறி மற்றும் சோயா சேர்த்து தயாரிக்கப்படும் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 2 கப்,
    சோயா உருண்டைகள் - அரை கப்,
    கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - அரை கப் ( பொடியாக நறுக்கி கொள்ளவும்)
    பட்டாணி - சிறிதளவு
    வெங்காயம் - 100 கிராம்,
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - அரை கப்,
    எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

    சோயாவைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

    அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.

    அடுத்து மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும்.

    அடுத்து இதில் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 5 நிமிடம் 'சிம்"மில் வைத்து இறக்கவும்.

    சத்தான சுவையான சோயா வெஜிடபிள் புலாவ் ரெடி.

    இதற்கு தொட்டுகொள்ள தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×